Saturday 16 October 2021

அகஸ்தியர் வாக்கு!!!

அகத்தியர் மந்திர வாள்
என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும்
வெல்லலாம்.

(2) "மசி, நசி" என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.

(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.

(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்
ஓடும்.

(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்
வசியமாகும்.

(7) "வசி, வசி" என்றால் பீடைகள்
விலகும்.

(8) "மசி, மசி" என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.

(9) "அசி, அசி" என்றால்கேட்பவை
அமோகமாக பெருகும்.

(10) "உசி, உசி" என்றால் கேட்பவை
யாவும் ஒழிந்து போகும்.

(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்
அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.

(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"

(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"

(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"

(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"

(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"

(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!
ஸ்தம்பய!"

(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!
ஆகர்ஸ்ய!"

(8) உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்
உச்சாடய! உச்சாடய!"

(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்
சிவசிவ!"

(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவ
ஓம்!"

(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்
மசி நசி நசி மசி"

(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்
சூஷ்மூநாயா நமக"

மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று.....

என்றும் சிவ பணியில்

உலக சிவ சித்தர்கள்

Thursday 7 October 2021

சஸிவிலாஸ் டானிக்!!!

உங்கள் குழந்தையை அடிக்கடி தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள் ஒரு நிமிடம்..

படத்தில் இருக்கும் #சசிவிலாஸ் எனும் ஆயூர்வேத டானிக் நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அபூர்வ மருந்தாகும் பருவநிலை மாற்ற காலங்களில் இரண்டு பாட்டில்கள் மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் அடுத்த ஓர் ஆண்டுக்கு இருமல் சளி காய்ச்சல் என மருத்துவமனை பக்கமே போகதேவையில்லை 120 ஆண்டுகால பழமையான ஆயூர்வேத டானிக் இந்த சசிவிலாஸ்
1 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பருகலாம் இரண்டு ஸ்பூன் டானிக் கால் டம்பளர் நீருடன் கலந்து கொடுக்கவும் 200ரூ விலையில் கிடைக்கிறது

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.



Friday 20 August 2021

ஹோரை ரகசியம்!!!

🔯நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.

🔯ஹோரை பலன்

ஹோரை கிரகங்களுக்கும்​, மனிதனுக்கும் உள்ள தொடர்பு:

🔯1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு​நொடிப்பொழுதும் கழிகிறது!

🔯2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும்​, நிகழ்வுகளும்​ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக​இருக்கிறது​.

🔯3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்​" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில்​வெளிப்பட்டு விளங்குகிறது​!

🔯4. மனிதனது மனநிலைகளுக்கும்​, சூழ்நிலைகளின்​தன்மைகளுக்கும்​, ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு​இருக்கிறது​!

🔯5. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே​நிகழ்வுகளை​, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன​!!

🔯6. ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து​பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை நிகழவே​நிகழாது​!

🔯7. கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து​மனிதனது​, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம்​மனிதனை தொடர்பு கொள்கிறது!

🔯மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று

🔯1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும்​கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக​வேண்டும்​!
🔯2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு​உண்கிறான்​!
🔯3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்​!
🔯4. ஆனால், ஒரு நாளைக்கு 21,600 தவவைக்கும்​மேலான எண்ணிக்கையில் சுவாசிக்கிறான்​!!
🔯5. எனவே, மனிதன் கோள்களின் கதிர் அலை (Ray's)கள் நிரம்பியுள்ள​, காற்றினை சதா மூக்கினால்​சுவாசித்த வண்ணம் இருக்கின்றான்​!
🔯6. "மனிதனை" இயக்குவது மனம்!
🔯7. மனதினை இயக்குவது சுவாசிக்கும் காற்று!
🔯8. காற்றினை இயக்குவது காலம்!
🔯9. காலத்தினை இயக்குவது கால கிரகங்கள்
🔯10. கிரகங்களை இயக்குவது "பரம்பொருள்!"
🔯11. பரம்பொருளுக்கும்​, மனிதனுக்கும் இடையில்​எத்தனை விதவிதமான பாலங்கள் 

