Friday 30 November 2018

கிரையபத்திரம்!!!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டியவைகள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்க ப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

For Old Age!!!

   Old Age for GoldeN Tips :

Acid phos 1m1Dose weekly Kali phos 200 Daily 1Dose 5phos 4tab 2time

Thursday 29 November 2018

Sprain Oil- சுளுக்கு தைலம்!!!

44 வகை சுளுக்குகளை தீர்க்கும் 'சுளுக்கு தைலம்' வீட்டிலேயே தயாரிக்கும் முறை ;
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. நல்லெண்ணெய் ...ஐம்பது மிலி 
2. புங்க எண்ணெய் ....ஐம்பது மிலி
3. புளிய இலை...... ஒரு பிடி 
4. வெற்றிலை அரைத்த விழுது .... ஒரு தேக்கரண்டி

5. பூண்டு - ஒரு தேக்கரண்டி
6. கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
7. ஓமம்- ஒரு தேக்கரண்டி 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
வாணலியில் இரண்டு எண்ணெய்களையும் ஊற்றி சிறு தீயில் சூடேற்றி....
அத்துடன் ஒவ்வொரு பொருளாகப் போட்டு கொதிக்க வைத்து.....
கடைசியாக ஓமம் போட்டுப் பொரிந்து வந்ததும் தைலமாக இறக்கி ....
பச்சை கற்பூரம் ...... ஐந்து கிராம்
தூளாக்கிப் போட்டுக் கரைந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவைத்து சேமிக்கவும் .
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
இந்த சுளுக்கு தைலத்தை......
சுளுக்குப் பிடித்துள்ள இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து......
வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர......
"நாற்பத்தி நான்கு வகை சுளுக்குகளும் குணமாகும்"....!!

Tuesday 27 November 2018

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிந்துகொள்வது எப்படி?!!!

*👭                      👭*

*கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிந்துகொள்வது எப்படி?*

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர்.

*குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு:*

வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

*பெண்டுலம் ட்ரிக்:*

உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

*எடை ஜாஸ்தியா இருக்கா?*

சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம். குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

*புளிப்பா? இனிப்பா?*

உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

*சிவப்பு முட்டைக்கோஸ் சோதனை:*

சிவப்பு முட்டைக்கோஸ் வாங்கி, அதனை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் காலையில் முதன் முதலில் வெளியேற்றிய சிறுநீரை, அதற்கு சரிசமமாக ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றிய பின், அதன் நிறமானது பிங்க் அல்லுது சிவப்பு நிறத்தில் மாறினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே ஊதா நிறத்தில் மாறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

*பேக்கிங் சோடா சோதனை:*

காலையில் வெளியேற்றிய சிறுநீரை ஒரு கப்பிலும், மற்றொரு கப்பில் பேக்கிங் சோடாவையும் வைத்துக் கொள்ளவும். பின் சிறுநீரை பேக்கிங் சோடாவில் ஊற்றும் போது, நுரை போன்று பொங்கினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே எந்த ஒரு வினைபுரியாமல் இருந்தால், பெண் குழந்தை என்று அர்த்தம்

Saturday 24 November 2018

உரை மருந்து!!!

உரை மருந்து" மறந்துட்டோமே!!!
.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. 
.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
.
மறந்துட்டோமே "உரை மருந்து"
.
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், "ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை". 
.
இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம். 
.
நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
.
அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
.
உரை மருந்து என்றால் என்ன?
.
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
.
எவை எவை உரை மருந்தாகிறது?
.
1.வசம்பு
2.கடுக்காய் 
3.மாசிக்காய் 
4.சித்தரத்தை 
5.ஜாதிக்காய் 
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
.
எப்படி உபயோகப்படுத்துவது?
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
.
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
.
எப்போது கொடுக்க வேண்டும்?
.
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
.
உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்...
.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.
.
வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜூரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
.
கடுக்காய்:
.
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
.
சுக்கு:
.
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
.
சித்தரத்தை:
.
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
.
ஜாதிக்காய்:
.
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
.
மாசிக்காய்:
.
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
.
வசம்பு :
.
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
.
கார மருந்து என இதற்குப் பெயர்.
.
அதனால் உரைத்த மருந்தை சிறுகச் சிறுக புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.

Cancer புற்றுநோய் மருந்து

Wednesday 21 November 2018

Kibera Mudra!!!

குபேர முத்திரை 

குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது.

செய்முறை :

கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொட வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும்.

தரையில் விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக் கூடாது.

பலன்கள் :

நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.

மூக்கில் அடைப்பு, குளிரால் மூச்சுவிட முடியாதது, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.

குழந்தைகள் ஒரு மாதத்துக்கு 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, நினைவுத்திறன் அதிகரிக்கும். வளர் இளம் பருவத்தினர் செய்ய, நல்ல எண்ணங்கள் உருவாகும்.

