Monday 26 January 2015

எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள !!!

குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவுகின்றது. உயிர் எழுத்துக்கள்.மெய் எழுதத்துக்கள்.இலக்கணங்கள் என முப்பதுக்கும்மேற்பட்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இந்த இணையதளம் காண இங்கு கிளிக்;செய்யவும்.உயிரேழுத்துக்கள் பற்றிய விளக்கம் கீழே காணவும்.
ஒவ்வொரு டேபிலும் நிறைய உதாரணங்கள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதன் வலதுபுறம் வேண்டிய தலைப்புகள் கொடுத்துள்ளார்கள். இது எதுதேவையோ அதனை மட்டும் கிளிக்செய்து பார்க்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 
குழந்தைகள் விளையாட இதில் மூன்று விதமான விளையாட்டும் இணைத்துள்ளார்கள் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 


உயிர் எழுத்தும் மெய்எழுத்தும் நாம் பிரிண்ட் எடுத்து எழுதி பழகலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 மனித உடல்கள் பாகங்களாக குறித்துள்ளார்கள். நீங்கள் கர்சரை உடலில் எந்த
இடத்தில் கர்சரை வைக்கின்றீர்களோ அந்த இடத்திற்கான பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும். எழுத்துருவிலும் வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 ஒரு எழுத்து பெயர்கள் இரண்டு எழுத்து பெயர்கள் என படங்களுடன்  கொடுத்துள்ளார்கள். இதன் மூலம குழந்தைகள் எளியமையாக அறிந்துகொள்ளலாம்.
இதனைப்போலவே தெலுங்கிலும் எளிய முறையில் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

எளிமையாக இந்தி கற்றுக்கொள்ள எழுத்துக்களும் அதற்கான இந்தி மற்றும் ஆங்கிலப்பெயர்களும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகள் விரும்பும் குழந்தைகள் வால்பேப்பர்களும் ;இதில் கொடுத்துள்ளார்கள்.கற்றல்.பாடல்கள். கதைகள்.விளையாட்டுகள். லெவல்கள்.மாதிரி தாள்கள்.வால்பேப்பர்கள் என கொடுத்துள்ளார்கள். ஆரம்ப கல்வி கற்க விரும்பும் குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ்.ஆங்கிலம்.இந்தி தெலுங்கு என சுலபமாக கற்றுக்கொள்ளலாம்

புகைப்படங்களை இணையம் மூலம் சுலபமாக பகிர்ந்துகொள்ள!!!

நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையம் மூலம் சுலபமாக பகிர்ந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்யவும்.

இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியூ ஆல்பம் என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் ஆல்பத்திற்கான பெயரையும் ஆல்பத்திற்கான இதர குறிப்புகளையும் குறிப்பிடவும். 


 உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் Album,Frame.Navigation என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் ப்ரேம் அளவினையும் நிறத்தினையும் நாம் வேண்டிய அளவில் அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் விதவிதமான டேம்ளேட்டுகளையும் இணைத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் தேர்வு செய்து முடித்ததும் நம்மிடம் உள்ள பைல்லினை அவர்களுடைய இணையதளத்தில் லாகான் செய்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இணைய பதிவேற்றம் வேண்டாம் என்றால் நமது ஹார்டிஸ்கிலேயே சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பர்ருங்கள்.
இறுதியாக ஓ.கே.கொடுத்ததும் உங்களுடைய புகைப்படங்கள் சேமிப்பதை காணலாம்.


இறுதியாக உங்களுக்கான புகைபடங்களை பார்வையிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


புகைப்படங்கள் ப்ரேம் அமைப்புடன் அழகுபடுத்தவும் மற்றவர்களுடன் சுலபமாக பகிர்ந்துகொள்ளவும் இந்த இணையதளம் பயன்படுகின்றது. 

Monday 19 January 2015

புகைப்படங்கள்!!!

திகைக்க வைக்கும் புகைப்படங்கள்


Friday 16 January 2015

சுற்றுலா கையேடு!!!

ஜில்லுன்னு ஒரு டூர்...!- சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!

 சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!



