Tuesday 12 August 2014

தக்காளி குருமா!!!


எங்க வீட்டில் செய்யும் இந்த குருமா எனக்கு மிகவும் பிடிக்கும்... இது இட்லி, தோசைக்கு சூப்பரான Combination...

இதில், வெங்காயம் + தக்காளியினை கண்டிப்பாக நீளமாக வெட்டி கொள்ள வேண்டும். அதே மாதிரி வெரும் சோம்பு மட்டுமே சேர்க்க வேண்டும்.  காரத்திற்கு பச்சைமிளகாய் + சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தக்காளி - 4
  .  வெங்காயம் - 2 பெரியது
  .  பச்சைமிளகாய் - 4
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .  தேங்காய் - 2 துண்டுகள்
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  கசகசா - 1/2 தே.கரண்டி (விரும்பினால்)

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி


செய்முறை :
.  வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைகக்வும். பொடியாக நறுக்க வேண்டாம்.)

.  கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

.  இஞ்சி பூண்டு சிறிது வதங்கியதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


.  பிறகு இதில் நீளமாக அரிந்த தக்காளியினை சேர்த்து வதக்கவும்.

.  தக்காளி வதங்கியதும் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


.  தேங்காய் + சோம்பு + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

.  இத்துடன் 2 - 3 கப் தண்ணீர் + அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  சுமார் 6 - 8 நிமிடங்கள் கழித்து குருமா நன்றாக கொதித்த பிறகு கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கொள்ளவும்.


.  சுவையான தக்காளி குருமா ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.