🔯ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்:
🔯1. காலத்தினை வருடம், மாதம், வாரம், ஹோரை என்று​நான்கு பெரும் பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது​!
🔯2. இதில் வருடாதிபதியின் பலம் 25% ஆகும்!
🔯3. மாத அதிபதியின் பலம் 50%.
🔯4. வார அதிபதியின் பலம் 75%.
🔯5. ஹோரா அதிபதியின் பலம் 100%.
🔯6. எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகிய நால்வரில் ஹோரா அதிபதியே​அதிபலம் பெற்று விளங்குகிறார்​.
🔯7. இதிலிருந்து ஹோரைதான் அதிக வலிமை​பொருந்தியது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

🔯வருட மாத வார ஹோரா
அதிபதி 25% அதிபதி 50% அதிபதி 75% அதிபதி 100%

🔯8. ஹோரா கிரகம் தான் 1 மணி நேரத்தின் CM போன்றவர். அவர் வைப்பதுதான் சட்டம்!!
🔯9. ஒரு நாள் முதல்வர் போன்று 1 மணி நேர முதல்வர்​ஹோரா கிரகம் ஆவார்!

🔯ஹோரையின் குணங்கள்; செயல்கள்:
சூரிய ஹோரைகள்: (உத்தியோக ஹோரை)
அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல், அரசியல்​தலைவர்களை சிந்தித்தல், அரசு உதவியைத் தேடல், தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும்​, பெரியோர்களின் ஆதரவைப் பெறுதல், சிவ வழிபாடு, அரசு பதவி ஏற்றல், பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல், பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை​வகையிலான செயல்களை செவ்வனே செய்யலாம்.

🔯சந்திரன் ஹோரை: (அமுத ஹோரை)
★1. சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில்​விரைவும்​, வெற்றியும் உண்டாகும் ஹோரையாகும் இது! உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விசயம் பேசலாம், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம், "கற்பனையை" மூலதனமாக கொண்ட எந்த ஒரு​செயலிலும் ஈடுபடலாம்!
★2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையை​தேர்ந்தெடுக்கலாம்​!
★3. அம்மாவசையன்றும்​, மறுநாள் பிரதமை அன்றும் சந்திர​ஹோரையை தவிர்க்கவும்​! தேய்பிறை சந்திர ஹோரையை​தவிர்ப்பது நலம்!

🔯செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும் ஹோரை)

★1. கடன் வாங்குதல் கூடாது. கடனை திருப்பி​கொடுக்கலாம்​! எந்த ஒரு காரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும்​ஓரையாகும்​! இது ஒரு காரசாரமான சண்டை​கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
★2. அனைவரும் அனைத்திலும் உஷார்! செவ்வாய் போர்கிரகம்!
★3. புதிய முயற்சிகளை கட்டாயம் தவிர்க்கவும்​.

🔯புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)

★1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், கல்வி, படிப்பு, கல்வி​தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஓரையில்​செய்யலாம்​!
★2. கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல் நூல்​ஆராய்ச்சி போன்றன்யாவும் புதன் ஓரையில்​வெற்றிகரமாக செய்யலாம்!
★3. வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான​காரியங்களில் ஈடுபடலாம்!
★4. திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து​செயல்படலாம்​!
★5. எல்லா சுயகாரியங்களையும் புத ஓரையில் புஷ்டியாக​வெற்றியாக செய்யலாம்!
★6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஓரைஇது!

🔯குரு ஹோரை: (தன ஹோரை)

★1. இது 100% சுப ஒரையாகும்! குரு ஓரையில் எல்லா​வகையான சுபகாரியங்களையும் செய்யலாம்!
★2. கல்வி, வித்யாரம்பம்​, ஆலயம் வழிபடுதல், திருமணம்​செய்தல்​, ஆடை ஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
★3. எல்லா விதங்களிலும் சுபத்தையும்​லாபத்தையும்​அளிப்பது குரு ஓரையாகும்!

🔯சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)

★1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை​இயற்றுதல்​, காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல் செய்ய உகந்தஓரை, பணம் கொடுக்கக் கூடாது!
★2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார​ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு​அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடக்க விழா (படபூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதிய Account ஏற்படுத்துதல்​, (A/c Open பண்ணுதல்).
★3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
★4. விருந்தினராக செல்லலாம்! பெண் பார்க்க சென்றால்​வெற்றி உறுதி!
★5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்த ஓரை சுக்கிர​ஓரையாகும்​!

🔯சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)

★1. சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட​கூடாது​! மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம் உண்டாக்கும்​!
★2. கண்டங்கள், விபத்துக்கள்​, பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி​ஓரையில்தான் நிகழும்! உஷார்!
★3. இந்த ஓரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே​சாலச்சிறந்தது​!
*4. Switch Off செய்யப்பட்ட மொபைல் மாதிரி ஆகிவிட​வேண்டியதுதான்​!

