Thursday 31 May 2018
B.P. cure!!!
Monday 28 May 2018
FLOWER Medicine for Kidney
Veeraragavan AR.: 🌸🌸 மனம் – மனிதன் – மலர் மருந்துகள்…! – பகுதி - 2 🌸 மனம் பாதிப்படையும் போது உடல் பாதிப்படைகிறது. மனதிற்கு என்ன விதமான பாதிப்புகள் நேர்கிறதோ அது தொடர்பான உடல் உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 🌸 சிறுநீரகங்களில்(Kidneys) உண்டாகும் கற்களால் வலி, சிறுநீரக அழற்சி, மற்றும் அனைத்து விதமான சிறுநீரக பாதிப்புகளையையும் ஜென்ஷன் (Gentian) என்ற மலர் மருந்து குணப்படுத்தும். 🌸 ஒருவருக்கு சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்றால், அவருக்கு நீண்ட நாட்கள் முன்னர் ஏற்பட்ட துயரங்களிலிருந்து அவர் விடுபடவில்லை என்று பொருள். இவர்கள் எதிர்மறையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டும், மற்றவர்களிடம் நம்பிக்கை கொள்ளாமலும் இருப்பார்கள். உறுப்படியில்லாத நம்பிக்கைகளையும் பழைய வேண்டாத நினைவுகளையும் அவர்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பர். அவர்கள் பழைய நினைவுகளில் மட்டுமே மூழ்கி இருப்பதால் அவருக்கு தற்போதைய வாழ்க்கைக்குத் தேவையான ந் நினைவுத்தித் திறன் குறைவாகவே இருக்கும் (Short-term Memory) 🍁 இவர்களுக்கு ஜென்ஷன் (Gentian) தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தால், அவரின் பாதிப்புகள் குணமாகும்.
@@@@
மலர் மருத்துவ அனுபவக் குறிப்புகள் : 1
ஒருவர் பேசும்போது ஹாஸ்யமாக, அடிக்கடி ஜோக்குகளை உதிர்ப்பவராக இருந்தால் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து Agrimoni ஆக இருக்கலாம்.
அதைப் போல சிலர் பேசும்போது அடிக்கடி ஒரு பழமொழியை ஒப்புமை படுத்தி பேசுவார்கள். அப்போது நமக்கு நினைவில் வரவேண்டிய மலர் மருந்து Beech.
மேற்கண்டவர்களுக்கு குறிப்பிட்ட மலர்மருந்தை தினம் ஒரிரு வேளைகள் தொடர்ந்து சில வாரங்கள் கொடுத்துவர அவர்களது நோய் நிலை, அது எதுவாக இருந்தாலும் குறைந்து அவர் முற்றிலும் குணமாகிவிடுவர்.
இது எவ்வாறு என்பதனை Agrimoni மற்றும் Beech மலர் மருந்துகளை நாம் நன்கு படிப்பதால் புரிந்து கொள்ளலாம்.
@@@@@@@@@
மலர் மருத்துவ அனுபவக் குறிப்புகள் : 2
ஒருவர் புதியவர்களைக் காண தயக்கம் காட்டுகிறார் என்றால் (Hesitation with Strangers) அவருக்கு பொருத்தமான மலர் மருந்து Aspen. அதிக வெட்கப்படுபவர்களுக்கும் கோழைகளுக்கும் Aspen ஒரு “almost a Specific
Friday 25 May 2018
Tips!!!
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...
Nipah VIRUS
HOMEO TIPS!!!
Tip of the day*
(An idea. A concept )
Obesity in children (calc carb)
Obesity in youth age(Ant crud)
Obesity in old age (Baryta c;Kali C)
Obesity in females(Puls;Graph)
(From suppressed menses)
Obesity in males;lax fibre&sluggish peoples (capsicum)
Obesity with heels pain&rough skin(Phtolacca).
Obesity with fatty degeneration of heart(Aur met).
Obesity with large buttoks;body fat;thin legs(Amon mur).
