Thursday 31 August 2017

மாதவிடாய் குறைகள்!!!

மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கும் கற்றாழை
பெண்கள் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன.
இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும், தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி உண்டாகும். இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..
• கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
• மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.
• உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.
• மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.
• மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.

பிரண்டை பயன்கள்!!!

பிரண்டை அறிந்ததும் அறியாததும்...
‌பால் வினை நோயால் பாதிக்கப்பட்டோர் பிரண்டையுன் புளி வைத்து அரைத்து துவையலை தொடர்ந்து சாப்பிட்டால் குணம் பெறலாம்

‌பிரண்டடையின் தண்டுப்பகுதியும் வேர்ப்பகுதியும் எலும்பு முறிவுக்கு மகத்தான மருந்து.
‌இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதியையும் அரைத்து ஆல்கஹாலுடன் கலந்து எலும்பு முறிவு பகுதியில் பற்றிட்டு கட்டு கட்டினால் எலும்பு முறிவு குணமாகும். உடன் இதன் சாற்றையும் அருந்தினால் விரைவில் குணம்பெறலாம்

‌பிரண்டைத் துவையலை முதுகு வலியால் பாதிக்கப்பட்டோர் தண்டுவடத்தில் பிரச்சனை உள்ளோர் எடுத்துக்கொண்டால் குணம் பெறலாம்

‌உடல் வலியால் அவஸ்தைப் படுபவர் பிரண்டைச்சாற்றை அருந்தினால் வலியிலிருந்து விடுபடலாம்

‌ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்குவாத நோய்களுக்கு (ஆர்த்தரிடிஸ்) பிரண்டைச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது.

‌மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள்அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்

‌பிரண்டைச்சாறு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது

‌பிரண்டைச்சாறு பல்ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது.

‌காதில் சீழ்வடிபவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

‌மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் விடுபடலாம்
‌ கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது

‌பிரண்டையின் சாம்பல் பேக்கிங் baking சோடாவுக்கு மாற்றாக பயன்படுகிறது

‌ பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது

‌பிரண்டைச்சாறு தீப்புண் மற்றும் தீக்காயங்களை ஆற்றுகிறது விஷ பூச்சிகடிகளை குணப்படுத்த பயன்படுகிறது.

‌படுக்கை புண்களை ஆற்றுகிறது

‌பிரண்டைச்சாறு சுக்கு மிளகு கொதிக்க வைத்து அருந்த உடல்வலிக்கு அருமருந்து

‌பிரண்டை இலை மற்றும் பிஞ்சித்தண்டை நிழலில் உலர்த்தி அரைத்து அஜீரணத்திற்கு சாப்பிட செரிமானாம் அதிகரிக்கும

‌ பிரண்டை குடல்புழுக்களை அழிக்கிறது, பசியைத் தூண்டுகிறது வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது

‌தோல் நோய்கள், தொழுநோய், இரத்தப்போக்கு, கால்-கை வலிப்பு, வலிப்பு நோய், நாள்பட்ட புண்கள், வீக்கம். ஆகியவற்றிற்கும் அருமருந்து.

‌நன்கு பருத்த பிரண்டைத்தண்டை துவையலை வலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்திற்கும் பயன்படுத்தலாம்

‌கண் நோய்கள் , மூலம் , இரத்தசோகைக்கும் அருமருந்து.

‌பிரண்டைத்தண்டு எலுமிச்சை சாற்றுடன் கொதிக்க வைத்து அருந்த தீராத வயிற்றுவலி கணமாகும்

‌பிரண்டையை நசுக்கி காயத்தில் பற்றிட காயம் குணமாகும்.

‌வயிற்று புண் அல்சருக்கு அருமருந்து

‌பிரண்டை வேரை நசுக்கி சாற்றை அருந்த நரம்பு மண்டல பிரச்சனைகளை குறைக்கிறது

‌உடல் எடை வயிற்றைக் குறைக்க உதவுகிறது



Thursday 17 August 2017

கஷாயப்பொடி!!!

கசாயப்பொடி !!
(அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.
இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.
மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.
காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.
அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.