Saturday 19 September 2015

Medical Tips!!!


தாய்  சேய்  நலம் :



தாய்ப்பாலில்   வேம்பு துளிர்  சீரகம் கார்மிளகு

சேய்வேப்பங்  காரச் சிறப்பு .              ----------------குறள்


வேம்பின்  துளிர்  இலை -5 உடன் 4 சீரகம்  மிளகு 1 இம்  மூன்றையும் (எண்ணிக்கையில் எடுக்க)
இடித்து  மெல்லிய  வெள்ளை  துணியில்  முடிந்து  அதை தாயின் பாலில் ஊற  வைத்துவிட்டு குழந்தையை  குளிப்பாட்டிவிட்டு  ,பிறந்த  ஒரு மாதத்தில்  இருந்து   16 நாள்  இருதுளி அளவு  நாவில்  தடவி  வர  குழந்தைக்கு
இளமையில்  நோய் எதுவும்  வராது 

====================================================

வெள்ளை படுவது நிற்க 




சோம்புகடுக்   காய்நெல்லி  சீரகம்  மாசிக்காய் ,
தேம்புவெள்ளை  நோய்க்கு  மருந்து .       ---------குறள்   

சோம்பு,கடுக்காய்தூள் ,நெல்லிகாய் ,சீரகம்,மாசிக்காய்  இவற்றை  எடுத்து  தூளாக்கி  நெய்யில்  காலை மாலை  உண்ணவிர்க்கு  முன் அருந்திவர  வெள்ளை  நோய் தீரும் 

Important Tips for All!!!

குழந்தைகளுக்கு நினைவாற்றல்  அதிகரிக்க 



வசம்போர் அரைப்பங்கு  வல்லாரை பத்து 

வசமுடற்காம்  பேரறிவின் மேற்று .                     -------குறள் 

விளக்கம் :

வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள்  பத்துப் பங்கும் சேர்த்து  ஒன்றாக்கி  அதை 2கிராம்  அளவு  காலையில்  40 நாள் உண்ண  உடலின்  நச்சு தன்மை நீங்கி  மூளைக்கு   பலம்  உண்டாகும் .இதுவே  நினைவாற்றல்  அதிகரிக்க ஏற்ற  மருந்து .
************************

to Increase sperm count
தாது நலம் பெற
 ;-




இன்றைய  காலக்கட்டத்தில்  ஆண்மக்கள்  உணவு ,உறங்குதல் ,பழக்கவழக்கம் இவற்றால்  உடல்  நலம் பாதிக்கப்படுவதால்  குழந்தை  பெற  இயலாமை

,இவற்றை தவிர்க்க  குறள்  காட்டும்  வழியில்  நடந்தால்  வாழ்வில்  வளம்  பெற்று நன் மக்களையும் பெறலாம் .

மிக எளிமையானது .

கசகசா  வால்மிளகு  கற்கண்டு  பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும்  தாது    .............குறள்




கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை  பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில்  பாகு செய்து  காலை, இரவு  அருந்திவர
உடலுக்கும்  மனத்திற்கும்  நன்மை தரும்
தாது  நலம்  பெரும்
( 16 நாள்  நெல்லிக்காய்  அளவு )

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவாற்றல் மிக்க குழந்தை  பெற :

அழகாய் குழந்தை  பெற





மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின் 


மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள் 



கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .


அழகாய் குழந்தை  பெற :-



கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன் 
செம்மை நிறமாய்  பிறக்கும் ,


செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .

Medicine to conceive-கர்ப்பம் தரிக்க மாமருந்து!!!



கர்ப்பம்  தரிக்க  மாமருந்து :


வாறான   மங்கையர்  கெர்பமாக
வறையுறேன்  பசும்பாலு  வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை  மூலிதானும்
நிலையான குப்பை மேனி  சமனாய்க்  கூட்டி

காறான பால் தனிலே  குழப்பியே தான்
கனமாக  இருவேளை  கொண்டாயானால்
சோரான  கிருமியது  அற்றுப் போகும்
செனிக்குமே  பிள்ளையது  செனிக்கும்  பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :


தன்வந்திரி பகவான்  பெண்கள் கர்ப்பம் தரிக்க  உடலைப் பக்குவப்படுத்த
சுரண  முறை வைத்தியத்தை  பற்றி சொல்லி இருக்கிறார்  அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி  மகரிஷியை  வணங்கி  அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி  இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி  சரி எடையாக  எடுத்து இடித்து  வைத்துக்கொள்ளவும் .
இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய்  கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி  மகரிஷி


