Monday 28 December 2020

ராசிக்கு ஏற்ற பலன்!!!

இன்று ஒரு அருமையான பயனுள்ள தகவல் எல்லோரும் தங்கள் ராசிக்கு ஏற்ற பலனை பார்த்து தெரிந்து கொள்ளவும்
====
*சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்.. !!!*
******
🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :
*   மேஷம்
*   ரிஷபம்
*   மிதுனம்
*   கடகம்
*   சிம்மம்
*   கன்னி
*   துலாம்
*   விருச்சிகம்
*   தனுசு
*   மகரம்
*   கும்பம்
*   மீனம்
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*மேஷம்*
1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)
#மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும் 

*ரிஷபம்*
1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)
#ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும் 

*மிதுனம்*
1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)
#மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

*கடகம்*
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)
#கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

*சிம்மம்*
1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)
#சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

*கன்னி*
1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)
#கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

*துலாம்*
1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)
#துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

*விருச்சிகம்*
1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)
#விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

*தனுசு*
1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
#தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

*மகரம்*
1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)
#மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

*கும்பம்*
1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)
#கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

*மீனம்*
1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)
#மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
*ஓம்நமசிவாய*
====

Friday 18 December 2020

உடலின் மருத்துவ அளவீடுகள்!!!

#உடலின்_மருத்துவ_அளவீடுகள்...

பொதுநல விழிப்புணர்வுபதிவு..!!

1.இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45  என்ற அளவில் இருக்கும்.

2.சிறுநீரின் pH அளவு 4.5 - 8.0 என்ற அளவில் இருக்கும்.

3.இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

4.இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

5.இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

6.இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

7.உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

10.இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

11.நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.

12.நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும். 

13.டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.

14.சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.

15. சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயண்படுத்தப்பட்டகாற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவைசுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.

16. உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.

17.ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி   (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

18.ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ

கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

19.ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

20.நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின்

விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை

இருந்திட வேண்டும்.

21. நாம் சாப்பிடும் உணவில் புரோட்டின் வகை உணவின் விகித அளவு சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.

22.சிறுநீரின் அடர்த்தி எண் (Specific Gravity )சுமார் 1.020 முதல் 1.030வரை இருந்திடும்.

23.தினசரி வடிக்கப்படும் சிறுநீரின் அளவு (Daily Urine Out put)தினசரிசுமார் 1000 முதல் 1500 மில்லி வரை இருந்திடும்.

24.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை(Body Temporature) சுமார் 36.8 Degree Centigrade என்ற அளவில் இருந்திடும்.

25.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 98.4 Degree Foreinheitஎன்ற அளவில் இருந்திடும்.

26.ஹைப்போதைராய்டு (Hypothyroidism)நோய் நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 32O C   DEGREES என்ற அளவில் இருந்திடும்.

27.ஹைப்போதைராய்டு நோய் (Hypothyroidism)நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 89.6O F   DEGREES என்ற அளவில் இருந்திடும்.

28. உடல் வெப்பம் 25O C   DEGREES கீழேஇறங்கினால் மரணம் நிகழும்.

29. உடல் வெப்பம் 77O F   DEGREES கீழே  இறங்கினால் மரணம் நிகழும்.

30. செரிபுரோஸ்பைனல் திரவம் (Cerebro Spinal Fluid)என்னும் மூளை நரம்பு திரவத்தின் அழுத்தம் சுமார் 50முதல் 180 mm Hg என்ற அளவில் இருந்திடும்.

31.கண்கோளத்தின் அழுத்தம் (Intra Occular Pressure)சுமார் 10-20 mm Hg -மெர்க்குறி -என்ற அளவில் இருந்திடும்.

32.ஆண்விதையில் (Testis)சுமார் 200 முதல் 300 வரை லோபுயுல்கள் (Lobules)என்னும் துணை அமைப்புகள் உள்ளன.

33.ஆண்களில்ஸ்பெர்மெட்டோசோவா (Spermatozoa)என்னும் விந்தணுக்கள் உடல் வெப்ப நிலையினைவிட  3O C   DEGREES குறைவாக இருந்திடல் வேண்டும்.

34.ஆண் விதை(Testis) 4.5  C.M.  நீளமும் 2.5 C.M. முதல் 3 C.M.தடிமனும் கொண்டதாகும்.

35.பெரும்பாலோரில் மாதவிலக்கு (Menstrual period)சுமார் 45 முதல் 55 வயதிற்குள் நின்று போகலாம்.

36.மாதவிலக்கு பெரும்பாலோரில் சுமார் 28 நாட்களில் ஏற்படுகிறது.

37.மாதவிலக்கின் மென்ஸ்ட்ருவல் நிலை (Menstrual  Stage)4 நாட்கள்கொண்டதாகும்.

38. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் முதலாவது நிலையான புரோலிபரேட்டிவ்  நிலை(Prolifertive Stage)  சுமார் 10 நாட்கள் கொண்டதாகும்.

39. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் இரண்டாவது நிலையான செக்ரீட்டரி நிலை (Secretory Phase)சுமார் 14 நாட்கள் கொண்டதாகும்.

40. ஒரு பெண்னின்  ஓவுலோவன்(Ovulation) எனப்படும் பெண் கருமுட்டை (Ovum)உற்பத்தி ஒவ்வொரு 40 நாட்களில் நடைபெறுகிறது.

