Tuesday 22 March 2016

Household Tips!!!

உங்கள் வேலையை சுலபமாக்க சில டிப்ஸ் !!!
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர் விட்டுக் குலுக்கினால் சுத்தமாகிவிடும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? அரைத்த மாவில்இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும்; கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும்; மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
தக்காளி சட்னி செய்யும்போது. எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால், மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
வயிற்றுப் புண் உள்ள வர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை குடித்தால், நிவாரணம் கிடைக்கும்
காரக்குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால்.. காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.
பொங்கல் செய்யும்போது முழு மிளகை போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க, மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்!
கை நகங்களுக்குக் கீழே கருமை நிறம் ஏறியிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயுடன் சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
காலிஃப்ளவரை பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல், எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து... இதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து துவையல் அரைக்கலாம். இது சுவையும், சத்தும் மிக்கது.
போண்டா அல்லது வடைக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால், மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக் கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால், மாவு கெட்டியாகி இருக்கும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடையோ, போண்டாவோ செய்யும்போது மொறுமொறு என்று இருப்பதுடன், எண்ணெயும் அதிகம் குடிக்காது.

Saturday 19 March 2016

Maharasanam exercise for Health!!!

மகராசனப் பயிற்சி -உடலில் ஓட்டங்கள் சீராக இயங்கினால்தான் சிறப்பாக வாழ முடியும்!
'வேலைக்குக் கிளம்பி, பஸ்லயோ டூவீலர்லயோ ஆயிரத்தெட்டு சிக்னல்களைக் கடந்து, ஆபீசுக்குப் போய் வேலையைச் செய்யறதே பெரும்பாடா இருக்குது. அதிலேயும் பஸ் நெரிசல்ல, கூட்டத்துல நசுங்கி, புழுங்கி, கீழே இறங்கும்போது, வியர்வை ஆறா வழியும். இதுவே மிகப் பெரிய உடற்பயிற்சிதானே..?'' என்று சென்னையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேடிக்கையும் ஆதங்கமுமாகக் கேட்டார்.
அவரிடம் சிரித்தபடி சொன்னேன்... ''பேருந்தில் கூட்டத்தில் பயணம் செய்கிறீர்கள். இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டு வருகிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு பக்கமும், உங்கள் கை பிடித்திருக்கும் இடம் ஒரு பக்கமும் என பக்கவாட்டிலோ சாய்வாகவோ நின்றிருப்பீர்கள். அப்போது அருகில் இருப்பவர் தடாலென்று உங்கள் மீது சாய்வார். அல்லது, திடீர் பிரேக் போடுகிற வேளையில், நீங்கள் எந்தப் பக்கத்திலேனும் அப்படியே சாய்வீர்கள். அந்த வேளையில், கழுத்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்திருக்கலாம். உங்கள் இடுப்பு சட்டென்று பிடித்துக் கொள்ளலாம். மேலே பிடித்தபடி இருந்த உங்கள் கை லேசாக வேறு பக்கமாக முறுக்கித் திரும்பலாம்.
அதாவது ஒரு நிலையில், ஓர் ஒழுங்கில் இல்லாமல் உடலுறுப்புகள் இப்படி நிலை மாறுகிறபோது, அதனால் உங்களுக்கு உடலில் வலியும் அயர்ச்சியும்தான் இருக்குமே தவிர, அது எப்படி உடற்பயிற்சி செய்ததாக அமையும்?!
மழையில் நனைந்துவிட்டால், அது குளித்ததாக ஆகிவிடுமா? என்னதான் மழையில் நனைந்து, சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்தாலும், ஒரு இரண்டு சொம்பு தண்ணீரை எடுத்துவிட்டுக் கொண்டால்தானே நீராடிய திருப்தி கிடைக்கும்! அப்படித்தான்... உடம்புக்கு அதிக வேலை கொடுத்திருக்கிறோம், உடம்பில் இருந்து அதிகமாக வியர்வை வழிந்தோடுகிறது என்பதாலேயே, அது உடற்பயிற்சி செய்ததற்கு ஈடாகிவிடாது.
முறைப்படி, கால்களையும் கைகளையும் உடலையும் முதுகையும் ஒழுங்குக்குக் கொண்டு வந்து, முறையாக வைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டால்தான், அந்தந்த உறுப்புகளுக்குப் பலன்கள் போய்ச் சேரும்'' என்று விவரித்தேன்.
அந்த அன்பர் புரிந்துகொண்டு, பயிற்சியில் இறங்கினார். குறிப்பிட்ட காலத்துக்குள் அவரிடமும் அவரது உடலிலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அந்த மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம்... மனவளக்கலைப் பயிற்சிகளில் உள்ள மகராசனப் பயிற்சிதான்!