இந்தியா - என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? உடலையும் மனதையும் குளிர்விக்க நாடு எங்கும் பரவிக் கிடக்கின்றன மலைவாசஸ்தலங்கள். சொல்லப்போனால் அத்தனை ஜில் பகுதிகளையும் குறிப்பிடவோ விவரிக்கவோ இந்தப் பக்கங்கள் போதாதுதான். என்றாலும் நீங்கள் குளுகுளு டூர் செல்ல முடிவெடுத்தால் அதற்கு இவை கட்டாயம் உதவும்.


லே (LEH)

ஐம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாவட்டத்தின் தலை நகரம். 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ‘லே அரண்மனை’ மிகப் பிரபலம். உலக அமைதிக்காக எழுப்பப்பட்ட உயரமான சாந்திஸ்தூபம் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. ட்ரெக்கிங் பாதைகள் நிறைய உண்டு. யுத்த அருங் காட்சியகம் ஒன்றும் காணத்தக்கது. சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம், முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. வெற்றி நினைவாலயம், ஜோராலா கோட்டை என்று பார்ப்பதற்கு உகந்த இடங்களும் உள்ளன.


அரக்கு பள்ளத்தாக்கு (Araku valley)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அழகான, மாசடையாத பள்ளத்தாக்கு. விசாகப்பட்டினத்திலிருந்து 114 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு 5000 அடி உயரத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ளன அனந்தகிரி மற்றும் சுங்கரி மெடா-ரிசர்வ் காடுகள். காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. போகும்போது அங்குள்ள பழங்குடியினர் தயாரிக்கும் காஃபி பொடி, சீயக்காய்த்தூள், மற்றும் புளியை மறக்காமல் வாங்குங்கள்.
ராஜ்கிர் (Rajgir)

பீகாரில் உள்ளது. நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள பருந்து சிகர மலை (Vulture's Peak Mountain) புகழ் பெற்றது. பாட்னாவிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாக சென்றடையலாம். சுமார் 100 கி.மீ. தூரம் குன்றுகளுக்கு நடுவே அமைந்த பசுமையான பள்ளத்தாக்கு. பிரம்ம குண்டம் எனப்படும் வெந்நீர் ஊற்றுக்கள் புகழ் பெற்றவை. 1969ல் எழுப்பப்பட்ட விஸ்வ சாந்தி நினைவுத் தூணும் பிரசித்திப் பெற்றது. உலக அமைதிக்கானது இது. கேபிள் காரில் பயணிப்பது தனி ஆனந்தம். ‘வேணு வனம்’ எனும் செயற்கையான காட்டுப் பகுதியில் நிர்மலமான அமைதியை அனுபவிக்கலாம். ஜப்பானிய ஆலயம் ஒன்றையும் காணலாம்.
மோர்னீ குன்றுகள் (Morni hills)
சண்டிகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மோர்னீ ஒரு கிராமம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இமய மலையின் சிவாலிக் தொடரின் ஒரு பகுதி இது. நாலாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து, இமய மலையின் பல அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். ட்ரக் கிங்கிற்கும் ஏற்ற இடம். சின்னச் சின்ன ஏரிகள் அமைந்துள்ள பகுதி. சுற்றுலாப் பயணிகளுக்காக ஹரியானா அரசு ஒரு பெரிய பயணியர் விடுதியை அமைத்திருக்கிறது.
டல்ஹவுசி (Dalhousie)
ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைவாழ் இடம். அற்புதமான புல்வெளிகள், மலைச்சரிவுகள். பிரிட்டிஷ் அதிகாரிகள் கோடையில் இங்கு வந்து தங்குவது வழக்கம். சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரவீந்திரநாத் தாகூர் இந்தச் சூழலில் மனதைப் பறிகொடுத்துதான் கீதாஞ்சலியை எழுதத் தொடங்கினாராம்!
குஃப்ரீ (Kufri)
ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவிலிருந்து வெறும் 13 கி.மீ. தூரத்தில் அமைந்த பகுதி. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்தது. மலைமீது குதிரைச் சவாரி செய்து உச்சியை அடைவது உற்சாகமான (கொஞ்சம் திக்திக்) அனுபவம். உச்சிப் பகுதியை அடைந்தால் பனி சூழப்பட்ட இமயமலையின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.
குலூ (Kullu)