41.காலும் வயிறும் இணையும் இடத்தில் உள்ள இங்குவனைல் கேனால் (Inguinal Canal)என்னும்  வளையம் சுமார் 2.5 செ.மி. முதல் 4 செ.மி. வரை இருந்திடும்.

42.காலர்போன் (Collar Bone)என்னும் கழுத்து எலும்பு கருவின்எட்டாவது வாரத்தில் அமைகிறது.

43.எலும்புகளில் ஆசிபிகேஸன் (Ossification)என்னும் எலும்பு வளர்ச்சி 21 வயதிற்குள் முடிந்துபோகிறது.

44.சிறுநீரில் (Urine)சுமார் 96 சதவிகிதம் நீரும் 2 சதவிகிதம்யூரியாவும் (Urea)மீதம் 2 சதவிகிதம் மற்ற பொருள்களும் சேர்ந்திருக்கும்.

45.சிறுநீரின் அளவு தினசரி 500 மில்லிக்கு குறைந்திடாமல் இருந்திடல் வேண்டும்.

46.இரத்தத்தில் 160 மி.கி / மில்லி லிட்டர் என்ற

அளவிற்குமேல்குளுக்கோஸ்(Glucose)இருந்திட்டால் இந்நிலையில்சிறுநீரில்குளுக்கோஸ் (Glycosuria) வெளிப்படும்.

47.சிறுநீரகம் (Kidneys)ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்கள் (Nephrons)என்னும் நுண்வடிப்பான்கள்  உள்ளன.

48.சிறுநீரகம் சுமார் 11 C.M  நீளம் கொண்டதாகும்.

49.சிறுநீரகம் சுமார் 6 CM. அகலம் கொண்டதாகும்.

50.சிறுநீரகம் சுமார் 3 C.M. தடிமன் கொண்டதாகும்.

51.சிறுநீரகம் (kidneys)சுமார் 150 கிராம் எடை கொண்டதாகும்.

52. A வகை ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் (Hepatitis)உடலில்புகுந்த 
பிறகு சுமார் 15 முதல் 40 நாட்களில்நோயினை வெளிப்படுத்திடுகிறது.

53.இதுவரை சுமார் 20 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)கண்டறியப்பட்டுள்ளன.

54.சுமார் 9 வகை அமினோ அமிலங்கள் (Amino acids)நமது உடலில் தயாரிக்கப்படுவதில்லை.

55.தினசரி சுமார் 500 மில்லி லிட்டர் பித்த நீர் (Bile Acids)சுரக்கிறது.

56.கனையம்(Pancreas)சுமார் 60 கிராம் எடை கொண்டது.

57.கனையத்தின் நீளம் 12 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை இருந்திடும்.

58.குடலில் (Intestines)உள்ள எப்பிதீலியம் செல்கள்(Epithelial Cells)3 முதல் 5 நாட்களில் உதிர்வடைகிறது.

59.ஜிஜனம் (Jejunum)என்னும் சிறுகுடல் (Small Intestine)பகுதி சுமார் 2 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

60.டியோடினம் (Duodenum)என்னும் குடல் பகுதி சுமார் 25 செ.மீ.நீளமுள்ளது.

61.வயிற்றில் (Stomach)சுமார் 2 லிட்டர் கேஸ்ட்ரிக் அமிலம்(Gastric Acid)தினசரி சுரக்கப்படுகிறது.

62.ஈசோபேகஸ் (Esophagus)என்னும் விழுங்குழல் சுமார் 25 செ.மீ. நீளம் கொண்டதாகும்.

63.விழுங்குழல் (Osophagus)சுமார் 2 செ.மீ. அகலம் கொண்டதாகும்.

64.உமிழ்நீரின்  (Saliva)pH சுமார் 5.8 முதல் 7.4 வரை இருக்கும்.

 65.உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.

 66.  65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர்  நீர் (Body Water)அமைந்திருக்கும்.

67.உடலில் உள்ள செல்களின் உள்ளே (Intracellular)உள்ள மொத்த நீரின் (Total Body Water)அளவு சுமார் 28 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.

68.உடலில் உள்ள செல்களுக்கு வெளியே (Extracellular)உள்ள செல்கள் சுமார் 12 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.

69.வாயு மாற்றத்தில் (Gas Exchange)பங்கெடுத்திடும் நுரையீரல் (Lung)திசுக்களின் பரப்பளவு(Surface Area) சுமார் 70 முதல் 80 சதுர மீட்டர் அளவிற்கு இருந்திடும்.

70.உள்ளிழுக்கப்படும் காற்றில் (Inspired Air)சுமார் 21 சதவிகித ஆக்ஸிஜன் (Oxygen)உள்ளன.

71.வெளிவிடப்படும் காற்றில் (Expired Air)சுமார் 16 சதவிகிதம்ஆக்ஸிஜன் அமைந்துள்ளது.

72.நமது உடலில் விலா எலும்புகள் (Ribs)சுமார் 12 ஜோடிகள் உள்ளன.

73.20 முதல் 20000 ஹெர்ட்ஸ் (Hertz)அளவுகொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்டிட இயலும்.

74.மூளைக்கு (Brain)இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் (Cardiac Output)இரத்தத்தில் சுமார் 15 சதவிகிதம்அளவு தேவைப்படுகிறது.  

75.மூளைத்தண்டுவடம் (Spinal Cord)சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது.

76.மூளைக்கு நிமிடத்திற்கு சுமார் 700 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது.

77.மூளைத்திரவத்தின் (Cerebrospinal Fluid)அடர்த்தி (Specific Gavity)எண் 1.005 ஆகும்.