Obesity with anaemia; face puffy with pitting of flesh(Ferr met).
Thyroidinum is good remedy for reducing fat.
(H. C. L) Khanewal
Thursday 24 May 2018
Grey hair!!!
தலைமுடி உதிர்வு, வெள்ளை முடி, பொடுகு, மீண்டும் முடி வளர ஒரே தீர்வு
தேவையான பொருட்கள்
*கருஞ்சீரகம் -3ஸ்பூன்
*வெந்தயம்-3ஸ்பூன்
*தேங்காய் எண்ணெய்-200ml
(கருஞ்சீரகம் நாட்டு மருந்து கடைஅல்லது இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்)
செய்முறை
*கருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
*வெந்தயத்தையும் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
*பிறகு இரண்டு பவுடர்களையும் ஒன்றாகச் சேர்க்கவும்.
*இந்த கலவைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை சூடு செய்யவும். அந்த தேங்காய் எண்ணெய் கலவையை மற்றொரு பாத்திரத்தில் வைத்து தண்ணீருக்கு நடுவில் வைக்கவும்.
*சிறிது நேரங்கழித்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கவும்.
பயன்படுத்துதல்:
*இந்த எண்ணையை தலையின scalf -ல் படும்படி தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.
*அரை மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு தலையை குளிக்கவும். *வாரத்திற்கு 3 அல்லது 4முறை செய்யவும்.
*தொடர்ந்து செய்யவும் நல்ல பலன்கிடைக்கும்.
இந்த எண்ணெய்யின் பயன்கள்
*கருஞ்சீரகதில் அநேக புரதங்கள் உள்ளன.வைட்டமின் ஏ ,பி ,சி ,இ மற்றும் ஒமேகா 3,6,9 பேட்டி அசீட்ஸ் மேலும் பல புரதங்களை கொண்டது.
*வெந்தயமமும் அநேக புரதங்களை கொண்டது.வைட்டமின் ஏ,iron,பாஸ்பரஸ்,
மங்கனீசியம்,நியாசின்,சோடியம்,கால்சியம் மேலும் பல புரதங்களை கொண்டது.
*கருஞ்சீரகம் scalf -ல் கிருமித்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும் பொடுகு இருந்தால் சரி செய்யும்,இளநரை முடியை கருமையாக்கும்.மீண்டும் முடி வளர உதவும்.வழுக்கை ஏற்படாமல் தவிர்க்கும்.முடியும் கருமையாக வளரும்.
*வெந்தயம் முடி வளர மிகவும் உதவும்.வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடி வளர்ச்சியையும் முடி உத்திராமலும் பார்த்துக்கொள்ளும்.உடலின் வெப்பநிலையை சீராக்கும்.கண் குளிர்ச்சி அடையும்.
Thursday 17 May 2018
Tuesday 15 May 2018
வயிற்றுவலி!!!
வயிற்று வலியா?
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?
இதோ சிம்பிள் டிரிக்.
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்!
Friday 4 May 2018
Pregnancy Problems!!!
Wednesday 2 May 2018
Tuesday 1 May 2018
நக்ஷத்திர பரிகாரம்!!!
நட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள்
27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர, நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும். ஆத்ம சுத்தியுடன் , பய பக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள். மங்களம் உண்டாகட்டும். !!!
மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
மிதுன ராசி :
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்
சிம்ம ராசி :
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
விருச்சிக ராசி :
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
தனுசு ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
மகர ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
கும்ப ராசி :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
மீன ராசி :
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்
(OR)
அஸ்வினி -
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி -
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
கார்த்திகை -
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி -
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் -
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை -
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் -
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் -
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் -
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் -
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் -
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் -
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் -
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்துபஸ், ஆட்டோ வசதி உள்ளது.
சித்திரை -
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி -
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
விசாகம் -
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் -
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை -
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
மூலம் -
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் -
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் -
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் -
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் -
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் -
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி -
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி -
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி -
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.
