Sunday 29 December 2013

ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!!!




நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி 
இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை 
செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி
பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு 
கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் 
பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். 
ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ்
பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே?
-
ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் 
பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில
எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் 
பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...

-

பி.கு:  ALT+65 முதல் 90 வரையில் capital letter வரும்.




  • a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)
  • b - alt+98
  • c - alt+99
  • d - alt+100
  • e - alt+101
  • f - alt+102
  • g - alt+103
  • h - alt+104
  • i - alt+105
  • j - alt+106
  • k - alt+107
  • l - alt+108
  • m - alt+109
  • n - alt+110
  • o - alt+111
  • p - alt+112
  • q - alt+113
  • r - alt+114
  • s - alt+115
  • t - alt+116
  • u - alt+117
  • v - alt+118
  • w - alt+119
  • x - alt+120
  • y - alt+121
  • z - alt+122
  • -

Saturday 28 December 2013

சிறுநீர்ப் பரிசோதனை!!!



சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

Friday 27 December 2013

கம்ப்யூட்டர் செய்திகள் அறிய!!!

கம்ப்யூட்டர் பற்றிய செய்திகள் , technical விஷயங்கள் , புதிய செய்திகள் அறிய இந்த லிங்க்கிற்கு செல்லவும்.கம்ப்யூட்டர் செய்திகள் அறிய

.சமையலில் செய்யக்கூடாதவை!!!

...சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

Wednesday 25 December 2013

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.


எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

Saturday 21 December 2013

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!!!!

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
      

சீரகம்=சீர்+அகம்..!!!

சீரகம்=சீர்+அகம்..!

"எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே"
- ஆசான் தேரையர்

தமிழ்ச்சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.

தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு .

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பொதுவாக சீரகம்:

வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை..!


தீராத இருமலைப் போக்கும் கைமருந்து!!!

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.

வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.


இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை!!!

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம். 

சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.

சந்திரகலை, சூரியகலை என்றால் என்ன!!!



சந்திரகலை என்றால் என்ன?

இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனா
கிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.

feedback
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்!!!