78.மேலேரும் மகாதமனி (Ascending Aorta)சுமார் 5 செ.மீ. நீளமுள்ளதாகும்.

79.சிஸ்டாலிக் அழுத்தத்திற்கும்(Systolic Pressure)டயஸ்டாலிக் அழுத்தத்திற்கும் (Diastolic Pressure)உள்ள வேறுபாடு பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)எனப்படும்.

80.பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)சுமார் 40.மி.மீ. மெர்குரி (Mercury)என்ற அளவில் இருந்திடும்.

81.குளுக்கோகார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கையான ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் அதிகாலை 4 A.M. to  8 A.M.நேரத்தில் அதிகளவு இருந்திடும்.

82.குளுக்கோ கார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கை ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் நடு இரவு முதல் அதிகாலை 3 மணிவரை மிகக் குறைந்த  அளவே இருந்திடும்.

83.தைராய்டு சுரப்பி (Thyroid Gland)சுமார் 20 கிராம் எடை கொண்டதாகும்.

84.பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland)சுமார் 500 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.

85.கண்ணீர் சுரப்பியின் வடிகுழாய் (Lacrymal Gland)சுமார் 2மி.மீ. நீளம் கொண்டதாகும்.

86. ஒளியின் வேகம் (Velocity of Light)1800000  கி.மீ. ஒரு நிமிடத்தில் (3.00000 K,M/SEC).

87.கண்கோளம்(Eye Ball)சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்டதாகும்.

88.மூளை திரவம் (Cerebrospinal Fluid)ஒரு நிமிடத்திற்கு சுமார் 0.5 மில்லி சுரக்கப்படுகிறது.

89.மூளை திரவம் தினசரி சுமார் 720 மில்லி சுரக்கிறது.

90.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் படுத்தநிலையில்சுமார் 10செ.மீ. (நீர்) அளவிற்கு இருந்திடும்.

91.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் நின்ற நிலையில்சுமார் 30செ.மீ. (நீர்) அளவு இருந்திடும்.

92.இதய பெருவறைகள்(Left Ventricle)ஒரு முறை சுருக்கமடைந்திடும் பொழுது சுமார் 70 மில்லி
இரத்தம் பெரும் இரத்தக் குழாய்களில் வெளியேற்றப்படுகிறது(Stroke Volume).

93.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 5 லிட்டர்
இரத்தத்தை வெளியேற்றுகிறது(Cardiac Output).

94.உடற்பயிற்சியின்(Exertion)போது இதயம் ஒரு நிமிடநேரத்தில் சுமார் 25 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.

95.நல்ல விளையாட்டு வீரர்களின் (Athletic)இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 35 லிட்டர் வரை இரத்தத்தை வெளியேற்றுகிறது.

96.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 60 தடவைகள் முதல் 80 தடவைகள் வரை சுருக்கமடைகிறது.

97.இதய பெருவறைகள் சுருக்கமடைந்திட(Cardiac Contraction)சுமார் 0.3 செகண்ட் காலம் ஆகிறது.

98.இதய பெருவறைகள் விரிவடைந்திட (Cardiac Dilatation)சுமார் 0.4 செகண்ட் காலம் ஆகிறது.

99.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex )இடது மார்பின் (Left Chest)5 வது விலா எலும்பு இடைவெளியில் (Intercostal Space)அமைந்துள்ளது.

100.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex)மார்பின் மையப் பகுதியிலிருந்து (Midline)இடது பக்கம் சுமார் 9செ.மீ. தள்ளி இருக்கிறது.

#சித்தமருத்துவ_குறிப்பிலிருந்து ...

Tuesday 17 November 2020

பொடி வகைகள்!!!

பொடி  வைகைகள்

1.  சாம்பார் பொடி

அரை கிலோ தனியா, கால் கிலோ மிளகாய் ,  கால் கிலோ துவரம் பருப்பு,  கால் கிலோ  கடலை பருப்பு, 50 கிராம் சீரகம்,   50 கிராம் மிளகு, 50 கிராம் வெந்தயம்,  20 கிராம் துண்டுகளாக்கிய பெருங்காயம்,  25 கிராம்  மஞ்சள் பொடி,  50 கிராம் பச்சை அரிசி, ஒரு கொத்து கருவேப்பிலை எல்லாம் ஒவ்வொன்றாக  கொஞ்சம் கை  பொருக்கும் சூடு வரை வறுத்து எடுத்து நன்றாக ஆற வைக்கவும், ஆறியதும் இரண்டு ஈடாக மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைஸாக அரைக்கவும் அல்லது மிஷினில் அரைத்து,  ஆற வைத்து Air tight container ல் வைக்கவும்

2.  ரசப்பொடி

ஒரு கப் துவரம் பருப்பு,  ஒரு கப் தனியா,  அரை கப் மிளகு,  அரை கப் சீரகம், 15-20 மிளகாய்,  10 கிராம்  பெருங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,  10-15 கருவேப்பிலை
எல்லாம் ஒவ்வொன்றாக வாசனை  வரும் வரை வறுத்து  ( தனியா வறுக்கும் போது பெருங்காயம், மஞ்சள் தூள்,  கருவேப்பிலை போட்டு கொள்ளளாம் ) இறக்கி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று  பொடித்து ஆறியதும்  Air tight container ல் எடுத்து வைக்கவும்

3.  கறி பொடி

ஒரு கப் தனியா, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பு, 15-20 மிளகாய்,  எல்லாம் தனி தனியாக எண்ணை ஊற்றாமல் ( dry fry ) சிவக்க வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும் 