🔯சுப ஹோரைகள்: (நைசர்க சுபர்கள்)

1. குரு
2. சுக்கிரன்
3. புதன்
4. சந்திரன்

🔯அசுப ஹோரைகள்: (நைசர்க பாபிகள்)

1. செவ்வாய்
2. சனி

🔯சூரியன் அசுப ஹோரை அல்ல!

கிழமைகளுக்கும் ஹோரா கிரகத்திற்கும் என்ன​ உறவுமுறை என்பதனை பொருத்தே ஹோரையின்​செயல்பாடுகள் அமைகிறது!

🔯ஹோரையின் நுட்பங்கள்:
கிரகங்களின் நட்புகள் (Friends)

🔯சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
🔯சந்திரன் = குரு, செவ்வாய், சனி
🔯செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
🔯புதன் = சுக்கிரன், சனி
🔯குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
🔯சுக்கிரன் = சனி, புதன்
🔯சனி = சுக்கிரன், புதன்

🔯கிரக சமம் (Nutral) (No Friends)

🔯சூரியன் = புதன்
🔯சந்திரன் = செவ்வாய்
🔯செவ்வாய் = சுக்கிரன்
🔯புதன் = சூரியன்
🔯குரு = சனி
🔯சுக்கிரன் = செவ்வாய்
🔯சனி = குரு

🔯கிரக பகை விவரம்

🔯சூரியன் x சுக்கிரன், சனி
🔯சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
🔯செவ்வாய் x புதன், சனி
🔯புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
🔯குரு x சுக்கிரன், புதன்
🔯சுக்கிரன் x சூரியன், சந்திரன்
🔯சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்

🔯குறிப்பு:

வாராதிபனும்​, ஹோராதிபனும் ஒருவருக்கொருவர்​பகையாக இருந்திடில் அந்த ஹோரை சரியாக​செயல்படாது​!

🔯உதாரணம்:

ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரை தவறைச் செய்யும்! காரணம் சூரியனும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர்​பகைவர்கள்​.

🔯சூ x சுக்

🔯தோல்வி தரும் கிரக ஓரைகள்:

🔯கிழமைகள் தோல்விகள்

✳ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை
தரும்.
✳திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
✳செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.
✳புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக
செயல்படாது.
✳குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
✳வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
✳சனிக்கிழமை சந்திர ஓரை தவறை
செய்யும்! உஷார்!

🔯கிழமைகள் ஆகாத ஓரைகள்

✳ஞாயிறு சுக்கிரன், சனி
✳திங்கள் சுக்கிரன், புதன், சனி
✳செவ்வாய் புதன், சனி
✳புதன் குரு, சந்திரன், செவ்வாய்
✳வியாழன் சுக்கிரன், புதன், சந்திரன்
✳வெள்ளி குரு, சந்திரன், சூரியன்
✳சனி சந்திரன், செவ்வாய், சூரியன்

🔯புதன் கிழமை குரு ஓரை நடக்கும்போது குரு சுப ஓரைஎன்று எதையும் செய்யலாகாது​! இவ்வாறு ஹோரா​சாஸ்திரத்தில் இன்னும் பலவித நுணுக்கங்கள்​, நுட்பங்கள்​உள்ளன​!! இனி அதையும் கொஞ்சம் பார்க்கலாம்!

🔯கடுமையான பாதிப்பை தரும் கிரக ஓரைகள்:

🔯பாபகிரகங்களின் கிழமைகளில் (ஞாயிறு, செவ்வாய், சனி) பகைவர், பாபிகளின் ஓரைகள் பயங்கரமான​பாதிப்புகளை தந்து விடுகிறது!

🔯கிழமை ஓரை

ஞாயிறு x சனி
செவ்வாய் x சனி
சனி x செவ்வாய், சூரியன்

🔯ஞாயிற்றுக்கிழமையில் வரும் சனி ஓரையும், 
🔯செவ்வாய்​கிழமை வரும் சனி ஓரியும் பொல்லாத ஒரையாகும்! இதன்​கொடுமையை அனுபவித்தவரிகளிடம் தான் கேட்டறிய​வேண்டும்​!
🔯சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஓரைகள்​கடுமையான பாதிப்புகளை தந்து விடுகிறது. அதிலும்​சனிக்கிழமையில் செவ்வாய் ஓரை மிக கடுமையாக​இருக்கும்​!