லார்கி மற்றும் மணாலி ஆகியவற்றுக்கு நடுவே அமைந்த ஹிமாசலப் பிரதேசப் பகுதி. அழகிய ஊசியிலைக் காடுகளும், பியாஸ் நதியும் கண்டுகளிக்கத்தக்கவை. மிகப்பெரிய பள்ளத்தாக்கான குலூ பள்ளத்தாக்கை, கடவுள்களின் பள்ளத்தாக்கு என்பர். மிக அழகானது இந்தப் பள்ளத்தாக்கு. குலூவில் ‘லுக்’ என்ற மற்றுமொரு பள்ளத்தாக்கும் இருக்கிறது. மிகச் சிறந்த கோடை வாசஸ்தலம் இது. சுதந்திர இந்தியாவில்தான் இங்கு சாலையே போடப்பட்டது என்பதால், இன்னமும் மாசடையாத பகுதிகள் இங்கு உண்டு.
மணாலி (Manali)
6700 அடி உயரத்தில், ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிம்லாவிலிருந்து 270 கி.மீ. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் சிறு நகரம். கொஞ்சம் உள்ளடங்கிச் சென்றால்தான், இயற்கையை ரசிக்க முடியும். இந்து மதத்தின் புராண சட்ட மேதையான மனு என்பதிலிருந்து தான், மணாலி என்ற பெயர் பிறந்துள்ளது. இங்கிருந்து ரோதாங் பாஸ் என்ற பகுதியை அடையலாம். அங்கு சென்றால் பனி படர்ந்த இமய மலையைக் காணலாம். குளிர் காலத்தில் மணாலியின் சாலைகளில் உருவான பனிக்கட்டிகள் மீது சிறுவர்களும், சுற்றுலாப் பயணிகளும் பனிச் சறுக்கு விளையாடுவது வெகு சகஜம்.

நந்தி ஹில்ஸ் (Nandi Hills)
கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மரங்கள் சூழ்ந்த, சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். பார்ப்பதற்கு எருது போல் இருக்கும் இந்தக் குன்றில் தான் பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகள் அதிக வளைவுகள் இல்லாதது. மேகங்கள் நம்மைத் தொட்டு விட்டுச் செல்லும் அழகை ரசிக்கலாம். குன்றுக்குக் கீழே உள்ள போதி நந்தீஸ்வரா ஆலயங்கள் பார்த்து ரசிக்கத் தக்கவை.
பாவாகத் (PAVAGADH)

குஜராத்தின் பாஞ்ச்மஹால் மாவட்டத்திலிருந்து சுமார் 46 கி.மீட்டரில் உள்ளது. இங்குள்ள மகாகாளி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். யுனெஸ்கோவால் ‘பாதுகாக்கப்பட்ட சரித்திரச் சின்னமாக’ இனம் காணப்பட்ட பகுதி. நிறைய இயற்கைக் காட்சிகள் கொண்டது. 822 மீட்டர் உயரத்தில் உள்ளது. அரண்மனையையும் கண்டுகளிக்கலாம். காளி கோயிலுக்கு கேபிள் காரில் செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்வூட்டக்கூடிய ஒன்று. ஆனால் கேபிள் காரிலிருந்து இறங்கிய பிறகும், சுமார் 250 படிகள் ஏறித்தான் கோவிலை அடைய முடியும்.
தவாங் (TAWANG)

அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது. சீனா இதை தன் எல்லைக்குட்பட்டது என்று கூறி வருவது வேறு விஷயம். 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தவாங் புத்த மடாலயம் மிகப் பிரபலம். திபெத்தில் உள்ளதை விட்டுவிட்டால், உலகின் மிகப்பெரிய புத்த மடாலயம் இதுதான். ஆறாம் தலாலாமா இங்கு ஜனித்ததால், புத்த மதத்தினருக்கு இது ஒரு புனிதத் தலமும்கூட. தேஜ்பூரிலிருந்து பதினாறு மணி நேர சாலைப் பயணத்தில் அடையலாம். மாநில அரசு கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் செய்து தருகிறது.
லோனாவாலா (Lonavala)
மகாராஷ்ட்ராவின் பூனே மாவட்டத்தில் இருக்கிறது. மும்பாயிலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதி ‘சிக்கி’க்காக (வேர்க்கடலை பர்பி) மிகவும் புகழ் பெற்றது. 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு, பலவித குகைச் சிற்பங்கள் உண்டு. துங்கிக் கோட்டையைக் காணலாம். மும்பையிலிருந்து வார இறுதிகளில் இங்கு வந்து செல்பவர்கள் பலர் உண்டு. லோனாவாலாவிலிருந்து ஆறரை கி.மீ. தூரத்தில் சிவாஜியின் பிரபல கோட்டையான ராஜ்மசி உள்ளது. பள்ளத்தாக்குகளின் அழகு சிறப்பானது. வால்வான் அணை, டைகர்ஸ் பாயின்ட் போன்றவையும் கண்டு ரசிக்கத் தக்கவை.