சின்ன நெல்லிகாய் அளவு  பெருங்காய கட்டியை வானலியில் போட்டு பிரட்டினால் சூடானதும் புஸ் என்று உப்பி வரும் அதையும்  எடுத்து ஆற வைக்கவும்

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று பொடித்து நன்றாக ஆறியவுடன் Air tight container ல் எடுத்து வைக்கவும்

4.  இட்லி மிளகாய் பொடி

வானலியில் ஒரு கப் உளுத்தம் பருப்பு ,  அரை கப் கடலை பருப்பு ,  ஒரு பெரிய கட்டி பெருங்காயம் ,  100 கிராம் மிளகாய் ,   அரை ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து  ஆற வைக்கம்

அதே வானலியில் கால் கப் கருப்பு எள் போட்டு பட படவென்று பொரித்து இறக்கி ஆறியதும்  மிக்ஸியில் போட்டு அதனுடன்  பருப்புகளையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்

5.  பருப்பு பொடி

ஒரு கப் துவரம் பருப்பு,  அரை கப் கடலை பருப்பு,  பாசி பருப்பு,  பொட்டு கடலை,  கால் கப் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சீரகம் , 8-10 வர மிளகாய், 2 சின்ன கட்டி பெருங்காயம்  10 கருவேப்பிலை எடுத்து அடுப்பில் வானலி வைத்து மேல் சொன்னதை எல்லாம்   தனி தனியாக சிவக்க வறுத்து எடுத்து ஆறியதும்  தேவையான உப்பு சேர்த்து  மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்தால் சுவையான கம கமவென்ற பருப்பு பொடி ரெடி

6.  கருவேப்பிலை பொடி

வானலியில் ஒரு 4 ஸ்பூன்  உளுத்தம் பருப்பு ,   2 ஸ்பூன் கடலை பருப்பு ,  ஒரு சின்ன கட்டி யெருங்காயம் ,  4 மிளகாய் ,   1 ஸ்பூன் மிளகு ,  கால்  ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து  ஆற வைத்து மிக்ஸியில் போடவும்

அதே வானலியில் 2 கைபிடி அலம்பி  சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாத கருவேப்பிலை ,  நெல்லிக்காய் அளவு புளியை சிறு சிறு துண்டுகளாக போட்டு , கருவேப்பிலையை அமுக்கினால் உடையும் அளவு 
வறுத்து  ஆறியதும்  அதையும் மிக்ஸியில் போட்டு  தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து  ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்

7. எள்ளு பொடி

வானலியில் ஒரு கை பிடி வெள்ளை எள்ளு, அரை கை பிடி உளுத்தம் பருப்பு 10 மிளகாப், போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கோர்ஸாக அரைத்தால் மணக்கும் எள்ளு பொடி ரெடி

8.  அங்காய பொடி

 அடுப்பை மீடியம் பிளேமில்  வைத்து 4-5 ஸ்பூன் வேப்பம் பூ, 10-15 சுண்டைக்காய், 3-4 ஸ்பூன் மணதக்காளி வத்தல் ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்

அதே வானலியில் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய், ஒரு சின்ன துண்டு சுக்கு, சின்ன கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் சீரகம், 7-8. கருவேப்பிலை, தேவையான உப்பு எல்லாம் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் வேப்பம் பூ, சுண்டைக்காய், மணதக்காளி எல்லாம் போட்டு நைஸாக அரைத்தால்  கம கமவென்ற மருத்துவ குணம் கொண்ட அங்காய பொடி ரெடி

9.  தேங்காய் பொடி

வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி,  ஒரு கப் உளுத்தம் பருப்பு ,   கால்  துவரம் பருப்பு, 10 - 12  வர மிளகாய் போட்டு சிவக்க வறுத்து அதில் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளியை பிச்சு போட்டு, ஒரு ஸ்பூன் பெருங்காய பொடி, தேவையான உப்பு பபோட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைக்கவும்

ஒரு முழு முத்திய  தேங்காயை உடைத்து சன்னமாக துறுவி அதை வானலியில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து ஆறிதும் அதையும் மக்ஸியில் போட்டு கொஞ்சம் விட்டு விட்டு அரைத்து மூடி திறந்து நன்றாக கிளறி மறுபடியும் மூடி 2-3 சுத்து சுத்தி இறக்கி திறந்தால் மணக்க மணக்க தேங்காய் பொடி ரெடி

10.  தனியா பொடி

வானலியில் ஒரு கப் தனியா போட்டு வாசனை வரும் வறுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்

ஒரு கப்  உளுத்தம் பருப்பு,  அரை கப் கடலை பருப்பு, 8-10 வரமிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாவுடன் போடவும் 

வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு ஒரு கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் மிளகு,  கால் ஸ்பூன் சீரகம், நெல்லிக்காய் அளவு புளியை பிச்சு போட்டு , தேவையான கல் உப்பு போட்டு நன்றாக வறுத்து அதையும் தனியாவுடன் போட்டு நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு கற கறவென்று அரைத்தால் தனியா பொடி ரெடி