 வசம்பு
விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்


++++++++++++++++++++++++++++++

பல் ஈறு பலப்பட /அழுகல்  நீங்க(For TEETH and GUM)


மிளகுசோற்  றுப்பு  மிகாதொன்றாய்க்  கூட்டின்
அளவு பல்  தீநீர்  தவிர்ப்பு ......................குறள்

விளக்கம் :

மிளகு , சோற்று உப்பு  இரண்டையும்  சம அளவு எடுத்து பொடி செய்து  இரண்டு கிராம் அளவுஎடுத்து  காலை ,மாலை  பல் துலக்கி அழுகிய பக்கம் தலை சாய்த்து  படுத்திருந்தால் கெட்ட நீர்  முற்றும்  வெளியாகும் ,நோய் குணமாகும். 
***********************************************************************

Eye sight  improvement for all ageகண் பார்வை  வலுப்பெற 






நீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்


அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும் 

சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி

 தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை 

தெளிவாகும் .
அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர்  

**************************************************************************
குழந்தைகள் நலம் காக்க 

இருகாய்  அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு  சேய்நோய்  உறைக்கு              குறள்

விளக்கம் :

சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு   இவ் ஏழு பொருட்களையும்  சம அளவு எடுத்து  தூளாக்கி  பச்சை  வெற்றிலை  சாறை விட்டு  அரைத்து  உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர்  கொடுத்தால்  மிகவும் நன்று .



     



   

Tip For Diabetic Patients!!!



உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய!!!
நூல்கோல் சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .
15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து மறுமுறை சாப்பிடவும்

Wednesday 16 September 2015

அழுகிய புண்கள்,ஆறாத குழிப்புண்ணுக்கு!!!

அழுகிய புண்கள்,ஆறாத குழிப்புண்ணுக்கு !
ஊமத்தை இலை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இரண்டையும் நன்கு கலந்து, நீர் வற்றும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளலாம். அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண்ணிற்கு மேல் உபயோகம் பயன்படுத்த குணமாகும். or use
மத்தன் oil கடைகளில் கிடைக்கும் ஆறாத புண்களில் தடவ குணமாகும். எண்ணெயும் இதுவும் ஒன்று தான்.


மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி!!!


மெலிந்த உடல் பருக்க -
இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.
மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது .
மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.
தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.
இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.
சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.
இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.
============================
தந்த ரோகம் - பல்பொடி -
அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.
நன்றி !
Dr.அரவின் தீபன்...
Baskar Jayaraman's photo.

Thursday 10 September 2015

Rare Photo!!!

Tips!!!

உடல் சூடு குறைய !!!
சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்கள்.
உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு.
உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.
உடற்காங்கை அதிகமாக காரணங்கள் - கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.
அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை விளைவிக்கும்.
உடல் சூடு குறைய சிகிச்சை முறைகள்
1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையில் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.
2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.
3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்கமாலா தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக் கலாம்.
4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.
5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.
6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.
7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.
8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.
10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் சிறந்தது.
12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.
அதிக உடல் உஷ்ணத்தினால் கணை நோய்கள் உண்டாகும்.
உஷ்ணத்தை குறைக்க ஆயுர்வேதத்தில் பல தைலங்கள் சொல்லப்படுகின்றன. வெண் தாமரை, செந்தாமரை, ரோஜாமொக்கு, அதிமதுரம், சீந்தில், நன்னாரி வேர், சிறுநெரிஞ்சில், சந்தனத்தூள், கோஷ்டம் இவைகளால் தயாரிக்கப்படும்
பத்மபத்காதிபானகம் மற்றும் கரிசிலாங் கண்ணி, பொன்னாங்கண்ணி, நெல்லிக்காய் சாறுகள், பசும்பால், நல்லெண்ணை, சந்தனம், கோஷ்டம், அதிமதுரம், மிளகு, வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் கடுகரோகினி இவற்றால் தயாரிக்கப்படும் மகாப் ருங்காமல்த்தைலம் தவிர சந்தனாதித் தைலம், சஞ்சீவித்தைலம், துளசி க்ருதம் போன்ற பல மருந்துகள் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் பாலியல் குறைபாடுகள் தோன்றும்.
உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல் பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர் களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.
வெயில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு - விந்துப்பை (Scrotum) தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சீக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் 'கூலாக' (Cool - குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை (Sperma tozoa) விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியாகி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடைவதே கடினமாகி விடும்.
இது தவிர விந்துவின் 'பலமும்' குறையும். விந்துவின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள் - Testis) யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து விடுவதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை. இதை Varicocele என்பார்கள்.
உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். தவிர masturbation கைப்பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்(ஆயுர்வேதமருத்துவம் )

வியக்க வைக்கும் மருத்துவக் குறிப்புகள்!!!