🔯கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள்:

🔯கிழமைகள் ஓரைகள்
ஞாயிறு சூரியன், 
புதன், குரு, 

🔯சந்திரன்
திங்கள் சந்திரன்,
 குரு, சூரியன்
செவ்வாய் குரு,
 சந்திரன், சுக்கிரன், சூரியன்

🔯புதன் சுக்கிரன், புதன், சூரியன்

🔯வியாழன் குரு, சனி, சந்திரன், சூரியன்

🔯வெள்ளி சுக்கிரன், புதன்

🔯சனி குரு, சுக்கிரன், புதன்

✳பிறந்த ஹோரை பலன்:

★1. ஒருவர் எந்த ஓரை நடக்கும்போது பிறந்தாரோ அதுவே​அவரின் ஜென்ம ஒரையாகும்!
★2. பிறந்த ஓரை கிரகம் அவருக்கு எப்போதும் நன்மையே​செய்யும்​!
★3. பிறப்பு ஓரை கிரகத்தின் நட்பு கிரக ஓரைகளும் நன்மை​செய்யும்​. பகை ஓரை கிரகங்கள் தீமை செய்யும்.
★4. பிறந்த ஓரை கிரக சுபாவகுனம் அச்சாதகரிடத்தில்​காணப்படும்​.
★5. ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு​பிறந்தால் அப்போது நடக்கும் புதன் ஓரையே அவரது பிறப்பு​ஒரையாகும்​. எனவே, புதன் அவருக்கு சுபத்தையே​செய்யும்​.

✳சிறப்பு விதிகள்:

★1. யாவருக்கும் "ஜென்ம லக்னாதிபதியான​" கிரகத்தின்​ஓரை எப்போதும் நன்மையே செய்யும்!
★2. மேலும் இந்த லக்னாதிபதியின் ஹோரையில் எந்தசெயலில் ஈடுபட்டாலும் வெற்றி உறுதி! பழம் நழுவி பாலில்​விழுந்தாற்போல​!
★3. யோகி, இந்து லக்னாதிபதியாக வருகின்ற கிரக​ஓரைகளும் சுபத்தையே செய்யும்!
★4. ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்று நல்ல நிலையில்​இருக்கின்ற கிரக ஓரையும் எப்போதும் சுபத்தையே​செய்யும்​!
★5. லக்னத்தின் 6, 18, 12, பாதகாதிபதிகள் ஓரை நன்மை​செய்யாது​!
★6. நீச்சம், அஸ்தமனம், பகை, வக்கிரம் பெற்ற கிரகஓரைகள் சுபத்தை செய்யாது!
★7. தசா புத்தியாக எந்த கிரகமோ! அந்த கிரகங்களின்​ஹோரையில்​, அந்த தசாபுத்தி பலன் நடைமுறைக்கு​வருவதை அனுபவத்தில் காணலாம்!
★8. உதாரணமாக சூரிய தசை புதன் புத்தி எனில் சூரியன்​மற்றும் புதன் ஓரைகளில் பலன்களை எதிர்பார்க்கலாம்​! இது நன்மை செய்யும் தசாபுத்தி எனில் நன்மை! தீமைதரும் தசாபுத்தி எனில் அந்த கிழமை, ஓரைகளில்​எச்சரிக்கையாக இருந்திடலாம்​!
★9. சூரிய தசா/புத்தி நடப்பவர்களுக்கு சூரிய ஓரைகளில்​தாம் பலன் (+/-)கள் நடக்கும்.
★10. சந்திரன் தசா/புத்தி நடப்பில் உள்ளவர்களுக்கு சந்திர​ஓரையில் தான் பலன்கள் நடக்கும்.
★11. இதே போல மற்ற கிரக தசாபுத்திகளில் அந்த கிரக​ஓரைகளில் அதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்!
★12. ராகு தசா​/​புத்தியில் ராகு நின்ற ராசியாதிபதி கிரக​ஓரையிலும் பலன் தரும்!
★13. கேது தசா​/​புத்தியில் கேது நின்ற ராசியதிபதியின்​கிரக ஓரையிலும் பலன் தரும்!
★14. பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது​சேர்க்கை பெற்றிருப்பின் சூரியன், சந்திரன் ஓரைகள்​சரியாக பலன் தராது!

