Tuesday 25 September 2018

Cooking Tips!!!

*போஜன திலகம் கோவை மணி ஐயர் வழங்கும் கிச்சன் டிப்ஸ்...*

● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.

● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..

● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

● தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

● துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

Thursday 13 September 2018

Sleep Apnea!!!

Sleep Apnea Treated By Homoeopathy🔅*

*▪Definition:-*

Sleep Apnea is a potentially serious sleep disorder in which breathing repeatedly stops and starts. If you snore loudly and feel tired even after a full night's sleep, you might have sleep apnea.

▪The main types of sleep apnea are:-

*🔸Obstructive sleep apnea*
The more common form that occurs when throat muscles relax

*🔸Central sleep apnea*
Which occurs when your brain doesn't send proper signals to the muscles that control breathing

*🔸Complex sleep apnea syndrome*
Also known as treatment-emergent central sleep apnea, which occurs when someone has both obstructive sleep apnea and central sleep apnea

*🔸Causes:-*

It occurs when muscles in the back of your throat relax, tonsillitis, adenoids, obesity, middle-aged, heart disease, stroke, sedative medicines, large neck circumference, large tongue etc.

*▪Symptoms:-*

The signs and symptoms of obstructive and central sleep apneas overlap, sometimes making it difficult to determine which type you have. The most common signs and symptoms of obstructive and central sleep apneas include:

- Loud snoring
- Episodes in which you stop breathing during sleep — which would be reported by another person
- Gasping for air during sleep
- Awakening with a dry mouth
- Morning headache
- Difficulty staying asleep (insomnia)
- Excessive daytime sleepiness (hypersomnia)
-Difficulty paying attention while awake
- Irritability

*🔸Homoeopathy Medicine🔸*

*◼Arsenicum Album*
Arsenicum album is often prescribed for individuals who have breathing difficulties at night and is considered for people with a fearful, tense and agitated response to illness.

*◼Lachesis*
Lachesis is a remedy prescribed for conditions that worsen at night. This medicine is designed for people who are typically fearful and anxious, but also prone to jealousy and excessive talking.

*◼Sulphur*
By reputation, sulphur is a commonly prescribed homeopathic remedy, especially for nighttime congestion and sweating. Homeopathic sulphur combats a wheezy cough and congested head, both of which are suffered in sleep apnea.

*◼Spongia Tosta* 
This remedy for croup may help congestive sleep apnea sufferers as it treats respiratory symptoms that worsen when lying down.

*🔸Other Homeopathy Remedies for Sleep apnea*

am-c., cadm-s., carb-v., cench., dig., grin., guai., kali-c., lac-c., lyc., op., samb.,

Before taking these medications, it is important to visit the doctor who will take a detailed case history of your problem and prescribe the right dosage and combination of medication.

Dr Dhaval Patel 
Kaival Healing Homoeopathic Clinic
H P Homoeo
Surat, Gujarat

Wednesday 12 September 2018

Eye sight

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

1) நெல்லிப்பொடி

2) வெண்மிளகு

3) கடுக்காய்ப்பொடி

4) கஸ்தூரிமஞ்சள்

5) வேப்பன்வித்து பொடி (வேப்பங்கொட்டை)

இவை அனைத்தையும் பொடிககளைவும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு 
வாரம் இரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும்.

கண்பார்வைக் குறைபாடுகள் ,

அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி ,

தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.

இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.