அந்தப் பயிற்சியின் அடுத்த நிலையைப் பார்ப்போமா?
இந்தப் பயிற்சியில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் என்பது நினைவிருக்கிறதுதானே?! இரண்டு கைகளை, இரண்டு பக்கமும் நீட்டியபடி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். வலது காலின் பெருவிரல் மற்றும் அடுத்த விரல் ஆகியவற்றைக் கொண்டு, மற்றொரு காலின் குதிகால் பகுதியைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே செய்ததுபோல், வலது பக்கமாகத் திரும்புங்கள். அப்போது கால்களும் வலது பக்கமாகவே திரும்பட்டும். அடுத்து இடது பக்கமாக கழுத்தைத் திருப்பிச் செய்கிறபோது, கால்கள் அப்படியே இடது பக்கமாகத் திரும்பட்டும். அப்படிச் செய்கிறபோது, முந்தைய பயிற்சிகளின்போது கைகளை எப்படித் திருப்பி வைத்துக் கொண்டீர்களோ அதே போல் திருப்பி வையுங்கள்.
வலது, இடது என மும்மூன்று முறை இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
இதையடுத்து, கால்களை மாற்றிக்கொண்டு பயிற்சியைச் செய்ய வேண்டும். அதாவது, வலது கால் பெருவிரலைக் கொண்டு இடது காலைப் பிடித்துக்கொண்டு பயிற்சி செய்தீர்கள் அல்லவா? இப்போது, இடது காலின் பெருவிரல் மற்றும் அதன் அடுத்த விரல் ஆகியவற்றின் உதவியுடன் வலது காலின் குதிகாலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
கழுத்தை இடது பக்கமாகத் திருப்பும்போது கால்கள் உட்பட மற்ற பாகங்களும் அப்படியே இடது பக்கத்தில் திரும்பட்டும். பிறகு வலது பக்கம் எனில், வலது பக்கமாகத் திருப்புங்கள். இதையும் மூன்று மூன்று முறை செய்யுங்கள்.
அடுத்து, இரண்டு பக்கமும் நீட்டியபடி வைத்திருந்த கைகளை மடக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொண்டு, ஒன்றையன்று பார்ப்பது போலவும் தொடுவது போலவுமாக வைத்துக் கொள்ளுங்கள். விரல்களும் விரல்களும் தொட்டுக்கொண்டிருக்க... அவற்றை முகத்துக்குக் கீழே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, குப்புறப்படுத்த நிலையில் இருந்து மாறாமல், உங்களின் முகத்துக்குக் கீழே இப்படி கைகளை வைத்துக் கொண்டு, தலையையும் கைகளையும் தரையை விட்டு லேசாகத் தூக்கி வைத்தபடி இருங்கள்.
இப்போது உடலின் மொத்தப் பளு முழுவதும் வயிற்றில் இருக்கும்படியாக, நெஞ்சுப் பகுதியை லேசாக தரையில் இருந்து தூக்கிக் கொள்ளுங்கள். இதையடுத்து உடலை வலது புறமாக அப்படியே திருப்புங்கள். கைகளையும் வலது புறத்தின் பக்கவாட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். அப்படி வலது பக்கமாக உடலைத் திருப்புகிறபோது, வலது காலின் கெண்டைக்கால், தொடைப் பகுதிக்கு மேலாக வரும்படி காலை மடக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உடலை பழையபடி நேராக வைத்துக் கொண்டு, இடது பக்கமாகத் திருப்புங்கள். அதாவது, இடது கன்னம் தரையில் அழுந்தியபடி இருக்க, வலது உள்ளங்கையை தரையில் கவிழ்ந்தபடி தலைப் பகுதிக்கு நேராக வைத்துக்கொண்டு, வலது முழங்காலை லேசாக மடக்கி, இடது காலை நன்றாகத் தளர்த்திக் கொள்ளுங்கள். இடது உள்ளங்கையை மேல்புறமாக விரித்தபடி உடலுடன் ஒட்டி, தரையில் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மெள்ள மூடிய நிலையில், சிறிது ஓய்வெடுங்கள்.
ஓய்வு... ஓய்வு... ஓய்வு..!
மகராசனத்தில் உள்ள முக்கியமான இந்தப் பயிற்சிகளின் நிறைவாக, இந்த பயிற்சியைச் செய்து முடிக்க... உடம்பு மொத்தமும் தக்கையாகும். மனசு முழுவதும் பளிச்சென்றாகியி
ருக்கும். தேவையற்ற சதைகள், மெள்ள மெள்ளக் குறையத் துவங்கியிருக்கும்.
உங்களால் எந்த வேலையையும் செய்வதற்கு உடலில் தெம்பும், மனதில் ஒன்றிப் போகிற நிலையும் வந்துவிடும். ஒருநாளில் எத்தனை வேலைகளைச் செய்ததாலும் புத்துணர்ச்சியுடன் செய்து முடிப்பதற்கான வகையில் உடலும் உடலின் பாகங்கள் மொத்தமும் தயாராக இருந்து துணை நிற்கும்!
இந்தப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், உடல் சோர்வு என்பதே இருக்காது. கால்களில் வலுவேறியிருக்கும். ஊளைச் சதை முற்றிலுமாகக் குறைந்திருக்கும். ஆண் அல்லது பெண்ணுக்கு இருந்த மலட்டுத் தன்மை நீங்கிவிடும். குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.
முதுகெலும்பில் இருந்து உடல் முழுவதும் செல்கிற நரம்பு மண்டலம் அனைத்தும் பலம் பெற்றுவிடும். தண்டு வடத்தில் வலியோ நரம்புத் தளர்ச்சியோ இருக்காது.
உடல் முழுவதும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியவை சீராகப் பாயத் துவங்கும்.
ஓட்டம் ஓட்டம் என்று இருக்கிற இந்த உலக வாழ்க்கையில், உடலில் இந்த ஓட்டங்கள் அனைத்தும் சீராக இயங்கினால்தான், நாம் சிறப்பாக வாழ முடியும்!
காசு - பணம் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை, நோயுடன் குடித்தனம் செய்கிற வாழ்க்கை... மிகக் கொடுமையானது. என்ன... புரிகிறதா அன்பர்களே!