1.மேஷ ராசி காரர்கள் ----ராமேஸ்வரம் ,பழனி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
2.ரிஷப ராசி காரர்கள் ----திருபதி ,திருபரம்குன்றம் , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
3.மிதுனம் ராசி காரர்கள் ----பழனி ,கோடி ஹத்தி பெருமாள் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
4.கடகம் ராசி காரர்கள்--ராமேஸ்வரம்,திருதேவன்குடி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
5.சிம்மம் ராசி காரர்கள்--ஸ்ரீ வாஞ்சியம் ,பருதியப்பர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
6.கன்னி ராசி காரர்கள்--திருகழுகுன்றம் ,திருகண்ணன் மங்கை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
7.துலாம் ராசி காரர்கள்---திருத்தணி ,நரசிங்கம் பேட்டை , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
8.விருச்சகம் ராசி காரர்கள்---காஞ்சிபுரம் ,ஓமந்தூர்,மதுரை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
9.தனுஷு ராசி காரர்கள்--மாயவரம் ,திருவெண்காடு கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
10.மகரம் ராசி காரர்கள்---சிதம்பரம் ,அனந்த மங்களம் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
11.கும்பம் ராசி காரர்கள்---தேவிபட்டினம் ,கும்பகோணம்( கும்பேஈஸ்வரர் ) ,திருகோஷ்டியூர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
12.மீனம் ராசி காரர்கள்---வைதீஸ்வர சுவாமி ,திருவையாறு ,மச்சமுனி தீர்த்தம் (திருபரம்குன்றம் ),திருவலஞ்சுழி
நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்
1.அஸ்வினி:-
ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர்
கோவில், இங்கு பைவருக்கு நாய்
வாகனம் இல்லை.
2.பரணி:-
ஸ்ரீமகா பைரவர்-
திருப்பத்தூர் அருகில் உள்ள
பெரிச்சி கோவில்.
3.கார்த்திகை:- ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி:- ஸ்ரீகால பைரவர்-
பிரம்ம கிரக்கண்டீஸ்வரர்
கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.
5.மிருகசீரிஷம்:- ஸ்ரீ சேத்திரபால பைரவர்-
சேத்திரபாலபுரம் (குத்தாலம்
அருகில்)
6.திருவாதிரை:- ஸ்ரீவடுக
பைரவர்-ஆண்டாள் கோவில்
(பாண்டிச்சேரி-விழுப்புரம்
பாதையில் 18 கி.மீ.)
7.புனர்பூசம்:- ஸ்ரீவிஜய
பைரவர்-பழனி சாதுசுவாமி கள்
மடாலயம்.
8.பூசம்:- ஸ்ரீ ஆவின் பைரவர்-
(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர்
கோவில்.
9.ஆயில்யம்:- ஸ்ரீ பாதாள
பைரவர்-காளஹஸ்தி.
10.மகம்:- ஸ்ரீநர்த்தன பைரவர்-
வேலூர் கோட்டை யின்
ஒரு பகுதியில் உள்ள
ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11.பூரம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-
தேனு புரீசுவரர்கோவில்.
12.உத்திரம்:- ஸ்ரீ ஜடாமண்டல
பைரவர்-சேரன்மகா தேவி அம்மைநாதர்
கைலாசநாதர் கோவில்.
13.அஸ்தம்:- ஸ்ரீ யோக பைரவர்-
திருப்பத்தூர் திருத்தளிநாதர்
கோவில்.
14.சித்திரை:- ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-
மல்லி கார்ச்சுன -
காமாட்சி கோவில் கோட்டை சிவன்
கோவில் என்றும் தகடூர்
காமாட்சி கோவில் என்றும்
இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்-
புதுக்கோட்டை அருகே உள்ள
பொற்பனைக்
கோட்டை தற்போது திருவரங்குளம்
என்று அழைக்கப்படுகிறது.
16.விசாகம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
17.அனுஷம்:- ஸ்ரீ சொர்ண
பைரவர்- கும்பகோணம்
அருகே உள்ள ஆபத்சகாய
ஈஸ்வரர் கோவில்.