★★★★★★★★★★★★★★★★★★

🔯★வணக்கம் தங்கள் ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்து தற்போது நடக்கும் தசா புத்தி & கோட்சார பலா பலன் போன் மூலமாக கூறப்படும் தட்சணை  யாக 250 /= ரூபாய் செலுத்தவும் G pay number 9842628093 

🔯Bank. UCO 
Account Name: VELLINGIRY KP
Account Number: 22170110013045
IFSC Code: UCBA0002217
Branch : 2217  GOBICHETTY PALAYAM
GOBICHETTYPALAYAM,NO22
MODACHUR RD, ERODE UCO BANK

🔯★ஜாதகர் பெயர் . ஆண் / பெண்  + பிறந்த தேதி + பிறந்த நேரம் + பிறந்த ஊர் பெயர் அனுப்பி வைக்கவும்.
        
 🔯★தொகையை  அக்கவுண்டிற்கு செலுத்தி விட்டு ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் 9842628093 whatsapp க்கு.

KP.வெள்ளிங்கிரி. BE.Ph.D(Astro )
Whatsapp &c.Contact 9842628093

🔯அருமையான தகவல் பகிரவும. நண்பர்களே.அனைவருக்கும் பயன்படட்டும் வாழ்த்துக்கள் 
வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏

Thursday 15 July 2021

சுவாஸம்!!!

சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன. இதைப்பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை. நம்முள் சுவாசம் நடக்கும் அளவு

அமர்ந்திருக்கும் போது
12 அங்குலம்
நடக்கும் போது
16 அங்குலம்
ஓடும்போது
25 அங்குலம்
உறங்கும் போது
36 அங்குலம்
உடலுறவு கொள்ளும்போது
64 அங்குலம்

சுவாசம் குறைந்தால் ஏற்படும் நன்மைகள்

11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்

10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்

9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்

8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்

7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்

6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்

5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்

4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்

3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.

2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்

1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்

உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்
ஞாயிறு, செவ்வாய், சனி
இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

வெள்ளி, திங்கள், புதன்
இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்
வியாழக்கிழமை பூர்வபட்சம்
(வளர்பிறை)
சந்திரகலை ஓட வேண்டும்

அமரபட்சம் (தேய்பிறை)
சூரிய கலை ஓட வேண்டும்.

இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். சனிக் கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம்
ஓட வேண்டும்.

சுவாசம் மாற்றி நடந்தால்
(சூரிய கலை ஓட வேண்டிய நேரத்தில் சந்திர கலையும், சந்திர கலை ஓட வேண்டிய நேரத்தில் சூரிய கலையும் ஓடினால் அதன் விளைவுகள்)

ஞாயிறு அன்று சந்திரகலை ஓடினால்
இருமல் உண்டாகும்

திங்கள் அன்று சூரியகலை ஓடினால்
ஜலதோஷமும்,
உறவினர்களுக்கு கேடும்
உண்டாகும்
செவ்வாய் அன்று சந்திரகலை ஓடினால்
காய்ச்சல், வீண் பிரச்சனைகள் உடற்சோர்வு உண்டாகும்
புதன் கிழமை சூரியகலை ஓடினால்
தலைகுத்தல் உண்டாகும்
வியாழக்கிழமை அன்று 
சுவாசம் மாறிஓடினால்
உடல்வலி உண்டாகும்
வெள்ளி சூரியகலை ஓடினால்
கண், காது நோயும், வெளியூர் செல்ல தடையும் உண்டாகும்.
சனிசந்திரகலை ஓடினால்
பேதி உண்டாகும்.

Saturday 15 May 2021

ஆயுர்வேத மருந்து!!!

படத்தில் உள்ள #சசிவிலாஸ் எனும் ஆயூர்வேத மருந்து 
நோய் எதிர்பு ஆற்றலை அதிகப்படுத்தும் அபூர்வ மருந்தாக திகழ்கிறது 

வைரஸ் நோய்க்கு காரணமான நுரையீரல் சளியை வெளியேற்ற உதவுகிறது சளி உறையும் தன்மைக்கு முற்றுபுள்ளி வைக்கிறது 
சளி வெளியேற காரணியாக செயல்படுகிறது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது 

120 வருட பழைமையான 
இம்மருந்து சென்னை ஆயூர்வேதாஷ்ரமம் எனும் ஆயூர்வேத கம்பெனியால் தயாரிக்கப்படுகிறது 