ஷில்லாங் (Shillong)
ஷில்லாங் மேகாலயாவின் தலைநகரம். 5,000 அடி உயரத்தில் அமைந்த நகரம். மிக அடர்த்தியான மக்கள் தொகை. நிறைய ஐரோப்பியர்கள் காணப்படுவதால், ‘கிழக்கு ஸ்காட்லான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. யானை அருவி, லார்ட்ஸ் ஏரி, லேடி ஹைடரீ பூங்கா, ஷில்லாங் கால்ஃப் மைதானம் (ஆசியாவின் மிகப்பெரிய கால்ஃப் மைதானங்களில் ஒன்று), ஷில்லாங் சிகரம், பட்டாம் பூச்சி மியூசியம் போன்றவை இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சில.
தரிங்படி (DARINGBADI)

‘ஒடிசாவின் காஷ்மீர்’ என அழைக்கப்படும் இது, 915 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காபி மற்றும் மிளகுத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. டோலுரி நதி அழகு சேர்ப்பதுடன், ஒரு அருவிக்கும் காரணமாகிறது. பெல்கார் (BELGHAR) சரணாலயத்தில் பல மிருகங்களைக் காணலாம் - முக்கியமாக நீண்ட தந்தம் கொண்ட காட்டு யானைகள்.
குல்மார்க் (GULMARG)

காஷ்மீரிலுள்ள இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது. சுமார் 8,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி வசிப்பவர்களில் 99 சதவிகிதம் ஆண்கள் தான் என்பது வேடிக்கையான புள்ளி விவரம். பலரும் இங்கு பகலில் வந்துவிட்டு, இரவில் அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தங்குவது உண்டு.
மிகவும் அருகிலேயே அமைந்துள்ள இமயமலைக் குன்றுகள் வசீகரித்தாலும், பாகிஸ்தானுக்கும், நமக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு குல்மார்க்கு அருகில் இருப்பதும், அதிகம் பேர் தங்காததற்கு ஒரு காரணம். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் தென்படுவார்கள். ஸ்ரீநகரிலிருந்து காரில் இரண்டு மணி நேரப் பயணத்தில் குல்மார்க்கை அடையலாம். கேபிள் காரும், குளிரான சூழலும், அற்புதமான பனிச் சறுக்குத் தளமுமாக குல்மார்க் நன்றாகவே வசியம் செய்கிறது.
வால்பாறை (VALPARAI)

கோவையில் உள்ள இது, 3500 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு மலைத் தொடரில், கோவையிலிருந்து 100 கி.மீ. (அல்லது பொள்ளாச்சியிலிருந்து 65 கி.மீ.) தொலைவில் உள்ளது. ஆழியாறிலிருந்து வால்பாறையை அடைய சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். தனியார் தேயிலைத் தோட்டங்கள் நிறைய உண்டு. சோலையாறு அணைக்கட்டு, பஞ்சமுக விநாயகர் ஆலயம், குரங்கு அருவி, பாலாஜி ஆலயம், ஆழியாறு அணைக்கட்டு, அதிரம்பட்டி அருவி ஆகியவை முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்.
ஊட்டி (OOTY)
2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலம். ஊசியிலைக் காடுகள், அழகிய மரங்கள் வனப்பைக் கூட்டுகின்றன. நீலகிரி மலையிலுள்ள இதன் அழகை முழுமையாக உணர்ந்து கொள்ள, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரயிலில் பயணிக்கலாம். பெரும் பரப்பில் தாவரப் பூங்காங்கள், ஒரு நாளில் சென்றுவரக் கூடிய பக்காரா அணை, தோடர்களின் குடியிருப்பு, தொட்டபெட்டா, ட்ரெக்கிங் செல்லுதல் போன்ற பல சுவாரசியங்கள் ஊட்டியில் உள்ளன.
டார்ஜீலிங் (DARJEELING)