11.  வேப்பல கட்டி

தளிர் நார்த்த இலை ஒரு கைபிடி  ( இலையின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்து விட வேண்டும் ,  இலையை நீள வாக்கில் இரண்டாக மடித்து வெத்தலை காம்பு கிழிப்பது போல் கிழித்தால் காம்பு வந்து விடும்  ) ,  தளிர் எலுமிச்சம் இலை ஒரு கைபிடி , கருவேப்பிலை ஒரு கைபிடி ( கிராமங்களில் வீட்டு தோட்டத்திலேயே கிடைக்கும் = நகரங்களில்  வீதியில் வரும் கீரை விற்பவர்களிடம் சொல்லி வைத்து வாங்லாம்  ) எல்லா இலைகளையும் நன்றாக அலம்பி சுத்தம் செய்து ஒரு யெரிய தாம்பாளத்தில் பரப்பி   அரை மணி நேரம் வெய்யிலில் வைத்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்து அப்படியே மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து தனியே வைக்கவும்  ( அரைக்கும் போது 10-15 செகன்டுக்கு ஒரு முறை மிக்ஸி ஆஃப் செய்து மூடி திறந்து கிளறி விட்டு ,  கிளறி விட்டு அரைத்ததால் சீக்கிரம் நைஸ் பொடியாக வரும்  )

அதே மிக்ஸியில் 10-12 மிளகாய் ,  ஒரு ஸ்பூன் ஓமம் , ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் ,  தேவையான கல்உப்பு அப்படியே போட்டு கொற கொறவென்று அரைத்து அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக அரைத்து எடுத்தால்  சூப்பரான வேப்பல  கட்டி ரெடி

12.  ஊறுகாய் பொடி

வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி , 
ஒரு ஸ்பூன் கடுகு ,  கால்  ஸ்பூன் வெந்தயம்,  10-12 மிளகாய் ,  2 சின்ன கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்

13.  வெத்த குழம்பு பொடி

வானலியில் ஒரு கப் துவரம் பருப்பு,  கால் கப் கடலை பருப்பு, கால் கப்  தனியா, 2 ஸ்பூன் வெந்தயம், 2ஸ்பூன் கடுகு ,  அரை ஸ்பூன் மிளகு, சீரகம், 7-8 மிளகாய் வத்தல் எல்லாம் போட்டு சற்று சூடாகும் வரை பிரட்டி ஆறியதும் கற கறவென்று அரைத்து ஏர் டைட் கன்டெய்னரில் வைக்கவும்

From Brahmins Bhojan

Monday 2 November 2020

குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!!!

குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

Sunday 2 August 2020

கஷாயம்-Herbal Soup!!!

*_கஷாயம் வாரம்_*
_(பாட்டி வைத்தியம்.)_

_*திங்கட்கிழமை:* வெற்றிலை – 4, மிளகுத்தூள் - ¼ தேக்கரண்டி ,கொதிக்க வைத்துக் குடித்தால், நாக்கு சுத்தமாகும், கபமும் சேராது._

_*செவ்வாய்க்கிழமை:* கடுக்காய் பொடி, மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், உடல் உஷ்ணம் சீராக இருக்கும்._

_*புதன்கிழமை :* தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்._

_*விழயாகிழமை :* சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்._

_*வெள்ளிக்கிழமை :* வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து, வறுத்து, பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால், பித்தநீர் வெளியேறிவிடும்._

_*சனிக்கிழமை :* முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்._

_*ஞாயிற்றுக்கிழமை :* சுக்கு மல்லி காபி குடிக்கலாம்._

_இப்படி பழகிக்கொண்டால், எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்..!

Saturday 16 May 2020

பூ அமிர்தம்!!!

பூ அமிர்தம் – மலர் மருத்துவம்

தற்பொழுது மலர் மருத்துவம் என்கிற துறை பிரபலமடைந்து வருவதை நாம் அறிய முடிகிறது. இந்த மலர் மருத்துவம் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டுக்கு உள்ளது. ஆனால் அணைத்து நோய்களுக்கும் பரிகாரமும் மருத்துவ மூலிகைகளை நமக்கு அளித்த நமது சித்தர்கள் மலர் மருத்துவம் பற்றியும் அதனைக் கொண்டு நமது உடல் ஆரோக்கியத்தையும் , நோயற்ற வாழ்வினையும் உறுதி செய்தனர்.. அந்த வகையில் இந்த லேகியம் குரு- சீடன் வழியில் வந்துள்ளது. இதில் சுமார் பதினாறு மருத்துவ மலர்களும், 27 மூலிகை சரக்குகளையும், 6 வகையான சாறுகளும் சேர்த்து பூ அமிர்தம் என்னும் லேகியமாக உருவாகிறது.

மூலிகை மலர்கள்

ஆவாரம் பூ, செம்பரத்தை பூ, மாதுளை பூ ,தூதுளம் பூ, முருங்கை பூ, தும்பை , பன்னிர் ரோசா, வெண்தாமரை, செந்தாமரை, செம்பருத்தி பூ, வேப்பம்பூ, செங்கடுக்காய் பூ, செண்பக மொக்கு, கருஞ்ச்சித்தகத்தி பூ முதலியன.

செம்பரத்தை பூ, மாதுளை பூ ,தூதுளம் பூ, முருங்கை பூ, தும்பை , பன்னிர் ரோசா, வெண்தாமரை, செந்தாமரை, செம்பருத்தி பூ, செம்பரத்தை பூ, வேப்பம்பூ, செங்கடுக்காய் பூ,

சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளங்கம், மஞ்சள், அசோகப்பட்டை, சித்தரத்தை, அதிமதுரம், கடுக்காய் தோல், தான்றிக்காய் தோல், நெல்லி வற்றல், மாசிக்காய், அஸ்வகந்த, சதுரகிரி மலைகளில் கிடைக்கும் கர்ப்ப பட்டை போன்ற கற்ப சஞ்சீவி மூலிகைகள் கொண்டது.