ஒருவயது குழந்தைகள் முதற்கொண்டு இம்மருந்தை தரலாம் கால் டம்பளர் தண்ணீரில் 3 முதல் 5 மில்லிவரையிலும் (வயதுக்கு தகுந்தார்போல்) பெரியர்வகள் 10 மில்லி என இரண்டு வேளை குடித்து வரவும் 4" 5 தினங்களில் கெட்டிபட்ட சளி வெளியேறுவதை கண்கூட காணலாம்

இந்த மருந்து அனேக சித்த ஆயூர்வேத கடைகளிலும் கிடைக்கும் டானிக் ஆகும் 

இதன் MRP விலை 195 ரூ மட்டுமே 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பாதுகாத்து கொள்வோம்

பொதுநலன் கருதி

சித்தமருத்துவர்
வெ.பழனியப்பன்
கோபிசெட்டிபாளையம்


Monday 3 May 2021

மூட்டுவாத மாத்திரை!!!

#மூட்டுவாத மாத்திரை: 

பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ்,சயாடிகா இவை முற்றிலும் குணமாகும்.
         
             பாலில் அவித்து உலர்த்திய            அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை உப்பு  -50 கிராம்.
தாளக பற்பம்         -5 கிராம்
லிங்க செந்தூரம்  -5 கிராம்.
சங்கு பற்பம்.           -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்,வாத வலி மாத்திரை,வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்: 
       
               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்  முற்றிலும்  குணமாக்கும் அற்புத மருந்து இது.
               தண்டுவட எலும்பிடை வீக்கம், பிதுக்கம், பேராசன நரம்பு தாபிதம், சகன வாதம், தண்டக வாதம், இடுப்பு தண்டுவட எலும்பு இசங்கல், தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பின்பும் உள்ள தண்டுவட வலியை குணமாக்கும்.
               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.#தொடர்புக்கு 9942618843:  7806803801.

Wednesday 14 April 2021

கஷாயங்கள்!!!

#கஷாயம்_வாரம் - தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்

#திங்கட்கிழமை: ☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

#செவ்வாய்க்கிழமை: ☕ கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

#புதன்கிழமை: ☕ தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

 
#விழயாகிழமை: ☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

#வெள்ளிக்கிழமை: ☕ வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

#சனிக்கிழமை: ☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

#ஞாயிற்றுக்கிழமை: ☕
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.-

Tuesday 30 March 2021

மூலிகை!!!

அடடடா...!
இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!

*"வெப்பம் + இல்லை :  வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"*

*"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"*

*"அகம் + தீ :  அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"*

*"சீர் + அகம் : சீரகம்… More அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"*

*"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.!  காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"*

*"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"*

*"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"*

*"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"*

*இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!*

"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!

அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!"

Tuesday 16 March 2021

மூக்கிரட்டை கீரை!!!

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
நன்றி:
மேலும் தொடர்புகொள்ள:
25 ஆண்டு மருத்துவப் பணியில் மக்கள் சேவகன்
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.
கிளினிக்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க.


Sunday 14 March 2021

கோவில்களில் வாங்கிய கயிறு!!!

#கோவில்களில்தரும் #கயிற்றை #எத்தனைநாள் #கட்டியிருக்கலாம்?

♥🌟 கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றன. 

♥🌟 இன்னும் ஒருசிலர; தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார;ப்போம்.

♥🌟 காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார;கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது. 

#எத்தனை #முடிச்சு #போடவேண்டும்?

♥🌟 கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன. 

#பலன்கள் :

👉 பயத்தை போக்கும்.

👉 தைரியத்தை தரும். 

👉 கர;ம வினைகளை அழிக்கும். 

👉 விபத்துகளிலிருந்து காக்கும்.

👉 ஏவல், பில்லி, சு னியம் செய்வினை போக்கும்.

👉 நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்.

👉 தீயகனவுகளை தோன்றாமல் செய்யும். 

👉 கடன்கள் தீரும். 

👉 பைரவா அருளை பெருக்கும்.

அதை எந்த கையில் கட்டவேண்டும்?

♥🌟 ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

#எத்தனை #நாள் #கட்டவேண்டும்?

♥🌟 இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர;கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார;கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர;நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார; காலிலும் படும்படி போடக்கூடாது. 

♥இது உங்கள் உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும்!...

Friday 15 January 2021

இயற்கை மருந்து!!!

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.,இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.