Wednesday 16 March 2016

For Pregnant Ladies!!!

கருத்தரித்த பெண் வைத்திய முறைகள் - மரியாதையை சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.!!!
கருத்தரித்த பெண்ணுக்கென நம் பாரம்பரியம் தேடித்தேடிச் சொன்ன வைத்திய முறைகளை மெள்ள மெள்ள மறந்துவிட்டோம். 'கன்சீவ் ஆயிட்டீங்களா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா உடனே போய்ப் பாருங்க' என மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டும் நம்பி இருக்கும் கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது.
மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத் துறை. ஆனால் கருத்தரித்த காலம் முழுமையும், மருந்தையும் டானிக்கையும் தாண்டி மற்ற எந்தப் பாரம்பரிய மருத்துவ விஷயங்களையும் புறக்கணிப்பது வேதனையான விஷயம். தம் குடும்ப மருத்துவரை அணுகி தேவையான பாதுகாப்பு விஷயங்களை அறிந்துகொள்வதும், தன் உடல் நோய் எதிர்ப்பாற்றல், சர்க்கரை, ரத்தக்கொதிப்பின் அளவு, தொற்று நோய்கள் இருப்பு ஆகியவற்றை, கருத்தரித்த பெண் அறிந்துகொள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ அறிவியல்தான், மகப்பேறுகால உயிரிழப்பையும், பேறுகாலத்தின்போது குழந்தை மரணம் அடைவதையும் பெருவாரியாகக் குறைத்திருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள் அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிசேரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் பெண்களின் இடுப்பு (Pelvic) நலம் குறைந்தது காரணமா? அல்லது சிசேரியன் பிரசவம், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் மருத்துவருக்கு கொஞ்சம் ரிஸ்க் குறைவு என்ற நிலை காரணமா? அல்லது 'சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில், இத்தனையாவது நாழிகையில் பாப்பாவை எடுத்து தர எவ்வளவு ஃபீஸ் ஆகும் டாக்டர்?' எனக் கேட்கும் கூட்டம் பெருகியது காரணமா? 'அய்யோ! இப்பல்லாம் பயலாஜிக்கல் பேபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி வேறயா? மூணாம் நாள் ஆபீஸ் போற மாதிரி சிம்பிளா சிசேரியன் பண்ணிருங்க' என்ற அவசரங்கள் காரணமா?
பாப்பா கனவோடு நிற்கும் கணவனிடம், 'குழந்தை மெக்கோனியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம் குழந்தை சஃபகேட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபரேஷன் பண்ணிடலாமா? நீங்க சொல்லுங்க' என மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் கேட்க, அந்தக் கணத்தில் கடவுளாக மட்டுமே அவரைப் பார்த்து, 'நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும் பத்திரமா வேணும்' எனும் பயம் கலந்த பதில் காரணமா?' - இவற்றை நான் கேட்கவில்லை; உலக சுகாதார நிறுவனம் கேட்கிறது!
கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுத்தங்கஞ்சி போதுமானது. கர்ப்பக்காலத் தொடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்பையின் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நலம் அளிக்கும். தாமரைப் பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். ஃபோலிக் அமிலம் நிறைந்த, வலி நிவாரணி தன்மையுடைய, வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலுடைய, ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடைய, இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்த இந்த மூலிகைகள், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், தாய்-சேய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான உணவுகள் பல கிடைக்கக்கூடும்.
வண்ணமுள்ள பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி கொண்ட உணவு, கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கேழ்வரகு அடையும் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரணம். அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும் பெருகிவரும் சர்க்கரை நோயைக் (Gestational diabetes) கண்டு பதறத் தேவை இல்லை. தேவைப்பட்டால் உரிய மருத்துவமும், வெள்ளைச் சர்க்கரை இல்லாத உணவும் இவர்களுக்குக் கொடுப்பது அவசியம். தினசரி உணவில் வெந்தயம், கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்வது, கூடுதல் கட்டுப்பாட்டைத் தரும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்' என 23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்' என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'நவீனத் தாவரவியலின் தந்தை' கார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.

