Friday 8 August 2014

பற்களின் ஆரோக்கியத்திற்கு ஹோமியோபதி மருத்துவம்!!!

பற்கள் துலக்கிய பின் , நமது கைவிரல்கொண்டு ஈறுகளை மெதுவாக அழுத்தம் தரவேண்டும் இப்படி அழுத்துவதால் ஈறுகளின் உள்ளே இருக்கும் அசுத்தம் வெளிவரவும், பற்கள் இறுகவும் வாய்ப்பு இருப்பதால் பற்கள் ஆடுவது தவிர்க்கப்படுகின்றது. இரவு படுக்கும் முன் பற்கல் முழுவதும் நல்ல தேனை தடவி சிறிதுநேரம் கழித்து வாயை கொப்பளித்தால் பல்லில் உள்ள கண்ணுக்கு தெரியாத உணவு கிருமிகள் வெளிவந்து விடும், இது பற்களுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து செய்துவந்தால் ஆடாத ஆரோக்கிய பற்கள் நம்மிடம் இருக்கும்.
பல்வலி சார்ந்த குறிகளும், அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் விபரம்.
மெசிரியம் : பற்களின் அடிப்பாகத்தில் சொத்தை விழுதல், மேல்பாகம்
நன்றாக இருக்கும். நல்ல ப்ற்களில் கூட வலி இருக்கும்.
தூஜா : பற்களின் அடிப்பாகம் நன்றாக இருக்கும், மேல்பாகம்
சொத்தையாக இருக்கும்.
ஹெக்லவாலா : பல்வலி ஏற்பட்டு முகம் முழுவதும் வலி இருக்கும்,
ஈறுகளில் சிறுசிறு கொப்பளங்கள் ஏற்பட்டு வலி
ஏற்பட்டு வலி உண்டாக்கும். பல் பிடுங்கிய பின் ஏற்படும்
வலிகளுக்கு பயன்படும்.
மேக் கார்ப்: பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வலிகள்.
கிரியாசோட்டம் : பொதுவான பற்சொத்தை வலிகளுக்கு பயன்படும்,

ஸ்டாபிசாக்ரியா :கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல்வலிகளுக்கு அற்புதமான
மருந்து, வெதுவெதுபான நீர் பட்டால் வலி குறையும். பல்
அடிப்பாகத்தில் சீல் இருக்கும் அதனால் ஏற்படும் வலி.
இதுபோன்று குறிகளுக்கு ஏற்ப அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகளை தந்தால் வலிகள் குறையும்,
குறிப்பு ; வலிகள் தன்மை, வயது, இதற்கு ஏற்ப மருந்துகளின் வீரியம் மாறுபடும் எனவே ஹோமியோ மருத்துவர் ஆலோசலனைக்கு பின் மருந்துகள் எடுத்துகொள்ளவும்.


எந்த பக்க விளைவும் இல்லாத ஹோமியோபதி மருத்துவம் எடுத்துகொள்வோம் ,மனித நலம், உடல் நலம் காப்போம்.