Saturday 27 July 2013

Homeo tips for Renal Colic!!!



CLINICAL TIPS: BERBERIS is an excellent remedy for renal colic. The pains are of a shooting character. The patient cannot make the slightest motion and must sit bent over towards the painful side to obtain relief. If in addition, he complains of sharp, darting pains following the direction of the ureter and extending into the hip, there is no remedy like BERBERIS,
Dr. E. A. Farrington

Thursday 25 July 2013

மனித உடலில் ஏழு சக்கரங்கள் இயங்குகின்றன!!!

இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது.

அவை 

மூலாதாரம்,

ஸ்வாதிஷ்டானம்,

மணிப்பூரகம்,

அனாகதம்,

விஷீத்தி,

ஆக்ஞா,

சகஸ்ரஹாரம்.

வீரிய சக்தியான மூலாதாரம் முதுகெலும்பின்

கடைசிப்பகுதியில் (நமது மலத்துவாரத்துக்கு சற்று மேலே)

அமைந்துள்ளது.

இது விநாயகரின் ஆசி பெற்ற இடமாகும்.

ஐம்பூதங்களில் இது மண்ணுக்குரியது.



ஆசாபாசங்கள்,மனிதனின் அடிப்படை உணர்வுகள் மற்றும்

சிருஷ்டிக்குரிய ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்குக்

கீழே அமைந்துள்ளது.

இது அக்கினிக்குரியது.



தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது மணிப்பூரகம்.

இது பயம்,பதற்றத்துக்குரியது.

இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.

இது பெண்களுக்குரிய சக்தி மையம் ஆகும்.



இரண்டு மார்புகளுக்கு நடுவே அமைந்திருப்பது அனாகதம்.

கருணை,அன்பு போன்றவற்றின் இருப்பிடமான இது

ஐம்பூதங்களில் காற்றிற்குரியது.



தொண்டைக்குழியில் இருப்பது விசுத்தி.

சிந்தனை,சுதந்திர உணர்வு,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்

திறன் ஆகிவற்றிற்குக் காரணகர்த்தாவான இது

ஆகாயதத்துவத்தின் அடிப்படையில்

இயங்கிவருகிறது.



புருவத்தின் நடுப்பகுதியில் இருப்பது ஆக்ஞா.

இது உள்ளுணர்வின் இருப்பிடம் ஆகும்.

ஐம்பூதங்களில் மனதின் சக்தியிது.


சஹஸ்ரஹாரம் உச்சந்தலை தியானமும்,

பிரபஞ்ச பிரக்ஞையும் பிறக்குமிடம்.


இந்த ஏழுச் சக்கரங்களுக்கு உரிய திருஸ்தலங்களே

திருவாரூர்,
திருவானைக்கால்(திருச்சி),

திருவண்ணாமலை,

சிதம்பரம்,

திருக்காளஹஸ்தி,

காசி,


திருக்கயிலை.

மானிட உடம்பின் கடிகாரம்!!!

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர்.

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்
இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர்.

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள். 

via Ravi Nag

Monday 22 July 2013

Natural Kidney cleaner!!!(If u have Kidney problem consult before taking--Moreover too much Parsley may effect Abortion accoring to WebMD)

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments.
How are we going to do this?
Kidney cleanse is very easy, first take a bunch of parsley(Kothimbir, coriander leaves) and wash it clean. Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool. Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination. Also you will be able to notice the difference which you never felt before.
Parsley is known as best kidney cleanse treatment and it is natural!

Photo: *** Clean Your Kidneys with Less than $1 or even less ***

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments.
How are we going to do this?
Kidney cleanse is very easy, first take a bunch of parsley(Kothimbir, coriander leaves) and wash it clean. Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool. Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination. Also you will be able to notice the difference which you never felt before.
Parsley is known as best kidney cleanse treatment and it is natural!

Useful info
b

Tuesday 16 July 2013

பயனுள்ள 9 தளங்கள்!!!!

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்



இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான வ
ிஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . http://www.pdfunlock.com/

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com/

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்

5 . http://isitraining.in/

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . http://www.typingweb.com/

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . http://www.gedoo.com/

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 . http://www.cvmaker.in/

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 . http://www.zoom.it/

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி!!!

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

Tuesday 2 July 2013

ஒரு கிளிக்கில் எல்லா உலாவிகளினது History Files மற்றும் Temporary Files முழுவதையும் அழிக்க.!!!

பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவான Temporary Files, Cookies மற்றும் History Files ஆகியவை தேங்குகின்றன. இதனால் வன்தட்டில் இடம் குறைவதுடன் கணணியின் வேகத்தையும் குறைக்கின்றது. இவை அனைத்தையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு அழிப்பது என்று இப்போ பார்ப்போம்.

இதற்காக முதலில் கீழ் உள்ள இணைப்பை தொடுத்து மென்பொருள் ஒன்றினை நிறுவிக்கொள்ளவும்.
இது வெறும் 1MB இலும் குறைந்ததே.( தரவிரக்கிய மென்பொருளை நிறுவும்போது தேவையற்ற Toolbars இருப்பின் அவற்றை தவிர்த்து நிறுவுவது நல்லது.)
நிறுவியபின்னர் மென்பொருளை பயன்படுத்தவேண்டியதுதான். இம்மென்பொருளில் பல நன்மைகள் உண்டு.

அதாவது இதில் பல Tab ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை நாம் தெரிவுசெய்யும் வசதி உள்ளது. உதாரணமாக நாம் எந்தெந்த உலாவிகளின் History Files களை அழிக்க வேண்டுமோ அவற்றை மட்டும் தெரிவு செய்யலாம்.


மேலும் குறிப்பிட்ட ஒரு உலாவியில் Password, Autofill போன்றவை சேமித்து வைத்திருப்பின் அவற்றை தவிர்த்து மற்றவற்றை அழிக்கலாம்.

இதுபோன்ற பல வசதிகளெல்லாம் உள்ளது. பயன்படுத்திப் பாருங்கள். 

மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப!!!


நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா?

இதற்கு நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்திற்கு செல்லுங்கள்...

                                      http://vocaroo.com/

இப்போ கீழ் காட்டியவாறு அத் தளத்தின் முகப்பு காணப்படும். இங்கு சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணியபின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும்.



இதில் பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்றவேண்டுமெனத் தோன்றின் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்ட “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் நீல வட்டத்தால் காட்டப்பட்ட “Send to a Friend” என்பதையும்; உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் மண்ணிற வட்டத்தால் காட்டப்பட்ட “Post on the Internet”என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend”  என்பதை தெரிவுசெய்திருப்பின் கீழுள்ள பக்கம் தோன்றும்.



இதில் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும்  கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.

Photo 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா? !!!


இங்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான படங்களை தரவேற்றியபின் விரும்பிய குறியீடுகளை கொடுத்தால் அது அக் குறியீடுகளைப் பயன்படுத்தி படம் வரைந்து தரும்.


விரும்பின் நீங்கள் அப் படத்தை சேமித்தும் கொள்ளலாம். சேமிக்கும்போது அது “.txt” வடிவிலேயே சேமிக்கப்படும். அதாவது Notepad இல். விரும்பின் சேமித்த படத்தில்கூட நீங்கள் மாற்றம் செய்து ரசிக்கலாம்.
அத்தளத்துக்குச் செல்ல...



Monday 1 July 2013

அனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..!!!

நீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக்கும். எனவே இதனை அழிப்பதற்காக வினைத்திறனான மென்பொருளாக நாம்CCleaner ஐப் பயன்படுத்துகின்றோம்.

உங்கள் கணணியில் வேறு தேவைகளுக்காக பல User Accounts களைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு கணக்கினுள்ளும் சென்றே கணணியை சுத்தஞ்செய்ய வேண்டும். ஆனால் இம்முறையை ஒருமுறை செயற்படுத்துவதன்மூலம் பின்னர் ஏதாவது ஒரு கணக்கினை Login செய்யும் போதே தன்னிச்சையாகவே அனைத்து User Account களும் சுத்தஞ் செய்யப்பட்டுவிடும்.

முதலில் Start Button  ஐக் கிளிக்செய்து படத்தில் காட்டியவாறு Search boxஇல்  regedit  என Type செய்து Enter பண்ணி RegistryEditor ஐ திறந்துகொள்ளவும்.



பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று RUN என்பதை அடையவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Run



இப்போ RUN என்பதை கிளிக் செய்துவிட்டு வலது பக்கத்தில் உள்ள பகுதியில் ஏதாவதொரு இடத்தில் வைத்து Right-Click செய்து New à String Valueஎன்பதை தெரிவுசெய்து New Value என்பதற்கு CCleaner என பெயர்மாற்றவும்.



