Sunday 26 November 2017

Samayal Tips!!!

டிப்ஸ்… டிப்ஸ்…வீட்டுக்குறிப்புக்கள்!

"தினமும் பண்ற சமையல்தான்... ஆனா, என்னிக்கும் ஒரே சுவை வரமாட்டேங்குதே... சில நாள் உப்பு, சில நாள் காரம், புளிப்பு, தண்ணீர்னு ஏதாவது ஒண்ணு கூடிப் போகுதே’’னு உங்க 'அடுக்களை மனசு' அடிக்கடி சோர்ந்து போகுதா?

கவலையை விடுங்க... உப்பு, புளிப்பு, காரம்னு எது உங்க சமையல்ல தப்பு தாளம் போட்டாலும், உங்க சாமார்த்தியத்தால அதையெல்லாம் ஸ்ருதி சுத்தமா தாளம் போட வெச்சுட முடியும்.

உப்பு அதிகமாகிவிட்டதா?
குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால்... வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து (அல்லது) வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில் எது, நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பார்த்துச் சேர்ப்பது முக்கியம்.

பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தும் உப்பின் ருசியை சரி செய்யலாம்.

ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால்... ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.

எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி... சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து விட்டால் உப்பு சரியாக இருக்கும் (வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்).

அரைத்து வைத்துள்ள இட்-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில் வறுத்து, ஐந்து நிமிடங்கள் பால் ஊற வைத்து, மாவுடன் சேர்த்து விடுங்கள்.
இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.

பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.

ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.
நான்கில் ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.

கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.

பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணயில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விடவும்.

பருப்பு சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை), கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்.

காரம் கூடிவிட்டதா?
குருமா என்றால் புளிப்பில்லாத கெட்டித் தயிர் அல்லது கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி விடுங்கள்.
மட்டர் பனீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமா? ஃப்ரெஷ் கிரீம் அல்லது சூடான பால் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்து விட்டால், 'காரமா... எங்கே..?' என்பார்கள்.

வெண்பொங்கல், கலப்பு சாதங்கள், புலாவ், பிரியாணி போன்றவை ‘உஸ் உஸ்’ என்று நாக்கை பதம் பார்க்கின்றனவா? பொங்கல் சூடான பால், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.

கலப்பு சாதமாக இருந்தால் (தேங்காய், எலுமிச்சை சாதம் முதயன) அவற்றிலுள்ள மிளகாய்த் துண்டுகளை பொறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர்... வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்து தூளாக்கி பரிமாறும் நேரத்தில் மேலே தாராளமாகத் தூவி மொறுமொறுவென்று பரிமாறுங்கள்.

புலாவ் பிரியாணி காரமாக இருந்தால் பிரெட் கிரம்ப்ஸ் ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணயில் ஒரு நிமிடம் சூடாக்கிச் சேர்த்து விடுங்கள். பரிமாறும்போது சாதாரண கார்ன்ஃபிளேக்ஸ் கூட சேர்க்கலாம். வெறும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் கலந்தும் சேர்க்கலாம்.

புளிப்பு கூடி விட்டதா?
வெல்லம் ஒரு கட்டி கரைத்து விடுங்கள். பொட்டுக்கடலை மாவையும் நீர்க்கக் கரைத்து அதில் சேர்த்து விடுங்கள்.
வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தாலும் குழம்பு சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.

ரசம் புளிப்பாக இருந்தால், புளிப்பில்லாத தக்காளி, கொஞ்சம் கொத்தமல், ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மிளகு-சீரகம் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ரசத்தில் சேர்த்து ஒரு தடவை கொதிக்க விடுங்கள். பிறகு, கால் ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கினால்... அபாரமாக இருக்கும்.
இட் மாவு புளித்துவிட்டதா?

இட்யாக வார்த்து விட்டு, சேவை நாழியில் அல்லது வடாம் அச்சில் போட்டு சேவையாக பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாணயில் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக அறிந்த வெங்காயத்தை வதக்கி, பிழிந்து வைத்துள்ள இட் சேவையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி புது வகை உணவாகப் பரிமாறுங்கள்.

சாம்பார் நீர்த்துவிட்டதா?
சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதைக் கவனமாக இறுத்துவிட்டால்... சாம்பார் கெட்டிதான். இறுத்து எடுத்த தண்ணீரை வீணாக்காமல்... சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்காலாம்.

தண்ணீர் அதிகமாகப் போன கூட்டு, குருமா, கிரேவி வகைகளுக்கு பால் கரைத்த சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும் (கூட்டு அல்லது குருமாவிருந்தே கொஞ்சம் எடுத்து அதில் மாவைக் கரைத்துச் சேர்ப்பதும் நல்ல உத்தி!)

தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவிருந்தே கொஞ்சம் எடுத்து... சோள மாவு, வெறும் வாணயில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து மொத்த மாவில் சேர்த்து விட்டால்... மாவு கெட்டியாகும். சுவையும் மாறாமல் இருக்கும்.

சப்பாத்தி, வடை, போண்டா, அதிரசம், அப்பம் போன்றவற்றுக்கான மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால்... ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகி விடும். அதை ஃப்ரீஸரிருந்து எடுத்த உடனே திட்டமிட்ட உணவுப் பொருளைத் தயாரித்து விடலாம்.

சாதம் குழைந்துவிட்டதா?
கரண்டியால் கிளறாதீர்கள். அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடுங்கள். பின், அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயைப் பரவலாக ஊற்றி, பாத்திரத்தை மேலும் கீழும் லேசாகக் குலுக்குங்கள். அல்லது ஒரு முள் கரண்டியால் குறுக்கும் நெடுக்கும் கோடு போடுவது போலக் கீறுங்கள். குழைந்த சாதம் கெட்டியாகிவிடும்.

சாதம் குழைந்துவிட்டால்... சாம்பார் அல்லது தயிர் சாதமாகவும் கலந்து பரிமாறி விடலாம். கொஞ்சம் சாதத்தை மேலும் மசித்து, கெட்டிப்பால், சர்க்கரை (அல்லது கண்டென்ஸ்டு மில்க்) சேர்த்து, பால் பாயசமும் தயாரித்து விடலாம். த்ரீ - இன் -

Friday 24 November 2017

For Ear problems!!!

Tamil Medicine  for  ear problems.

HOMEOPATHY!!!

FEW IMPORTANT TIPS of Materia Medica:

When free ( In leisure):
🔹Phosphorus will go to opera 💃💃💃( Museum)

🔹Pulsatilla will visit friends.👭 🙋💁

🔹Tuberculinum will desire to wander and travel.✈🚗🚈

🔹Lachesis will go for shoping, esp.clothes.👚👗👖

🔹Natrum mur will go back to home, will stay with family.🏡👪

🔹Arsenic will stay at home, will do some artistic work.🏡📌📎📝

🔹Medorrinum will like to see sea.🌊🌊🚣

🔹Sulphur will like to read books.📔📙📕

🔹Kali sulph will enjoy seeing others being happy.👦😊☺

Lookwise--------
🔹Arsenic is aristocrate.👳😏

🔹Phosphorus is attractive.👰😍

🔹Lycopodium is handsome.👨😎

🔹Pulsatilla is pretty.💃🙋

🔹Carcinocin is beautiful.👰😍

🔹Platina is like queen.👰😠( Arogant)

Speechwise--------
🔹Arsenic is well organized.
🔹Lachesis is interesting.
🔹Sulphur is boring and philosophical.
🔹Natrum mur is right on the target.

Aptitude for--------
🔸Arsenic for art.
🔸Phosphorus and Pulsatilla for friends.
🔸Lycopodium for politics.
🔸Natrum mur for teaching and counseling.
🔸Kali bichrom for army.
🔸Sulphur for business and scholarship.

Inborn quality---------

🔸Pulsatilla child is sweet and playful.
🔸Cina child is irritating.( Ill-humored)
🔸Chamomilla child is constantly weeping..( Whining.)
🔸Tarentulla child is hyperactive.
🔸Sulphur child is dirty.
🔸Tuberculinum child loves dancing and music.
🔸Baryta carb child is silly.
🔸Calc.carb child is fair, fat and flabby.( Scrofulous.)
🔸Hyoscyamus child is curious.(Inquistive)😳
🔸Stramonium child is terrified.😱
Carcinocin child is intellectual.😇
Causticum and Phosphorus child is fearful.😧
Natrum mur child is sad and withheld.😔
Kali brom child is terrified.😱
Ignatia child is born intelligent.😇

OBSERVATORY

🔻Playing with the toy cars🚗🚕------ Calc.phos.

🔻Playing with the toy cars by doing accidents to each other 🚗💥🚕-----Tuberculinum.

🔻Playing with the toy cars, just by breaking it and enjoying🚕💥💢-----Tarentula.
Playing with the toy cars but remains curious how it works🚕😱😇----Sulphur.

Speedwise-------

🔹Fastest speed but purpose oriented------- Argentim nit.
🔹Speed fast with purpose oriented but more result oriented-----Nux vom.
🔹Speed fast due to restlessness but most respectful---------------Rhus tox.