குப்த வைத்ய தீபிக” எனும் தெலுங்கு புத்தகம், மிகவும்
பழமையானது. அருமையான மருத்துவக் குறிப்புகளை அள்ளித்தரும் அற்புதமான
புத்தகமிது.
இதில் மதுமேகம் என்கிற நீரிழிவு நோய்க்கு ஒரு எளிமையான மருத்துவம் சொல்லப்பட்டுள்ளது.
* இரவில் சப்பாத்தியை மட்டுமே உண்ணவேண்டும். சப்பாத்தி செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
* சப்பாத்திக்கு, அப்போதுதான்
கடைந்தெடுத்த புதிய வெண்ணெயைத்தான் தொட்டுக்கொள்ள வேண்டும். வேறு எதையும்
தொட்டுக்கொள்ளக்கூடாது.
* அரை மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாறு அருந்த வேண்டும்.
* இதை நாற்பெத்தெட்டு நாட்கள்
கடைப்பிடித்தால், நீரிழிவு நோய் அகன்றுவிடும் என “குப்த வைத்ய தீபிக”
உறுதி கூறுகிறது.


வியக்க வைக்கும் மருத்துவக் குறிப்புகள்
”குப்த வைத்ய தீபிக” எனும் தெலுங்கு புத்தகம், மிகவும் பழமையானது. அருமையான மருத்துவக் குறிப்புகளை அள்ளித்தரும் அற்புதமான புத்தகமிது.


குழந்தை குறையில்லாது பிறக்க!!!(For getting a Normal Child)

குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்!!!

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)

ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.
கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்
மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது.
உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண் குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.
ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக இருக்கும்.
சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல் இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும்.
சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.
இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.
கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும்.
இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும் சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.
சரி... எந்த நிலையில் தான் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்.
தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.
இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.
உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.
ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.




ஜுரம் (Soup or Rasam for Fever)!!!


ஜுரம் வந்தவங்க சீக்கிரம் தேற, இந்த ரசத்தை வச்சுக் கொடுங்க!!!

‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி

ஊ ரெல்லாம் டைபாய்டு, காலரா, சிக்குன் குனியானு ஒரே ஜுரமா இருக்கில்லையா? பொதுவா டைபாய்டு ஜுரம் வந்தவங்க நோய் நீங்கி, நார்மல் நிலைக்கு வந்தப்புறமும் கொஞ்சம் பலவீனமாவே இருப்பாங்க. அப்படி நோய்லருந்து எழுந்தவங்க சீக்கிரம் தேற, நான் சொல்ற ரசத்தை வச்சுக் கொடுங்க.

அரை டம்ளர் பயத்தம்பருப்பை குழைய வேக வச்சுக்கோங்க! நாட்டுத் தக்காளி ரெண்டை முழுசா வேக வெச்சு, தோலுரிச்சு, மிக்ஸியில அரைச்சு பயத்தம் பருப்போட சேருங்க. தாராளமா பெருங்காயப் பொடி தூவுங்க. இதுல, ஒரு அங்குல நீள இஞ்சித் துண்டை தோல் நீக்கி, பொடியா நறுக்கி சேருங்க. ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில வறுத்து, பொடிச்சுப் போடுங்க. அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு, விளாவி, இதை அடுப்புல வெச்சு சூடு பண்ணுங்க. ருசிக்கு தகுந்த மாதிரி உப்பு போட்டுக்குங்க. ரசம் ஒரு கொதி வந்ததும், கால் டம்ளர் தண்ணி விட்டு விளாவி இறக்கிடுங்க. புளிப்புக்கு ஏத்த மாதிரி எலுமிச்சைச் சாறு ஊத்துங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில சீரகம் தாளிச்சு கொட்டுங்க.

நல்லா குழைய வடிச்ச சாதத்துல, இந்த ரசத்தை தாராளமா ஊத்தி, கரைச்ச மாதிரி குடிச்சா.. ரெண்டாம் நாளே உடம்புல தெம்பு ஊறி கும்முனு எழுந்து உக்காந்துடுவாங்க. அப்புறம் ஒரு வாரத்துக்கு இதே மாதிரி ரசம் பண்ணி, கூடுதலா அரை டீஸ்பூன் மிளகும் பொடிச்சுப் போட்டு சாப்பிடக் கொடுங்க. வாய்க்கு ருசி... உடம்புக்கும் பலம்!

கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!!!

கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!
ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.
கருணையுள்ளம் கொண்ட மகான் அப்பெண்ணை ஆசீர்வதித்து கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.
தெய்வத்தின் குரலாக அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம்
செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள், இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.
அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

இரத்தக் கொதிப்பா (BLOOD PRESSURE) பற்றி தகவல் !!!



இரத்தக் கொதிப்பா (BLOOD PRESSURE) பற்றி தகவல் !!!

இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இரத்தக் கொதிப்பை சில எளிய வழிகளில் கட்டுப்படுத்தலாம். இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இரத்தக் கொதிப்பு இருக்கிறதா? அப்படியானால் இதோ சில யோசனைகள்:
* இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.
* சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.
* தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும்.
* அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். மன வேலைகளில் ஈடுபடும் பொழுது இரண்டு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிஷமாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் அறையிலாவது சற்று நடமாடினால் போதும். உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
* மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. இரண்டு தடவையாவது தினசரி மலம் கழிய வேண்டும். ஆறு தடவை ஜலபாதை செய்ய வேண்டும். நன்றாக வேர்வையும் வர வேண்டும்.
* உடலில் ஆல்கலைன் சத்து அதிகம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இழையங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, இளஞ் செல்லுகளை வளர்த்துப் புத்துயிர் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள்.
* இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்வதே. இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும்.
* இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. அரைப் பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.
* மனக்கிளர்ச்சி கூடாது. கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளைக் கோளங்களைப் பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாயிருங்கள்.
* சாத்வீகமாக வாழுங்கள். அதிக இரத்தக் கொதிப்பு என்றால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிதமாக இருக்க வேண்டும்.

பாட்டி வைத்தியம் - கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து !!!

பாட்டி வைத்தியம் - கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து !

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்... வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும். 
அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க... கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும்.
ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்... பிரச்னை சரியாகிடும்.
சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு!
சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும். ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
பொதுவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்...
ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும். குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.
ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.
பி றந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! 
தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.
குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.
மார்கழி பனி கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.
இப்பல்லாம் ‘குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது’னு பேசிக் கறாங்களே... இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி!



கண்நோய் வராது காக்கும்.கண் மை !!!

:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது
காக்கும்.கண் மை !!!
வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

பெங்களுரு பிஸிபேளாபாத் !!!


பெங்களுரு பிஸிபேளாபாத்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - 300 கிராம்,
துவரம் பருப்பு - 150,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 400 கிராம்,
நல்லெண்ணெய் - 100 கிராம்,
தனியா - 50 கிராம்,
பெருங்காயம் - 10 கிராம்,
ஏலம் - 2 கிராம்,
கசகசா - 10 கிராம்,
லவங்கம் - 2 கிராம்,
பட்டை - 2 கிராம்,
புளி - 100 கிராம்,
சிறிய வெங்காயம், பச்சை பட்டாணி, கேரட் - தேவையான அளவு, கடுகு - தாளிக்க சிறிதளவு,
தனியாத்தூள்
, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெந்த முருங்கை விழுது - ஒரு கப்.

செய்முறை:

அரிசி, பருப்பை களைந்து 3 பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் நன்றாக வேக விடவும்.

புளியைக் கரைத்து அதில் மஞ்சள்தூள், தனியாதூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, முதலில் வெங்காயத்தை வதக்கவும். பிறகு கேரட்,கடைசியாக பச்சைப்பட்டாணியைப் போட்டு வதக்கவும். இத்துடன் முருங்கை விழுதையும் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் போட்டு இன்னும் கொதிக்க விடவும்.இந்தக் கலவையை குக்கரில் வெந்து ரெடியாகவுள்ள அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.

வெறும் வாணலியில் கசகசா, தனியா, கிராம்பு, பேடிகை மிளகாய் (மைசூர் மிளகாய்), பட்டை, ஏலம், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதை ரெடியாகவுள்ள சாதக் கலவையில் தூவிக் கிளறினால் பிஸிபேளாபாத் ரெடி.

வாணலியில் நெய்விட்டு முந்திரி,சிறிதளவு கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை மூன்றையும் சிவக்க வறுத்து பிஸிபேளாபாத் மேலே தூவவும்.