கன்ஜன்ஜங்கா சிகரத்தின் அழகைத் தரிசித்து மெய் மறக்கலாம். அற்புதமான புத்த மடாலயங்கள், பூந்தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றிற்கும் பெயர் போனது. 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள இதனை அடைய ஒரு மினி ரயிலைப் பயன்படுத்தலாம். வெறும் 83 கி.மீ. தூரத்தை அடைய ஆறு மணி நேரம் என்றாலும், இயற்கை ரசிகர்களுக்கு நேரம் போவது தெரியாது.

காங்டோக் (GANGTOK)
கயிற்றுக் காரில் கட்டாயமாகச் செல்லுங்கள். காங்டோக் பள்ளத்தாக்கின் அழகை அருமையாக உணரலாம். சிக்கிம் மாநிலத் தலைநகரமான காங்டோக்கில் உள்ள மடாலயங்கள் மிக அழகானவை. 500க்கும் அதிகமான பூக்கள் இங்கே மலர்கின்றன. சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு அற்புதமான தலம்.
மசூரி (MUSSOORIE)

இங்குள்ள சிலர் முசௌரி என்று சொன்னாலும், வட இந்தியர்களுக்கு இது மசூரிதான். அழகிய டுன் பள்ளத்தாக்கு, சிவாலிக் மலைத் தொடர்கள் போன்றவை இதை மிக ரம்மியமாக்குகின்றன. அருகிலுள்ள அற்புதமான கேம்டி (KEMPTY) அருவி அழகுமிக்கது. டெப்போ ஹில் என்ற பகுதியில் நின்று பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா இமயமலைச் சிகரங்களையும் கண்டு ரசிக்கலாம் - பனி படராத நாட்களில். ஒட்டக முதுகுக் குன்று, துப்பாக்கிக் குன்று போன்றவையும் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்றவை.
மவுண்ட் அபு (MOUNT ABU)
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் இது ஒரு விதிவிலக்கு. அந்த மாநிலத்திலுள்ள ஒரே சுற்றுலா மலைப் பிரதேசம். 1720 மீட்டர் உயரத்தில் உள்ளது. சமண மதத்தினர் இங்கு புனித யாத்திரையாகவும் வருகின்றனர். காரணம் இங்குள்ள பேரழகு வாய்ந்த தில்வாரா ஆலயம். பிரம்ம குமாரிகளின் பிரம்மாண்டமான அரங்கமும் உள்ளது.

கொடைக்கானல்
பழநிக் குன்றுகளின் நடுவே உள்ள பசுமைப் பிரதேசம். அழகிய மலைச் சரிவுகள், அருவிகள், மனம் மயக்கும் ஏரிகள் போன்றவை இங்கு உண்டு. பலவித பறவைகளும் பயமின்றி வந்து செல்கின்றன. 2,130 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் வாழை, ப்ளம்ஸ், லிச்சி போன்ற பழங்கள் ஏராளமாக விளைகின்றன. அரிதாகப் பூக்கும் குறிஞ்சி மலரும் இங்கு உண்டு. குறிஞ்சிப் பூக்கள் கொத்தாக மலரும்போது, மலைச் சரிவுகள் நீல, பர்ப்பிள் வண்ணமாகக் காட்சியளிப்பது ரசிக்க வேண்டிய ஒன்று. பல்வேறு நீளம் கொண்ட பதினைந்திற்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் பாதைகள் உண்டு.
மடிகேரி (MADIKERI)

கர்நாடகாவிலுள்ள கூர்க் மாவட்டத்தின் தலைநகரம். மெர்க்காரா என்றும் குறிப்பிடப்படுகிறது. ராஜாவின் சிம்மாசனம் (உயரத்தில் அமைந்துள்ளது இங்கிருந்து பார்த்தால், அழகிய பள்ளத்தாக்குகளை ரசிக்கலாம்) மடிக்கோடி கோட்டை (இதற்குள் ஒரு அரண்மனையும் உண்டு) ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியன. நகருக்குள் அமைந்த ஓம்காரேஸ்வரர் ஆலயமும் பிரசித்திப் பெற்றது.