இப்போ CCleaner என்பதில் வைத்து Double-Click செய்து அல்லது Right-Clickசெய்து Modify… என்பதை கிளிக் செய்வதன் மூலம் தோன்றும் விண்டோவில் உள்ள Value date என்ற இடத்தில் கீழ் உள்ளதை Type செய்யவும்.

C:\Program Files\CCleaner\CCleaner.exe /auto



(குறிப்பு: நீங்கள் 64-bit Windows பயன்படுத்தினால் மேலுள்ள சொல்லில் உள்ளProgram Files என்பதற்கு பதிலாக  “ Program Files(x86) “ என்பதை எழுதவும். )

இப்போ நீங்கள் கணக்கினுள் நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைத்து கணக்குகளும் தன்னிச்சையாகவே  CCleaner மூலம் சுத்தஞ்செய்யப்பட்டுவிடும்.....


பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.!!!!

பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MBயிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்வேளையில் பல பகுதிகளாக அனுப்புவது வழமை.

ஆனால்; வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.

எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் நாம் இலவசமாக எமது கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link  Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.

வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.

 

கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.

இன்னுமோர் சிறந்த தளத்துக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது 



தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.!!!


1. திருக்குறள் இசைவடிவில் உரையுடன் பதிவிறக்க (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)


2.மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைவடிவில பெற
 (பெண்மை)


3. திருவாசகம், திருப்புகழ், கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வைரமுத்து கவிதைகள், மனசே ரிலாக்சு உள்ளிட்ட ஒலிக்கோப்புகளைப் பெற
 (தமிழ் மியுசிகா)

4. புகழ்பெற்ற அறிஞர்களின் தமிழ்ச் சொற்பொழிவுகளின் ஒலிக்கோப்புகள் கொண்ட வானொலித் தளம்.கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வசதி உள்ளது. 


5. சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதிப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலின் (இட்லியாக இருங்கள்)ஒலிவடிவத்தைத் தரும் வலைப்பதிவு (ஆடியோ தமிழ்புக்)

அருமையான இணையத்தளங்கள் - மழலைகளுக்காக!!!


1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk/


2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி 
கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் 
செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் 
இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது இந்த தளம்.www.alfy.com/

3. பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் 
பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.www.surfnetkids.com/

4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க 
விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது இந்த முகவரியில் உள்ள தளம். www.kidsites.org/


5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது . உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல 
அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி
அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் 
அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: 
www.coolmath.com 
www.coolmath4kids.com/ 
www.sciencemonster.com/ 
www.spikesgamezone.com/


6.யாஹூவில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. www.kids.yahoo.com/

7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் 
மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் 
கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து 
இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற ஒரு தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன. www.hitentertainment.com/


8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து 
விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org/என்றமுகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக 
www.nickjr.com/ 
www.uptoten.com/ 
www.kidsgames.org/ 
www.gameskidsplay.net/ 
ஆகியவை உள்ளன.


9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் 
விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் இது. இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து 
அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் 
தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்த தளம். 
www.playkidsgames.com/


10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com
என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று 
தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 
அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் 
வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன. 
www.funbrain.com/


11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்தைகளுக்கான தளம் எதுவும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கலாம். இவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் உள்ளது ஒரு தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதாரணமாகப் பயன்படுத்தினாலே அவர்களின் சிந்திக்கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும்.www.everythinggirl.com/

இதில்மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல 
வழிகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.

கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்!!!


பள்ளியில்
எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று 
மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் 
கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது சற்று வேடிக்கையாக கூறினால் 
எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள், இதைப்போல் தான் 
கணித்ததை வேடிகையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம், இங்கு 
சென்று சாதாரண பெறுக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர், 
இயற்கணிதம் ( Algebra), வடிவவியல் (Geometry ) வரை அத்தனையையும் 
வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர் ,
கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால்
கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல். கணித 
ஆசிரியர்கள் முதல் கணிதம் விரும்பாதவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு 
பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://www.mathsisfun.com




SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு!!!

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.
அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம். 

இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். 

மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி: 

முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள். 

அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள். 

ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும். 

இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்) 

நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.

அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம். 

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை: 

மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும். 

புதிய நண்பரை சேர்க்க - add your friend name.
Subcribe செய்ய - Subscribe your friend name.