மூளையை ஆல்ஃபா நிலைக்குக் கொண்டுசெல்வதால், மனதில் எண்ணும் காட்சிகள் ஆழ்மனதில் பதியும்; நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்; உயர்ந்த லட்சியங்களை அடைய உறுதுணையாக இருக்கும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும்

Knee pain medicine

பலநாள் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த எனது தாயாருக்கு அப்போது வயது 64!!
அப்பல்லோ மருத்துவமனை, ராமசந்திரா.மியாட்டென அலைந்து திரிந்து கடைசியில் வயதாகிவிட்டது கால் மூட்டிலுல்ல குழம்பு வற்றி தேய்வு ஏற்பட்டுயிருப்பதால் மூட்டு மாற்று அறுவசிகிச்சை அதற்க்கு 5 லட்சம் செலவு 6 மாதம் ஓய்வு என பய்பாஸ் சீகிச்சையைவிட ஓவரா சொல்லிட்டாங்க
தற்ச்செயலா ஒரு உறவினர் பாட்டிக்கிட்ட பேசியபோது அவங்க சொன்ன நாட்டு வைத்தியம் நச்சுகொட்டை இலையை(கீரை) வதக்கியும், சமைத்தும் சுடச்சோற்றில் கலந்து ஒருமாதம் நாள்விட்டு அல்லது வாரமிருறை மூன்றுமுறை உட்கொண்டு மட்டுமல்லாமல், வாரத்திற்க்கு இரண்டுமுறை மூட்டில் பத்துப்போட்டுவர! 5 லட்சரூபாய்த்தீர்வு இலவசமாக கிடைத்ததோடு! வலி வேதனை ஆப்ரேஷன் பின் படுக்கை போய்விட்டது,( இலையை நரம்பு நீக்கி சமைக்கவேண்டும்) இப்போது அம்மாவிற்க்கு வயது 69 என்னுடன் இருசக்கரவாகணத்தில் கூட ஏறி உட்கார்ந்து வருகிறார்கள் கோவிலுக்கும் வங்கிக்கும் நடந்தே செல்கின்றனர்!
பாருங்கள் நமக்கு இறைவன் கொடுத்த இயற்கை எளிய தீர்வை நாம் தெரிந்துகொள்ளாமல் எடுத்தவுடன் ஆங்கில மருந்தும்! சற்றே நமது நாட்டு மருத்துவத்தையும் முயற்ச்சித்துப்பார்ப்போமே!! குறிப்பு : நச்சுக்கொட்டை இலை செடி சிறிய அதன் மரத்துண்டை வெட்டி நட்டாலும் நமது தோட்டங்களிலேயே வளர்ந்துவிடுகிறது, என்னுடைய தோட்டத்திலும் வைத்து தற்போது மரமாக வளர்ந்துள்ளது!

Saturday 17 November 2018

மைசூர் ரசம்!!!

கல்யாண ரசம் | மைசூர் ரசம் கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். https://sandhiyastamilkitchen.blogspot.com/2018/11/kalyana-rasam.html To read the recipe in english https://www.sandhiyascookbook.com/2018/04/mysore-rasam-no-garlic-rasam-rasam.html

Friday 16 November 2018

Gout

When you get an old gouty subjects who has big toe joints and finger joints , and they are sore and inflammed every now and then , you might think that *KALI CARB* covers the case very suitably ; he is distrubed in just such wheather, he is pallid and sickly, his complaints comes on at 2 to 3 'o clock in the morning , he has the shooting pains. but these gouty patients are often incurable and if so, to undertake to cure them would be a dreadful calmity, because the aggravation would last so long .

If you give *KALI CARB* to one of these incurable cases in very high potency it will make your patient worse , and the aggravation will be serious and prolonged, but *30th* may be of great service .
*KALI IOD* when it is indicated in the gouty state , acts as a shooting and palliative remedy , but *KALI CARB* seems to be dreadful medicine to handle , _It is sharp and a two edge sword_ .