மூணார் (MUNNAR)
முத்திரப்புழா, நல்ல தண்ணீ, குந்தளா ஆகிய மூன்று மலை ஓடைகளின் சந்திப்பில் உள்ள பிரபல வாசஸ்தலம். கொச்சியிலிருந்து 136 கி.மீ.தூரத்தில், 1524 மீட்டர் உயரத்தில் அமைந்த இடம். ஆனைமுடி இதன் உயர்ந்த சிகரம். மேகங்களை நம் மட்டத்துக்கும் கீழே காணலாம் என்பதும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் பயணிகளுக்கு ஆனந்தத்தை அளிக்கும். இங்கும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீலக் குறிஞ்சி மலர் பூக்கிறது. பாராகிளைடிங், பாறை ஏறுதல் போன்ற சாகச விளையாட்டுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேயிலைத் தோட்டங்களுக்கும் குறைவில்லை. மாட்டுப் பெட்டி ஏரி மற்றும் சற்று தொலைவில் அமைந்த ராஜமாலா வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை.
பஞ்சாக்னி (PANCHAGNI)

வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இது மகாராஷ்ட்ராவில் உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான மலை தீபகற்பமான டேபிள் லேண்ட் இங்குள்ளது. பாண்டவர்கள் தங்கியதாக நம்பப்படும் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்ற பெயர் கொண்ட பெரும் குகையும் உண்டு. பார்சி பாயின்ட், பீன் கௌலா, சிட்னி பாயின்ட், டும் அணைக்கட்டு, லின்டுமாலா அருவி என்று பல இடங்கள் பார்த்து ரசிக்க உள்ளன.
ஈடா நகர் (ITA NAGAR)
அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரம். கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. இங்கேபோக, அஸ்ஸாமின் ஹர்முடி ரயில்வே நிலையத்தில் இறங்க வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈடா கோட்டை பிரபலமானது. தலாலாமாவால் அருளப்பட்ட புத்த விஹாரம் இங்குள்ளது. கங்கா ஏரி என்பது ஓர் அழகிய இயற்கை நீர்நிலை. படகுச் சவாரியும் உண்டு. இந்த இடத்திலிருந்து போம்டிலா, பீஷ்மக் நகர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் போய்வர மினி பஸ் வசதி உண்டு.
பச்மாரி (PACHMARHI)
சாத்புராவின் ராணி என அழைக்கப்படும் இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. 1100 மீட்டர் உயரத்தில் உள்ள இதன் அருகில் தான் விந்திய, சாத்புரா மலைத் தொடர்கள் உள்ளன. 10000 வருடங்கள் தொன்மை கொண்ட குகை ஓவியங்களை இங்கு காண முடியும். தேக்கு மரம் உள்பட பலவித பயனுள்ள மரங்கள் இங்கு வளர்கின்றன. ரஜத் பராபட் எனப்படும் பெரிய அருவி, தேனி அருவி, அப்சரா அருவி போன்ற அருவிகளோடு ‘சௌராக்’ எனும் சிவாலயத்தையும் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மையப் புள்ளி இதன் அருகில்தான் உள்ளது. போபாலிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் பச்மாரியை அடையலாம்.
ஏற்காடு
‘கொஞ்சமா செலவாகணும்... ஆனா ஜில்லுன்னு ஜாலியா பொழுது போக்கணும்’னா அதுக்கு ஒரே சாய்ஸ் ஏற்காடு தான்! சேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி இது. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளின் ஊடே பயணித்தால் ஆரஞ்ச், பேரிக்காய், காஃபி தோட்டங்களைக் காணலாம். ஏரியில் படகு சவாரி, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, காய்கனி சந்தை என எல்லாமே டூரிஸ்ட் அட்ராக்ஷன்தான். குறிஞ்சி பூக்கும் சீஸனில் சுற்றுலா பயணிகள் அலைமோதுவார்கள்.

ஆலப்புழா (ஆலெப்பி)
படகு சவாரின்னு சொன்னதுமே ஞாபகத்துக்கு வருவது ஆலப்புழாதான். தென்கேரளாவிலுள்ள ஆலப்புழாவில் அழகிய கடற்கரை, இயற்கை அழகு நிறைந்த உப்பங்கழிகள், மிக அமைதியான ஏரி, ரம்யமான படகு வீடு பயணம் போன்றவை மறக்க முடியாதவை. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஆலப்புழா படகுப் போட்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்தியாவின் பல இடங்களில் இருந்து இரயில் மூலமாக ஆலப்புழாவைச் சென்றடையலாம்.