18.கேட்டை:- ஸ்ரீகதாயுத
பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர்
கோவில்.
19.மூலம்:- ஸ்ரீ சட்டநாதர்
பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர்
கோவில்.
20.பூராடம்:- ஸ்ரீகால பைரவர்-
அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
21.உத்திராடம்:- ஸ்ரீவடுகநாதர்
பைரவர்-கரூர்-
கல்யாணபசுபதி ஈஸ்வரர்
கோவில்.
22.திருவோணம்:- திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட
பைரவர்-வைரவன்பட்டி-
வளரொளி நாதர் கோவில்.
23.அவிட்டம்: -
சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில்
அஷ்ட பைரவர் சந்நிதி.
24.சதயம்:- ஸ்ரீசர்ப்ப பைரவர்-
சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன்
கோவில் தலம்.
25.பூரட்டாதி:-
கோட்டை பைரவர்-
ஈரோடு அருகே கொக்கரையான்
பேட்டை கிராமத்தில் உள்ள
பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.
26.உத்திரட்டாதி:-
ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-
சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர்
கோவில் கும்ப கோணம்,
பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27.ரேவதி:- ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-
தாத்தையங்கார் பேட்டை,
காசி விசுவநாதர் கோவில்.
12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்
சித்திரை- மது:
சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே
வைகாசி- மாதவர்:
கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே
ஆனி- சுக்ரர்:
த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே
ஆடி- சுசி:
த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்
ஆவணி - நபோ:
சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே
புரட்டாசி- நபஸ்யர்:
பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!
ஐப்பசி- கிஷர்:
ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே
கார்த்திகை - ஊர்ஜர்:
த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே
மார்கழி - ஸஹர்:
வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா
வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம்
சகாக்யம் மாஸ மன்வஹம்
தை- ஸஹஸ்யர்:
ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்
மாசி - தபோ:
சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ
பங்குனி - தபஸ்யர்:
தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.
இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி
என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோக
ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:
அசுவினி சுகந்த தைலம்
பரணி மாவுப்பொடி
கார்த்திகை நெல்லிப்பொடி
ரோகிணி மஞ்சள்பொடி
மிருகசீரிடம் திரவியப்பொடி
திருவாதிரை பஞ்சகவ்யம்
புனர்பூசம் பஞ்சாமிர்தம்
பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் பால்
மகம் தயிர்
பூரம் நெய்
உத்திரம் சர்க்கரை
அஸ்தம் தேன்
சித்திரை கரும்புச்சாறு
சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் இளநீர்
அனுஷம் அன்னம்
கேட்டை விபூதி
மூலம் சந்தனம்
பூராடம் வில்வம்
உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் கொம்பு தீர்த்தம்
அவிட்டம் சங்காபிஷேகம்
சதயம் பன்னீர்
பூரட்டாதி சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி வெள்ளி
ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).
பிறந்த நட்சத்திரமும் வணங்க வேண்டிய கிரகங்கள்!
அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்
ரோகிணி சந்திரன்
மிருகசீரிஷம் செவ்வாய்
திருவாதிரை ராகு
புனர்பூசம் குரு (வியாழன்)
பூசம் சனி
ஆயில்யம் புதன்
மகம் கேது
பூரம் சுக்கிரன்
உத்திரம் சூரியன்
அஸ்தம் சந்திரன்
சித்திரை செவ்வாய்
சுவாதி ராகு
விசாகம் குரு (வியாழன்)
அனுஷம் சனி
கேட்டை புதன்
மூலம் கேது
பூராடம் சுக்கிரன்
உத்திராடம் சூரியன்
திருவோணம் சந்திரன்
அவிட்டம் செவ்வாய்
சதயம் ராகு
பூரட்டாதி குரு (வியாழன்)
உத்திரட்டாதி சனி
ரேவதி புதன்.