Thursday 15 July 2021

சுவாஸம்!!!

சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன. இதைப்பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை. நம்முள் சுவாசம் நடக்கும் அளவு

அமர்ந்திருக்கும் போது
12 அங்குலம்
நடக்கும் போது
16 அங்குலம்
ஓடும்போது
25 அங்குலம்
உறங்கும் போது
36 அங்குலம்
உடலுறவு கொள்ளும்போது
64 அங்குலம்

சுவாசம் குறைந்தால் ஏற்படும் நன்மைகள்

11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்

10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்

9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்

8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்

7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்

6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்

5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்

4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்

3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.

2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்

1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்

உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்
ஞாயிறு, செவ்வாய், சனி
இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

வெள்ளி, திங்கள், புதன்
இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்
வியாழக்கிழமை பூர்வபட்சம்
(வளர்பிறை)
சந்திரகலை ஓட வேண்டும்

அமரபட்சம் (தேய்பிறை)
சூரிய கலை ஓட வேண்டும்.

இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். சனிக் கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம்
ஓட வேண்டும்.

சுவாசம் மாற்றி நடந்தால்
(சூரிய கலை ஓட வேண்டிய நேரத்தில் சந்திர கலையும், சந்திர கலை ஓட வேண்டிய நேரத்தில் சூரிய கலையும் ஓடினால் அதன் விளைவுகள்)

ஞாயிறு அன்று சந்திரகலை ஓடினால்
இருமல் உண்டாகும்

திங்கள் அன்று சூரியகலை ஓடினால்
ஜலதோஷமும்,
உறவினர்களுக்கு கேடும்
உண்டாகும்
செவ்வாய் அன்று சந்திரகலை ஓடினால்
காய்ச்சல், வீண் பிரச்சனைகள் உடற்சோர்வு உண்டாகும்
புதன் கிழமை சூரியகலை ஓடினால்
தலைகுத்தல் உண்டாகும்
வியாழக்கிழமை அன்று 
சுவாசம் மாறிஓடினால்
உடல்வலி உண்டாகும்
வெள்ளி சூரியகலை ஓடினால்
கண், காது நோயும், வெளியூர் செல்ல தடையும் உண்டாகும்.
சனிசந்திரகலை ஓடினால்
பேதி உண்டாகும்.