# ஊறுகாய் பாட்டிலில் சில்வர் ஸ்பூன் போட்டு வைக்கக்கூடாது. அப்படிப் போட்டு வைத்தால், ஊறுகாய் விரைவில் கெட்டுப்போய்விடும்.
# ரஸ்னா, சர்பத் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
# பழைய வெள்ளி ஆபரணங்களைச் சில மணி நேரம் மோரில் போட்டுவைத்தால், பளிச்சென மாறிவிடும்.
# கண்ணாடி மேஜை கறையாக உள்ளதா? கடலை மாவு அல்லது டால்கம் பவுடரைத் தூவிப் பிறகு நன்றாகத் துடைத்துவிடுங்கள். கறை நீங்கிவிடும்.
# வாஷ்பேஸினில் கறை படிந்துள்ளதா? கொஞ்சம் வினிகரைத் தெளித்து சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவினால் பளபளக்கும்.
# வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வராது. தோலையும் எளிதில் உரிக்க முடியும்.
# பருப்புப் பொடியுடன் சிறிது கசாகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்பு, கூட்டு கெட்டியாக இருக்கும்.
# பொரியல் செய்யும்போது காரப்பொடிக்குப் பதிலாகத் தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை கூடுதலாக இருக்கும்.