Tuesday 16 June 2015

நவாபி பிரியாணி !!!

நவாபி பிரியாணி !!!
தேவையானவை :
பாஸ்மதி ரைஸ் - ஒரு கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி- அரை கப்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - புளித்தத்
நெய் அல்லது எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
அரைக்க:
புதினா இலைகள் - அரை கப்
பச்சைமிளகாய் - 3
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி - 2 சிறு துண்டுகள்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் - கால் கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மீடியம் சைஸ் க்யூப்களாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய வட்டமான ஸ்லைஸ்களாக வெட்டி கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி இரண்டு க‌ப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீர‌கம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து லைட் பிரவுனாக நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே வெந்து கொண்டிருக்கும் பச்சைப் பட்டாணிக் கலவையில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். ஊற வைத்த அரிசியை நீர் வடித்து, இதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு சிம்மில் வையுங்கள். 20 முதல் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூடான பிரியாணி ரெடி. ரைத்தாவோடு பரிமாறினால், மிகவும் சுவையாக இருக்கும்.


பத்திய சமையல்!!!

பத்திய சமையல்!
‘‘மழை, குளிர் காலங்களில் சளி, இருமல், ஜலதோஷத்தால் பலரும் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால், அஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவற்றை வீட்டிலிருக்கும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்’’ என்று கூறும் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி, இந்த இதழில் மிளகுக் கஷாயம், இஞ்சிப் பச்சடி தயாரிக்கும் முறைகளைக் கூறுகிறார்.
மிளகுக் கஷாயம்
தேவையானவை:
மிளகு, சீரகம், தனியா (மல்லி) - தலா கால் கப்
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சுக்கு, நசுக்கிய சித்தரத்தை - தலா 3 டேபிள்ஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா(மல்லி), ஓமம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வறுத்து,
4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, அது இரண்டு டம்ளராக சுண்டியதும் இறக்கவும். இதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வடிகட்டியவற்றை தனியே எடுத்து வைத்து, அன்று மாலையே மீண்டும் 3 டம்ளர் நீர் விட்டு, அது ஒன்றரை டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
தீர்வு:
சித்தரத்தை, சளியை அறுத்து வெளியே கொண்டுவந்துவிடும். பனங்கற்கண்டு, இருமல் போக்கும். மிளகு, சீரகம், தனியா, ஓமம், பித்தத்தை அகற்றி, செரியாமையை நீக்கும்.
இஞ்சிப் பச்சடி
தேவையானவை:
நடுத்தரமான இஞ்சி (பிஞ்சாகவும் இல்லாமல், முற்றலாகவும் இல்லாமல் நடுத்தரமாக வாங்கவும்) - 250 கிராம்
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்கு அளவு
காய்ந்த மிளகாய் - 3
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியைத் தோல் நீக்கி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைக்கவும். வெறும் வாணலியில் கடுகு, பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து (தேவைப்பட்டால் சில துளிகள் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம்), நறுக்கிய இஞ்சி, வறுத்த பொருட்கள், வெல்லம், உப்பு, மிளகாய், புளி சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, அரைத்து, விழுதை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதை 3, 4 தினங்கள் உபயோகிக்கலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்துச் சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
தீர்வு:
நல்ல செரிமானம் ஏற்படும். வாயுத்தொல்லை தீங்கும். சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.


Wednesday 3 June 2015

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு !!!



தேவையான பொருட்கள்: சுண்டக்காய் – 1 கப் வெந்தயம் – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் மல்லி – 2 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 புளி – 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்) சின்ன வெங்காயம் – 10 வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு தாளிப்பதற்கு… கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!