இஞ்சி சாறு, பழச்சாறு, பூண்டு சாறு, குமரி சாறு, தண்ணீர்விட்டான் கிழங்கு முதலியன.

யார் யார் சாப்பிடலாம்?

குழந்தை முதல் வயதான அனைவரும் சாப்பிடலாம். அனைத்து விதமான நோய்கள், உடல் உபத்திரங்கள் உள்ளவர்கள் சாப்பிட மூன்றே நாளில் குணம் தெரியும்.
குணமாகும் நோய்கள்
இரத்த குறைபாடு, உடல் உஷ்ணம், மாதவிடாய் கோளாறுகள், கருப்பை காட்டி, வெள்ளைபடுதல், பெரும்பாடு, விந்து ஒழுகல், கபம் சார்ந்த நோய்கள், எலும்பு தேய்மானம், செரிமானமின்மை, நாட்பட்ட வயிற்றுப்புண், இருதயம் தொடர்பான அணைத்து நோய்கள், மலக்கட்டு, பேதி, மூலம், முகம் வசீகரம் பெறுதல், முகம் பொலிவுடன் நிறம் கூடுதல்,

1. மேலும் இதன் தனிச்சிறப்பு உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகள் பலம் பெறும், மனிதனுக்கு உண்டாகும் கல்லீரல்,கணையம்,பித்த பை,மண்ணீரல், இருதயம்,பெருங்குடல்,சிறுகுடல் முதலியவற்றின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

2. மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி.

3. இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைத்தல்.

4. இரத்த அழுத்தம் சமநிலையில் பாதுகாக்கப்படும்.

குறிப்பு : இந்த லேகியம் சாப்பிட்டு பயன் கிடைக்க வில்லை எனில் உங்கள் பணம் திருப்பி தரப்படும்.

ஒரு மண்டலத்திற்கு உண்டான மருந்தின் விலை ரூ.2000

தொடர்புக்கு
த.மணிகண்டன்
சதுரகிரி சித்தர்கள் அங்காடி
கோவை
அலைபேசி : 9500458596,9659930499
சதுரகிரி சித்தர்கள் அங்காடி
https://www.facebook.com/pages/சதுரகிரி-சித்தர்கள்-அங்காடி/1458165181140406

Thursday 14 May 2020

ஓமம்!!!


ஓமம்(Trachyspermum copticum) 

மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன.
 
சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல் பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல் பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ? சொல்லொடுபோம் ஓமமெனச் சொல் -அகத்தியர் குணபாடம் 

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும். இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது. உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். புகைச்சல் இருமல் நீங்க சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் . மந்தம் பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும். பசியைத் தூண்ட நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது. சுவாசகாசம், இருமல் நீங்க காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். 
ஓமம் - 252 கிராம் 
ஆடாதோடைச் சாறு - 136 கிராம் இஞ்சி ரசம் - 136 கிராம் 
பழரசம் - 136 கிராம் 
புதினாசாறு - 136 கிராம் 
இந்துப்பு - 34 கிராம் 
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

Thursday 26 March 2020

ஆண்மை விரைப்புக்கு!!!

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து :
நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
............................................................................

நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை " (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி " (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)
ஜாதிக்காய் " (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை " (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு " (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்

Wednesday 11 March 2020

கண் பார்வை குறைபாடு!!!

கண் பார்வை குறைபாடு நீங்க……

1, முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்;

கண் பார்வை குறைபாடு நீங்கும்.

2, கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.

கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

3, முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

4, இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

5, வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

6, முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

7, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.

விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து ,

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

இது_குணமாக:

முருங்கை விதை – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்
தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும்.

அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை.

இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர்.

கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது.

பிறந்தது முதல்,
கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது.

..

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளியபயிற்ச்சி முறை .

நாம் நம் வீட்டு அறையில் தினமும் அகழ்விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.

எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம்.

தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

Common Ailments

ACUPRESSURE FOR COMMON ALIGNMENTS

Press the point with your finger perpendicular to the point and press slowly and deeply

If you experience relief with the first point, go no further. You may need to repeat pressure on the point periodically to continue relief.
If you don't get relief from the first point, try the next, and so on, until you experience relief of the symptom.

NB:(M) Indicate that the need for medical attention is likely
(EM!) Indicate that emergency medical attention may be needed if the condition is severe or life-threatening

A
Abdomen
---Lower 9, 5, 6, 2, 20, 13
---Upper 5, 6
Allergies 8, 14, 24
Ankle 4, 5, 6, 1, 30, 18, 20, 21
Arm 8, 3, 2, 34, 12,17, 27
Armpit 2, 12
Anxiety 11, 15, 21, 6
Asthma (M) 7, 14, 12

B
Backache
---General 9, 4, 5, 6, 17, 21, 24, 25, 27
---Lower 4, 5, 6, 21
---Upper 17, 25, 27, 9, 4
Bio energy control
---Fear 3, 6, 11, 15, 31, 19, 21
---Energy (soft=boost/brisk=calm) 35, 13, 6
---Hunger 5, 6
---Memory 7, 2
---Sleep 20
---Smoking 5, 6, 2, 14
---Warmth 17, 27
Bites (any) 33
Bladder 9, 28
Bleeding (EM!) 3, 6, 1, 33, 34
Blisters 8, 1
Breasts 17
Breath control 33
Breathing, laboured (EM!) 12
Bronchitis 7, 14
Bruises 34
Burns (EM!) 8, 4, 28
Bursitis 14

