Tuesday 30 March 2021

மூலிகை!!!

அடடடா...!
இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!

*"வெப்பம் + இல்லை :  வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"*

*"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"*

*"அகம் + தீ :  அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"*

*"சீர் + அகம் : சீரகம்… More அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"*

*"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.!  காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"*

*"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"*

*"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"*

*"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"*

*இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!*

"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!

அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!"

Tuesday 16 March 2021

மூக்கிரட்டை கீரை!!!

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
நன்றி:
மேலும் தொடர்புகொள்ள:
25 ஆண்டு மருத்துவப் பணியில் மக்கள் சேவகன்
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.
கிளினிக்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க.


Sunday 14 March 2021

கோவில்களில் வாங்கிய கயிறு!!!

#கோவில்களில்தரும் #கயிற்றை #எத்தனைநாள் #கட்டியிருக்கலாம்?

♥🌟 கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றன. 

♥🌟 இன்னும் ஒருசிலர; தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார;ப்போம்.

♥🌟 காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார;கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது. 

#எத்தனை #முடிச்சு #போடவேண்டும்?

♥🌟 கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன. 

#பலன்கள் :

👉 பயத்தை போக்கும்.

👉 தைரியத்தை தரும். 

👉 கர;ம வினைகளை அழிக்கும். 

👉 விபத்துகளிலிருந்து காக்கும்.

👉 ஏவல், பில்லி, சு னியம் செய்வினை போக்கும்.

👉 நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்.

👉 தீயகனவுகளை தோன்றாமல் செய்யும். 

👉 கடன்கள் தீரும். 

👉 பைரவா அருளை பெருக்கும்.

அதை எந்த கையில் கட்டவேண்டும்?

♥🌟 ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

#எத்தனை #நாள் #கட்டவேண்டும்?

♥🌟 இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர;கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார;கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர;நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார; காலிலும் படும்படி போடக்கூடாது. 

♥இது உங்கள் உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும்!...