Tuesday 6 January 2015

தேங்காய் சம்பல்!!!

எளிதில் செய்ய கூடிய சம்பல் இது. இதனை இடியாப்பம், தோசை, ரொட்டி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதில் காரத்திற்கு காய்ந்த மிளகாயினை பொடித்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

துறுவிய தேங்காயிற்கு பதிலாக தேங்காய் துண்டுகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த பிறகு வெங்காய சேர்த்து அரைக்கவும்.

சின்ன வெங்காயம் சேர்ப்பது கூடுதல் சுவையினை தரும்.

புளிப்பிறகு எலுமிச்சை சாறுக்கு பதிலாக விரும்பினால் புளி சேர்க்கலாம். ஆனால் எலுமிச்சை சாறு தனி டேஸ்ட் கொடுக்கும்.

கண்டிப்பாக கருவேப்பில்லை + சோம்பு சேர்க்கவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  தேங்காய் துறுவல் - 1 கப்
   .  சின்ன வெங்காயம் - 5
   .  காய்ந்த மிளகாய் - 5 - 8 (காரத்திற்கு ஏற்ப)
   .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
   .  எண்ணெய் - 1 தே.கரண்டி
   .  சோம்பு - 1/2 தே.கரண்டி
   .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
.   சின்ன வெங்காயத்தின் தோலினை நீக்கிவிடவும். காய்ந்த மிளாயினை கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். 

.   அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பிலை தாளித்து வைக்கவும்.

.   மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.


.   மிளகாய் நன்றாக பொடித்த பிறகு அத்துடன் துறுவிய தேங்காய்  + சின்ன வெங்காயம் சேர்த்து 4 - 5 முறை Pulse Modeயில் அடித்து கொள்ளவும்.


.   கடைசியில் தாளித்த சோம்பு + கருவேப்பிலை + எலுமிச்சை சாறு + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 3 - 4 முறை Pulse Modeயில் அடித்து கொள்ளவும்.


.   எளிதில் செய்ய கூடிய சுவையான சம்பல் ரெடி. இதனை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Sunday 4 January 2015

அக்கி நோய் மருந்து!!!

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.
மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.
மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.
உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,


மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்!!!

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!
1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.


50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

                                           

'குழம்புமாவு உப்புமா '!!!

'குழம்புமாவு உப்புமா '
குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' .ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்.

திருவாதிரைக் களி!!!



திருவாதிரைக் களி இதை இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் .

தேவையானவை:

பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் )
பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்*
தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி

செய்முறை:

பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும்.
அரிசிரவையும் நன்கு வறுக்கவும்.
mixer grinder இல் பருப்புகளையும் ரவை போல் பொடிக்கவும்.
உருளியில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
நன்கு கரைந்தும் வடிகட்டவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவை களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
வேண்டுமானால் மேலும் தண்ணீர் விடவும்.
ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.
நடுநடு வே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும்.
சுவையான , குறைந்த தித்திப்புடைய 'திருவாதிரை களி' தயார்.
புளிப்பு கூட்டுடன் பரிமாறலாம்.
ஆறினதும் ரொம்பநல்லா இருக்கும்.





தேவையானவை:
7 கறிகாய்கள் (கிழ் உள்ள லிஸ்ட் ஐ பார்க்கவும் )
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

காய் களை கொஞ்சம் பெருசு பெருசாக நறுக்கவும்.
பருப்புடன்குக்கரில் வைக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,வெந்த பருப்பு + காய் புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
திருவாதிரை களி உடன் பரிமாறவும்.

குறிப்பு:சேனைக்கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், பறங்கிக்காய், மொச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தட்டைக்காய், புடலை, சேனைக் கிழங்கு,பீன்ஸ், உருளை, கேரட், கருணைக் கிழங்கு, காராமணி, பச்சை பட்டாணி இந்த லிஸ்ட்லிருந்து 7 அல்லது ஒன்பது காய்கறிகள் எடுத்துக்கலாம்.