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

Tuesday 17 December 2013

திருவாதிரைக் களி,. . .கூட்டு செய்வது எப்படி!!! - 2

ருடா வருடம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தில்லையம்பல நடராஜனுக்கு முதல் நாள் அபிஷேகமும், மறுநாள் ஆருத்ரா தரிசனமும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் அனைவரும் களி, கூட்டு என்று செய்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்து விசேஷமாகக் கொண்டாடுவார்கள். அதிகாலை 5 மணிக்குள் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. இனி திருவாதிரைக்களி எப்படிச் செய்வது? எந்த எந்த மாவட்டக்காரர்கள் கூட்டை எப்படிச் செய்கிறார்கள்? என்று பார்க்கலாம். ஆனால், எப்படிச் செய்தாலும் அன்புடன் பக்தியுடன் ஆசாரமாகச் செய்வதை எந்தக் கடவுளும் ஏற்று நமக்கு நன்மை புரிவார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதை வடித்து ஒரு துணியில் பரத்தி சிறிது நேரம் வைக்கவும். நீரை, துணி உறிஞ்சியதும் மிக்ஸியில் இட்டு மாவாக்கி சலித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து அதைத் தனியே பொடித்துக் கொள்ளவும். சலித்து வைத்துள்ள ஈரமாவை வாணலியில் இட்டு நன்கு ஈரம் போக வறுக்கவும். மாவை எடுத்து கோலம் போட்டால் கோல மாவில் போடுவதைப் போன்று பிசிறில்லாமல் வரவேண்டும். இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்த மாவுடன் பொடித்து வைத்த பாசிப்பருப்பு மாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம், குக்கர் அல்லது வெண்கலப்பானையில் 1 டம்ளர் நீர்விட்டு வெல்லத்தைச் சீவிப் போடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அதை மறுபடியும் வடிகட்டினால் அதிலுள்ள மண் நீங்கிவிடும். பிறகு அவ் வெல்லத் தண்ணீருடன் 1ரு டம்ளர் நீரைக் கூடுதலாகச் சேர்த்து அத்துடன் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து வெல்லவாசனை போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டி கட்டியில்லாமல் நீர் வற்றும் வரை கிளறவும். மாவு நன்கு வெந்து நீர் வற்றியதும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும். பிறகு சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொட்டி கிளறினால் திருவாதிரைக் களி ரெடி! சூட்டுடன் இருக்கும்போது சற்று குழைந்தும்; ஆறியவுடன் பொலபொல என புட்டுமாவு போலவும் இருக்கும்.
இப்படிச் செய்த திருவாதிரைக் களியை சுவாமிக்கு நிவேதனம் செய்து மற்றவர்க்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழலாம்.
கூட்டு எப்படிச் செய்வது?
திருவாதிரைக்களிக்கான கூட்டை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 7 அல்லது 9 கொடிக்காய்களைச் சேர்த்து செய்வார்கள். கேரள மாநிலத்தவர் கிழங்கு வகைகளையும் கொடிக்காய்களையும் சேர்த்துச் செய்வர். அதிலும் குறிப்பாக காவத்தங்கிழங்கு என்னும் கிழங்கை அன்று கூட்டில் கண்டிப்பாகச் சேர்ப்பார்கள். இனி திருவாதிரைக் கூட்டு செய்யும் முறையைப் பார்ப்போம்.
இது கேரளா ஸ்டைல்!
சேனைக்கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், பறங்கிக்காய், மொச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காவத்தங்கிழங்கு சேர்த்து, தனித்தனியே காய்கறிகளை வேகவைத்து ஒன்று சேர்க்கவும். ஒரு மூடி தேங்காய்த் துருவலையும் 10 பச்சை மிளகாயையும் மிக்ஸியில் அரைத்துலு கப் இலேசான புளித்த தயிரில் இதைக் கலந்து கொள்ளவேண்டும். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிக்கலவையில் கொட்டிக் கிளறி கறிவேப்பிலை சேர்த்து, காயாத பச்சைத் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்கி இறக்கவும்.
இது நம்ம ஊரு ஸ்டைல்!
பூசணி, பறங்கி, அவரை, மொச்சை, தட்டைக்காய், புடலை, பீர்க்கு, பாகல்,  சேனைக் கிழங்கு சேர்த்து வேகவைத்து புளிவிட்டு கொதிக்கவிடவும். இதனுடன் பச்சை மிளகாய் 10 கீறிப்போட்டு உப்புப்போட்டு நன்கு புளி வாசனை போன உடன் பெருங்காயம் சேர்த்து அத்துடன் 1 அச்சு வெல்லத்தையும் சேர்ப்பார்கள். கூட்டு நீர்க்க இருந்தால் திருவாதிரைக் களிக்கு அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து நீரில் கலக்கி இதனுடன் சேர்ப்பார்கள். காய்கறிக் கூட்டு கெட்டியானதும் கீழே இறக்கி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்ய வேண்டும்.
இது கொங்கு நாட்டு ஸ்டைல்!
ஒன்பது காய்கறி (கொடிக்காய்கள்) வேகவைத்து நீர்ப்புளி விட்டு உப்புப் போட்டு கொதிக்க விடவும். மல்லிவிதை, கடலைப் பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றலை வறுத்து அத்துடன் வெந்தயம் சிறிதளவு சேர்த்து வறுத்து அரைத்து காய்கறிக் கலவையில் கொட்டிக் கிளறி கறிவேப்பிலைசேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெயில் தாளிதம் செய்ய மணக்க மணக்க புளிக்கூட்டு ரெடி.
இதையே சிதம்பரம், ஆற்காடு மாவட்டத்திலுள்ளோர் மேற்கண்ட கூட்டுடன் துவரம் பருப்பை, அல்லது முழுத்துவரையை, பச்சையாகக் கிடைத்தாலும் அதைச் சேர்த்து வேக வைத்துச் செய்வர்.
- சரஸ்வதி ராமசாமி,
கோயம்புத்தூர்.

திருவாதிரை களி செய்வது எப்படி!!!-1

திருவாதிரை களி

திருவாதிரை களி

ஆருத்திரா தரிசனம் அன்று மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும்
இந்த களி  சுவையில் சிறந்தது.

தேவையானவை:-

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம்  1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய்   5
முந்திரி       10
நெய் 200 கிராம்



அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில்
தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது
இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் .