C
"Charlie horse" cramps 4
Chest (EM!) 3, 2, 1, 7, 31
Cholera (M) 8, 3, 13, 6, 30, 16
Claustrophobia 12
Colds and influenza 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Colitis 7, 5, 6, 28
Concussion (EM!) 7, 1, 12, 33, followed in 10 mins. by 34
Conjunctivitis 7, 1, 12, 23, 38
Constipation 13, 5, 20, 36, 30
Cough 7, 3, 6, 2, 14, 12, 33, 16, 36
Cramps, menstrual 4, 13, 5, 2, 15, 38, 31
Cramps, muscular spasms 30, 31
Cystitis 5, 28, 36 Dental work 11, 15

C

Depression (M) 6
Diabetes mellitus (M) 13, 5, 6, 14, 33
Diarrhoea 5, 6, 2, 15, 8, 30
Dizziness 2, 36
Dysentery (M) 5, 6, 2, 15

E
Ear 3, 1
Oedema 5, 6
Elbow 8, 3, 2, 14, 1, 27
Electric shock (EM!) 34
Epilepsy, epileptic seizure (EM!) 2, 36
Exhaustion 12, 34, 13
Eye 23, 8, 1, 7, 30, 26, 19, 30, 24 Face 8, 3, 4, 1, 7, 29, 38

F
Fainting (EM!) 10, 11
Fatigue 6, 34
Fear control 3, 6, 11, 15, 19, 21
Fever 3, 10, 15, 26, 8, 16, 22, 37
Fingers 10, 3, 2, 1, 12
Flatulence 5, 6, 22
Flu 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Foot 4, 5, 6, 1, 30, 18, 20, 21
Forearm 8, 2, 10, 1, 12

G
Gall bladder 7, 5, 6, 1, 30
Gastrointestinal system 5, 6, 1
Gingivitis 1
Genitourinary, 5, 13, 30, 31, 20
Glaucoma, 23, 31

H
Hand 3, 2, 10, 1, 12
Hangover 5, 6, 18
Hay fever 23
Headaches
---Anxiety/tension 11, 15, 21, 6, 24, 38
---Base of skull/neck 27, 17, 8, 1, 16
---Front 22, 24
---General 1, 7, 3, 4, 6, 2, 10, 11, 20, 21, 26
---Migraine 7, 1, 26, 12, 29
---Severe 26, 21, 1, 3, 7, 4, 6, 2, 10, 19
---Sinus 7, 10, 1, 18, 24, 32
---Top of head 21, 1, 3, 7, 4, 6, 2, 10, 11
Head, injury or pain (EM!) 7, 8, 3, 6, 2, 10, 1, 11, 34, 21, 27
Heart attack (EM!) 3, 2, 1, 11, 18
Heartburn 2, 11
Heat rash 8, 6, 1
Haemorrhoids 4, 36, 25
Hernia 5, 6, 20
Hiccough 13, 2, 35, 25
Hip 4, 5, 6
Hives and rash 8, 16
Hunger 5, 6
Hypertension (M) 9, 3, 13, 15, 21, 25, 30, 38
Hyperventilation 14
Hypotension (M) 15
Hysteria (M) 11, 21

I
Immune system 8, 5, 16
Impetigo, eczema 8, 9, 4, 5
Impotence 5, 13, 33
Influenza 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Indigestion 5, 6, 18
Insomnia 13, 2, 11, 12, 31, 18, 24, 31

J
Jaundice (M) 2, 16
Jaw, lower 7, 3, 4, 1

K
Kidneys (M) 21, 33
Knee 9, 14

L
Laryngitis 7, 14, 10, 1
Leg 9, 4, 5, 6, 31
Light-headedness 19
Lips 1
Liver (M) 30
Lumbago 7, 9, 4, 5, 6, 14, 1, 28
Lungs 7

M
Memory 7, 2
Meningitis (M) 10
Menstruation 13, 5, 2, 15, 31, 20, 4
Mental disturbance 6, 15, 35
Motion sickness 5, 6, 2
Mouth 1, 33, 36
Mumps (M) 4, 1

N
Nasal congestion 7, 10, 1, 19, 32, 23, 24
Nausea 5, 6, 12, 25
Neck 7, 8, 1, 34, 16, 17, 31, 24, 27, 38
Nervousness, 1, 30, 31
Neuralgia 4
Nosebleed 7, 9, 1, 16, 19, 22

O
Ovaries and uterus 8, 13, 5, 6

P
Paralysis (EM!) 3, 16, 29
Penis 20, 13, 5, 6
Pleurisy (EM!) 7, 3, 2, 1, 16
Pneumonia (EM!) 7, 6, 14, 1
Poison ivy 8, 3
Poisoning by mouth (EM!) 1, 12, 28
Poisoning, carbon monoxide (EM!) 3, 12
Poisoning, food (EM!) 12
Premenstrual syndrome (PMS) 38
Prostate 13, 5, 6, 33, 28

R
Rectum 4, 28, 36
Respiratory system 7, 2, 14, 1,
Restlessness 11, 15
Reynaud's syndrome 12