🔹Speed fast but hyperactive------- Iodum.
🔹Speed fast with most bv dangerous act (due tourestlessness)-------Tarentula.
🔹Speed fast but with weakness------------- Tuberculinum.

Cooking!!!

🥗அம்மா சமையல் 🥗:
சுவையான பிசிபேளாபாத்

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
பீன்ஸ் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
முந்திரி - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - 2.1/2 டீஸ்பூன்
கருப்பு உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம், எள்ளு - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இஞ்ச், காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
---
செய்யும் #முறை:-
5 கப் அரிசியை தண்ணீருடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பருப்பு, காய்களை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும்.
மசாலாப் பொருட்களை எண்ணெயில் நன்றாக வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் கடாயில் பூண்டு, தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரைத்த அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து நன்கு விழுதாகும் வரை வதக்கவும்.
அதன் பின் வேக வைத்த காய்கறி, பருப்பு சேர்த்துக் கலந்து இறுதியாக சாதத்தை சேர்த்து உப்புச் சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்தில் நெய்யுடன் சேர்த்து கலக்கவும்.
சூடான, சுவையான பிசிபேளாபாத் ரெடி.

Tamarind Kulambu!!!

திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

மல்லி - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 20 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, 2 கப் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டுகளை தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து அத்துடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் தட்டி வைத்துள்ள பூண்டுகளை சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும். பின்பு அதில் புளிச்சாறு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு ரெடி!!!

30 பொடிகள்!!!

🥗அம்மா சமையல் 🥗:
*அவசரத்துக்கு கை கொடுக்கும்… 30 வகை பொடிகள்!*

*🥗அம்மா சமையல் 🥗*

”ருசியை அள்ளித் தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்… வெந்தயப்பொடி, மூலிகைப் பொடி, கொள்ளுப்பொடி, வேப்பம்பூபொடி, நெல்லிக்காய்ப்பொடி என ‘வரும் முன் காக்கும்’ வரப்பிரசாதமாக விளங்கும் பொடிகளையும் இங்கே கொடுத்துள்ளேன். இவற்றை செய்து வைத்து, பல நாட்கள் பயன்படுத்தி, பலன்களை அள்ளுங்கள்

பருப்புப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

பூண்டுப்பொடி

தேவையானவை: பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

தேங்காய்ப்பொடி

தேவையானவை: முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இட்லி மிளகாய்ப்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மிளகு  சீரகப்பொடி

தேவையானவை: மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி

தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.

ரசப்பொடி

தேவையானவை: தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம

், ருசி ஆளை அசத்தும்.

எள்ளுப்பொடி

தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.

குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.

ஆவக்காய் ஊறுகாய் பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு – தலா 200 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

அங்காயப் பொடி

தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 6, கடுகு, மிளகு, சீரகம் – தலா 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

நாரத்தை இலை பொடி

தேவையானவை: நாரத்தை இலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

திடீர் புளியோதரைப்பொடி

தேவையானவை: புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வேர்க்கடலை – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்… உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.

வெந்தயப்பொடி

தேவையானவை: வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்… உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.

வேப்பம்பூபொடி

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்

துக்கொள்ளவும்.

குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து… பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.

சாம்பார்பொடி

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .

குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.

நெல்லிக்காய் பொடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.

நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

கொத்தமல்லிப் பொடி

தேவையானவை: பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.

மூலிகைப்பொடி

தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.

சுண்டைக்காய்பொடி

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

ஓமப்பொடி

தேவையானவை: ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.

கொள்ளுப்பொடி

தேவையானவை: கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

சட்னி பவுடர்

தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் – 2 கப், காய்ந்த மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்மு

றை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்… உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

கீரைப்பொடி

தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.

பாயச பவுடர்

தேவையானவை: பிஸ்தா பருப்பு – 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு – தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை, பால் – தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்… திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.

தீபாவளி மருந்துப்பொடி

தேவையானவை: கண்டதிப்பிலி – 50 கிராம், சுக்கு – ஒரு துண்டு, ஓமம் – 50 கிராம், சீரகம் – 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி – 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 25 கிராம், வால் மிளகு – 50 கிராம், மிளகு – 25 கிராம், சித்தரத்தை – ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.

குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.

ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் – நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து… இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.

அடைப்பொடி

தேவையானவை: இட்லி அரிசி – 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து… வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.

தனியாப்பொடி

தேவையானவை: தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

பஜ்ஜி பவுடர்

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, சோள மாவு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து… விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.

வடை பவுடர்

தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு – 250 கிராம், மிளகு – 20, காய்ந்த மிளகாய் – மூன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.