Monday 14 March 2016

Tamil Medicine explained!!!

உடலையும், உணவையும் புரிந்து கொள்ள நம் முன்னோர்கள் என்ன விஞ்ஞானிகளா என்ன?
ஆம். விஞ்ஞானிகள்தான். உணவியல், உடலியல், உளவியல், உலகியல் என்னும் நான்முகத் தத்துவத்தையும், அவர்களின் அறிவியலையும் நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.
கிச்சன் டூ கிளினிக் - முதல் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/04/to.html
கிச்சன் டூ கிளினிக் - இரண்டாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post.html
கிச்சன் டூ கிளினிக் - மூன்றாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_16.html
கிச்சன் டூ கிளினிக் - நான்காம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_12.html
கிச்சன் டூ கிளினிக் - ஐந்தாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_93.html
கிச்சன் டூ கிளினிக் - ஆறாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_17.html
கிச்சன் டூ கிளினிக் - ஏழாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_80.html
கிச்சன் டூ கிளினிக் - எட்டாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_34.html
கிச்சன் டூ கிளினிக் - ஒன்பதாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_28.html
கிச்சன் டூ கிளினிக் - பத்தாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_27.html
கிச்சன் டூ கிளினிக் - பதினொன்றாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_44.html
கிச்சன் டூ கிளினிக் - பனிரெண்டாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_56.html
கிச்சன் டூ கிளினிக் - பதிமூன்றாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_85.html
கிச்சன் டூ கிளினிக் - பதிநான்காம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_82.html
கிச்சன் டூ கிளினிக் - பதினைந்தாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_67.html
கிச்சன் டூ கிளினிக் - பதினாறாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_18.html
கிச்சன் டூ கிளினிக் - பதினேலாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_64.html
கிச்சன் டூ கிளினிக் - பதினெட்டாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_9.html
கிச்சன் டூ கிளினிக் - பத்தொன்பதாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_88.html
கிச்சன் டூ கிளினிக் - இருபதாம் பகுதி. . .
http://reghahealthcare.blogspot.com/2015/07/
blog-post_35.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி. . .21
http://reghahealthcare.blogspot.com/
2015/07/21.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி. . .22
http://reghahealthcare.blogspot.com/
2015/07/22.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி. . .23
http://reghahealthcare.blogspot.com/
2015/07/23.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி. . .24
http://reghahealthcare.blogspot.com/
2015/07/24.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி. . .25
http://reghahealthcare.blogspot.com/
2015/07/25.html
கிச்சன் டூ கிளினிக் - பகுதி . . .26
http://reghahealthcare.blogspot.com/
2015/07/26.html
இதை தொடரை எழுதிய அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் அவர்களுக்கும் அதை வெளியிட்ட ”குங்குமம்” வார இதழிலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

Liver Purifiers!!!

ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையைய
ும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் நல்ல முறையில் வாழ்ந்து சாதிப்போம்...!
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்!

Sunday 13 March 2016

Kitchen Tips!!!

வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும். (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:




காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.


Kanchana Radhakrishnan at 6:4

Wednesday 9 March 2016

Oil for Paralytic + Other Diseases!!!

வாத எண்ணெய்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்

தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

Tuesday 8 March 2016

நோய்களைத்தீர்க்கும் இறைவழி மருத்துவம் !!!
இன்றுகாலை http://www.spiritualres
earchfoundation.org/ என்ற தளத்தைப் பார்த்தேன்.எல்ல
ா நோய்களுக்கும் மருத்துவத்தினால் மட்டும் தீர்வு காணமுடியாது என்றும்,நோய்களுக்கு காரணம் கண்திருஷ்டி,கர்
மவினை,ஆவிகள் நம் உடலில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்று ஆராய்சிமூலம் தெரிவித்து இருந்தார்கள்.எல்லா நோய்களையும் ஒருவரிமந்திரங்களை பீஜமந்திரத்துடன் தொடர்ந்து ஜெபிப்பதால் குணப்படுத்தமுடியும் என்று அந்தமந்திரங்களை சொல்லி இருந்தார்கள்.மிக ஆச்சரியமாக இருந்தது.உடனே ஏறத்தாழ 11 பக்கங்களில் இருந்த அந்த நோககளுக்கான மந்திரங்களின் பட்டியலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டேன்.என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்துகளுடன்,அந்த மந்திரங்களையும் எழுதிக்கொடுத்து தினமும் ஜெபிக்கச் சொல்லவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.ஆவிகள் பற்றியும்,அதனால் உடலில் - மனதில் ஏற்படும் பாதிப்புகள் பர்றியும்,குடிப்பழக்கம்/அதிக காம இச்சைக்கும் ஆவிகளே காரணம் என்ற அவர்களின் ஆராய்ச்சி ஆச்சரியமூட்டியது.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் பற்றிய லிங்க் இதோ:-பிரிண்ட் செய்ሿநோய்களைத்தீர்க்கும் இறைவழி மருத்துவம் !!!
இன்றுகாலை http://www.spiritualres
earchfoundation.org/ என்ற தளத்தைப் பார்த்தேன்.எல்ல
ா நோய்களுக்கும் மருத்துவத்தினால் மட்டும் தீர்வு காணமுடியாது என்றும்,நோய்களுக்கு காரணம் கண்திருஷ்டி,கர்
மவினை,ஆவிகள் நம் உடலில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்று ஆராய்சிமூலம் தெரிவித்து இருந்தார்கள்.எல்லா நோய்களையும் ஒருவரிமந்திரங்களை பீஜமந்திரத்துடன் தொடர்ந்து ஜெபிப்பதால் குணப்படுத்தமுடியும் என்று அந்தமந்திரங்களை சொல்லி இருந்தார்கள்.மிக ஆச்சரியமாக இருந்தது.உடனே ஏறத்தாழ 11 பக்கங்களில் இருந்த அந்த நோககளுக்கான மந்திரங்களின் பட்டியலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டேன்.என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்துகளுடன்,அந்த மந்திரங்களையும் எழுதிக்கொடுத்து தினமும் ஜெபிக்கச் சொல்லவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.ஆவிகள் பற்றியும்,அதனால் உடலில் - மனதில் ஏற்படும் பாதிப்புகள் பர்றியும்,குடிப்பழக்கம்/அதிக காம இச்சைக்கும் ஆவிகளே காரணம் என்ற அவர்களின் ஆராய்ச்சி ஆச்சரியமூட்டியது.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் பற்றிய லிங்க் இதோ:-பிரிண்ட் செய்து வைத்துக்கொண்டு எல்லோருக்கும் கொடுத்து உதவலாமே !
http://www.spiritualresearchfoundation.org/userfiles/file/Spiritual%20Healing%20Chants%20_Opt.pdfӿど델闩ࠄ

Monday 7 March 2016

To View TV Channels!!!

எல்லா TV Channel களையும் பார்க்ககூடிய ஓர் சிறந்த Application
Download Here
http://www.tamilcomputerdoctor.com/
2016/03/sri-lanka-india-tv-channel-appl
ication.html.