S
Sciatica 9, 4, 5, 6, 28, 24, 25
Sea sickness 2, 6
Sedation, tranquilization 1, 30
Seizure (EM!) 2
Sex organs 8, 13, 5, 6, 20
Shock (EM!) 2, 11, 12, 34, 27
Shortness of breath (EM!) 12
Shoulder 7, 8, 3, 2, 14, 1, 34, 17, 31
Sinusitis 7, 10, 1, 18, 24, 32, 23
Skin 8, 9, 3, 14
Sleep control 20
Small intestine 5, 6
Smell, loss of 19, 23, 32
Smoking control 5, 6, 2, 14, 35
Sneezing 14, 24, 23
Spleen, pancreas 6
Spasms 29, 30
Sprains 4
Stings (use right side only) 33
Stomach 8, 5, 6, 2, 25
Strains, muscular 4
Stricture of urine 30, 31, 20, 21
Stroke (EM!) 2, 33, 34
Sunstroke (EM!) 10
Sweating 9, 1

T
Tachycardia, racing heart (EM!) 6, 11, 19
Temper 11, 31
Tennis elbow 14
Tension 38
Testicles 4, 5, 6
Thigh 9
Thirst, temporary 12
Throat 10, 7, 3, 14, 1, 12, 33, 36, 37
Tinnitus 3, 38, 16, 19, 29, 31
Tongue 1
Tonsillitis 9, 3, 10, 1, 18, 14
Toothache 4, 1, 18, 22, 37
Trigeminal neuralgia 24, 29, 32 Ulcers, intestinal 3, 5, 6
Jingluo Health Education 
U

Ulcers, peptic 5, 6
Unconsciousness (EM!) 20, 10, 12, 33 (use left side only), 34
Urinary control, temporary 28
Uterus and ovaries 5, 8, 13, 5, 6

V
Vertigo (M) 4, 2, 28, 21, 36, 19, 38, 23, 30, 31
Vomiting and retching (M) 5, 6, 13, 2, 15, 12, 16, 25

W
Warmth control 17, 27
Whiplash (M) 7, 8, 4, 1
Withdrawal (addiction) 11
Wounds (EM!) 4, 34, 28, 18, 20
Wrist 7, 3, 12, 11

Y
Yawning control 7

Important note: Symptoms marked
(M) indicate that the need for medical attention is likely, and those marked
(EM!) indicate that emergency medical attention may be needed if the condition is severe or life-threatening. For these symptoms, only use acupressure to supplement professional medical care, or when no Jingluo professional medical care is available. Only try Jingluo acupressure for these symptoms after seeking professional care and after using standard first aid and emergency techniques.
Disclaimer: This work is presented as an expression of personal opinion. Although every effort has been made to provide accurate and useful information, it is neither comprehensive nor definitive, and no warranty is made or implied for any use.

1. TCM: Large Intestine 4
2. TCM: Pericardium 6
3. TCM: Triple Warmer 5
4. TCM: Bladder 60
5. TCM: Spleen 6
6. TCM: Stomach 36.
7. TCM: Lung 7
8. TCM: Large Intestine 11
9. TCM: Bladder 40
10. TCM: Lung 11
11. TCM: Heart 7
12. TCM: Lung 9
13. TCM: Conception Vessel 6 (upper) and 4 (lower)
14. TCM: Lung 5
15. TCM: Pericardium 9
16. TCM: Governing Vessel 14
17. TCM: Triple Warmer 15
18. TCM: Stomach 45
19. TCM: Bladder 10
20. TCM: Liver 1
21. TCM: Kidney 1
22. TCM: Stomach 44
23. TCM: Bladder 2
24. TCM: Extra, Head-neck 4
25. TCM: Bladder 21
26. Pinch the nostril, on the side opposite the septum; go
27. Slightly to the back of the muscle which goes from neck to shoulder, a little closer to the arm than to the neckod for severe headache
28. TCM: Bladder 65
29. TCM: Triple Warmer 17
30. TCM: Liver 3
31. TCM: Liver 2
32. TCM: Large Intestine 20
33. TCM: Kidney 3
34. TCM: Triple Warmer 14
35. TCM: Conception Vessel 14
36. TCM: Gall Bladder 35
37. TCM: Large Intestine 1
38. TCM: Gallbladder 20
FOR THE CORRECT POINTS AND MEASUREMENTS SEARCH IN GOOGLE AND DOWNLOAD THE CHART ON TCM

Monday 9 March 2020

உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நம்மாலும் இருக்க முடியுமா?!!!

சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா? அதற்கு என்ன வழி? என்று யோசித்து தேட ஆரம்பித்தேன்.  அப்போது தற்செயலாக ஒரு வயதான சித்த வைத்தியரை சந்தித்தேன்

நான் சந்தித்த அந்த வைத்தியர் முதியவராக இருந்தாலும் பல முற்போக்கான கருத்துக்களை கொண்டவராக இருந்தார். அவர் பசிதாகம் இல்லாமல் பல மணிநேரம் நம்மாலும் இருக்க முடியும் என்று கூறி ஒரு மூலிகை முறையை எனக்கு சொன்னார்.

குளத்து தாமரையை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான். 

அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார். 

அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார். 

கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.

உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 

இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன். 

உண்மையில் அன்றைய  பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன்...

தொடர்ந்து பலமணிநேரம்
தவம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்... இந்த கல்தாமரையை பயன்படுத்தலாம்....தொடர்ந்து தரத்தில் அமரும் பட்சத்தில் உடல் சூடாவதும் கால்கள் சூகை பிடிப்பதும் இயற்கை..

இந்த கல்தாமரையை பயனபடுத்தும் போது உடல் சூடாவதில்லை...கால்கள் சூகை பிடிப்பதில்லை...
தியானம் செய்ய அருமையான மூலிகை இந்த கல்தாமரை.....

சித்தர்களின் அருளால்
(சிவசம்போ)