By Dr Vishal

Tuesday 6 November 2018

Bach Flowers

Chetan Majithia‎Bach Flower Therapy June 20 at 7:49 AM · Affirmations for the Bach Flower Remedies AGRIMONY I am at peace with myself. I show others who I really am. I am honest with myself and others. I enjoy my own company. I hold firm when in conflict. ASPEN I have all the courage I need. I open myself to life’s experiences. I have the inner strength to face the future. I know my world is a safe place. I am ready for excitement and adventure. BEECH I create well-being. I accept differences in others. I see everyone’s fundamental goodness. I let go of all feelings of judgement. I am gentle and good to myself. CENTAURY I meet my own needs. I am true to myself. I am in charge of my life. I stand up for myself. I value my strength of will. CERATO I trust my own thinking. I know what is right for me. I trust my own intuition. I hold myself in high esteem. I have the courage of my convictions. CHERRY PLUM I remain strong under extreme stress. I am calm and courageous. I choose to be balanced and stable at all times. I am as solid as a rock. I do what is right for me. CHESTNUT BUD I learn something new from everything I do. My past is a source of strength and energy. I watch and learn from others. I see things as they really are. I learn from my mistakes. CHICORY I love unconditionally. I respect the independence of others. I am worthy of everybody’s love. I have all the attention I need. I give without thought of return. CLEMATIS I am here now. I am involved in everything I do. I live every moment well. I bring my plans to fruition. My feet are firmly on the ground. CRAB APPLE I clean myself of unwanted substances. I deserve to be healthy. I treat myself with tenderness and care. I encourage my body to heal itself. I love myself. ELM I have total confidence. I let go of being a perfectionist. I am only responsible for the things I choose. I have the help I need. I let go of having to do everything. GENTIAN I confidently continue to do what is right. I know each experience is a valuable lesson. I create my own reality. I believe in ultimate success. I am determined to persevere. GORSE I have faith in life itself. I decide to be optimistic. I believe in myself. I have hope and confidence in the future. I look on the bright side. HEATHER I take care of all my own needs. I am a willing listener. I am always ready to help out. I love spending time on my own. I let go of being needy. HOLLY I am at one with the world. I open my heart to others. I radiate love, joy and happiness. I love to see others succeed. I deserve the love of others. HONEYSUCKLE I let go of old memories that hold me back. I come from my past and move to my future. I live in the present. I plunge into life. I welcome the future. HORNBEAM I have the energy I need. I am strong and fulfilled. I live my life effortlessly. I am awake and fresh. I get my life how I want it. IMPATIENS I have patience and understanding. I have all the time I need. I take time to appreciate others. I live my life calmly and gently. I take things slowly when I choose. LARCH I act with total confidence. I always expect to succeed. I am excited by every new challenge. I act with boldness and determination. I express myself creatively. MIMULUS I act with courageous and inner strength. I recognize each difficulty as an opportunity. I meet each challenge with my sense of humor. The world is my oyster. I can do anything. MUSTARD I am the source of light and strength. I have serenity and peace of mind. My heart sings. I reclaim my radiance and joy. OAK I am strong and energetic. I always give myself a break when I need it. I rest deeply. I am open and spontaneous. I let go of struggling so hard. OLIVE I use my energy in the best possible way. I recognize my own needs. I restore my own vitality and strength. I know my priorities in giving to others. PINE I let go of guilt and self-blame. I take responsibility for all that I do. I forgive myself for blaming myself. I always did the best I could. I am already completely good enough. I accept and approve myself. RED CHESTNUT I radiate peace and calm. I protect myself from the problems of others. I maintain my own psychic space. I expect positive outcomes. I send calm loving thoughts to those in need. ROCK ROSE My spirit lives. I’m ready for anything. I have unshakeable courage in a crisis. I am in touch with my inherent power. ROCK WATER I flow with my own natural rhythm. I always stay relaxed. I am adaptable and flexible. I look after myself well. I enjoy the pleasures of life. SCLERANTHUS I know what is right for me. I think clearly and decide easily. I act on my decisions confidently. I am clear and consistent. I always find elegant solutions. STAR OF BETHLEHEM I recovered from a past trauma. I am calm and soothed. I have inner peace. My energy flows smoothly. SWEET CHESTNUT I trust in life itself. I ask for all the help I need. I come out of the darkness and into the light. I open myself to changing and growing. VERVAIN I live my life effortlessly. I am relaxed, open and balanced. I am moderate in thought and action. I have tolerance for the opinions of others. I am free and spontaneous. I achieve much with quietness and gentleness. Vine I believe in the strength of my example. I respect the rights of others. I trust myself as I trust others. I encourage others to become strong and powerful. I am sensitive and compassionate. I am touch with my inner self. WALNUT I free myself from all negative influences. I follow my inner guidance. I’m ready for a change. I break through to fulfill my potential. I am blossoming. WATER VIOLET I enjoy being with others. I open myself to giving and receiving. I can have warm close loving relationships. I share my thoughts, my visions and my dreams. I express my love for others. WHITE CHESTNUT I am calm and serene. I bring myself to calmness and tranquility. From my quiet mind, answers emerge. I am at peace with myself. I develop my intuition. WILD OAT I create the opportunities I need. I have a strong sense of purpose. I have definite ambitions to fulfill. I follow my life direction. WILD ROSE I am alive with interest in life. I have my enthusiasm for everything I do. I sparkle with vitality. I have the spirit and joy of adventure. WILLOW I forgive others as I forgive myself. I let go of blame and bitterness. I see things in their true perspective. I take responsibility for my relationships. I see the best in others. I give my unconditional love and support. ( Affirmations for the Bach Flower Remedies by Hugh MacPherson )