வெல்லம்  சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்


அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த
நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக
கொதிவந்ததும்  பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு
சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .

நன்றாக 8 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில்
இருந்து இறக்கிவிடவும் .

மேலே நெயில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி
செய்து போடவும் .

நெய் அதிகமாக விட்டு கிளறவும் - சுவை கூடும்

சுவையான திருவாதிரை களி  இதோ உங்களுக்காக



இதற்க்கு பிரத்தியேக கூட்டு ஓன்று உண்டு அதை 7 தான் கூட்டு
என்று அழைப்பார்கள் அதைப் பற்றி தனியாக பார்க்கலாம்


பொதுவாக இதை 7 தான் கூட்டு என்று சொல்லுவார்கள்
ஆனால் நாம் போடக்கூடிய காய்களை பார்ப்போம்

உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
அவரைக்காய்
வாழைக்காய் (விருப்பம் இருந்தால் )
கொத்தவரங்காய்
பீன்ஸ்
கேரட்
பச்சை பட்டாணி
மொச்சை
பூசணிக்காய்
பரங்கிக்காய்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ)

தேவையானவை
மேலே சொன்ன காய்கறிகள்
பருப்பு 2 கப் ( வேகவைத்தது)
புளித்தண்ணி கரைத்தது (4 கப்)

வறுத்து பொடி செய்ய தேவையானவை

கடலைப்பருப்பு
வரமிளகாய்
தேங்காய் துருவல்
தணியா 

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மேலே சொன்னவற்றை
தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும் , இதை மிக்சியில்
போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய காய்களை கொஞ்சம் உப்பு சேர்த்து
தண்ணீர்விட்டு அடுப்பில் நன்றாக வேகவைக்கவும்

காய்கள் வெந்த நிலையில் கரைத்து வைத்த
புளிக்கரைசலை சேர்த்து உப்பு , பெருங்காயம்
சேர்த்து , அதனுடன் செய்து வைத்துள்ள பொடியை
சேர்த்து , வேகவைத்து தயார் நிலையில் உள்ள
பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும் (கொதிக்கும் நேரம் அவரவர்
சுவைக்கும் திறனை பொருத்தது)

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை
போட்டு விடவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , செய்துவைத்த களி , கூட்டை
இறைவனுக்கு படைத்து , சுவைத்தால் சுவை கூடும்

Monday 16 December 2013

உதவிக்கரம் !!!

       




மாற்றுத்திறனாளிக்காக உதவ முன் வந்த மனிதரைப் போற்றுவோம் தாங்கள் உதவாவிடினும் பரவாயில்லை தயவு செய்து ஒரு முறை மட்டும் பகிருங்கள்.

பாடல்களிலிருந்து இசையையும், குரலையும் தனித்தனியாக பிரிக்க உதவும் மென்பொருள்!!!

இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குர லையும் பிரித்தெடுக்கும் தொழி ல்நுட்பம் பற்றியும், இதற்கு பய ன்படும் மென்பொருட்கள் பற்றி யும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்க ள்.

1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெ டுக்க வேண்டிய

தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்ப டுத்த.

2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்குதிரைக்கு அருகில்/ பின்னால் இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குர லையும் பிரித்தெடுக்கும் தொழி ல்நுட்பம் பற்றியும், இதற்கு பய ன்படும் மென்பொருட்கள் பற்றி யும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்க ள்.

1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெ டுக்க வேண்டிய

தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்ப டுத்த.

2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்குதிரைக்கு அருகில்/ பின்னால் இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குர லையும் பிரித்தெடுக்கும் தொழி ல்நுட்பம் பற்றியும், இதற்கு பய ன்படும் மென்பொருட்கள் பற்றி யும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்க ள்.

1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெ டுக்க வேண்டிய

தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்ப டுத்த.

2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்குதிரைக்கு அருகில்/ பின்னால் பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்குதிரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, realtime இல் இசை ப்பார்க ள். இதில் ஒருசில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சி களில் Studioஇல் வைத்து தனியாக record செய்த Back ground music இல் தான் பாடுவார்கள். இவ் வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும். ஒரு போதும் இவ்வாறான சந்தர் ப்பங்களில் software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல் லை.

எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன் படுத்தகூடிய ஒரேஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.  (free version + கட்டண  version )