Friday 1 August 2014

சமையல் குறிப்புகள் ! பொடி வகைகள்!!!

இஞ்சி பூண்டு பேஸ்ட்
இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு தேவையான பொருட்கள் இஞ்சி - ஒரு கிலோ பூண்டு - அரை கிலோ எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி செய்முறை முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம். குறிப்பு: சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்யமட்டார்கள். இது டீவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான் ---------------------------------------------------------------
ரசப்பொடி
இது நான் திரிக்கும் ஸ்பெஷல் ரசப்பொடி. தேவையான பொருட்கள் தனியா - முன்று மேசை கரண்டி துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி மிளகு - ஒரு மேசை கரண்டி சீரகம் - இரண்டு மேசை கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பெருக்காயம் - கால் தேகரண்டி (அ) ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை - கால் கைபிடி காஞ்ச மிளகாய் - நாலு செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலி காய வைக்கனும் அதற்கு டைம் கிடையாது லேசா இரும்பு கிடாயில் வறத்து ஆற வைத்து விடுவேன். பிறகு காய்ந்த மிக்ஸியில் பர பரன்னு திரித்து வைத்து கொள்வேன். இது ஒரு சிறிய கண்டெய்ணரில் போட்டு வைத்தால் நாலைந்து முறை செய்ய வரும். இது கருவேப்பிலையையும் தேடி பிடிக்க தேவையில்லை. வெரும் நெய் கடுகு தாளித்து இதை போட்டு புளி தண்ணீ கரைத்து ஊற்றினால் போதுமானது. -----------------------------------------------------------------
திடீர் பூண்டு இட்லி பொடி
இட்லி பொடி இல்லாத நேரத்தில் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். தேவையான பொருட்கள் பூண்டு - 10 பல் தோலுடன் காய்ந்த மிளகாய் - 5 உப்பு - 1 தே.கரண்டி செய்முறை பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ------------------------------------------------------------
கிட்ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் பொட்டு கடலை ( ஓடைத்த் கடலை) - 1 கப் பூண்டு -3 பல் தோலுடன் உப்பு - 1/2 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,பூண்டு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ,எளிதில் தயாரிக்க கூடிய கிட்ஸ் இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். -------------------------------------------------------------
சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் ஓமம் - 1 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன் நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன் ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன் கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ. தேவையான பொருட்கள் 1. மிளகு - 16 2. பட்டை - 1 இன்ச் 3. லவங்கம் - 4 4. ஏலக்காய் - 4 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி 3. பூண்டு - 3 பல் 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 6. கறிவேப்பிலை - கொஞ்சம் 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி 8. உப்பு செய்முறை எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும். ---------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் கண்ணிற்கும் மிகவும் நல்லது. இந்த அளவில் பொடித்தால் ஒருவாரம் வரை வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது புதிதாக பொடித்துக் கொண்டால் தான் வாசனையாக இருக்கும். தேவையான பொருட்கள் இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். குறிப்பு: இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். --------------------------------------------------------------
குழம்புப் பொடி
மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும். தேவையான பொருட்கள் தனியா- ஒன்றரை கிலோ வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ கடலைப் பருப்பு- 100 கிராம் மிளகு-50 கிராம் சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 1 மேசைக்கரண்டி அரிசி- 1 மேசைக்கரண்டி சோம்பு- 1 மேசைக்கரண்டி செய்முறை அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் -------------------------------------------------------------------------
ரசம் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் துவரம் பருப்பு - ½ கப் காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 15 சீரகம் - 1/4 கப் கருவேப்பில்லை - 10 இலை பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி வெந்தயம் - ½ தே.கரண்டி செய்முறை முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் -------------------------------------------------------------------------------------
திடீர் சம்பார் பொடி
தேவையான பொருட்கள் தேவையானப் பொருட்கள் 1) காய்ந்த மிளகாய் - 25 2) தனியா - 1 கப் 3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு செய்முறை ஒரு வெறும் வானலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். -------------------------------------------------------------------------
இன்ஸ்டன்ட் மசாலா டீ
வடிகட்டும் வேலை இல்லாமல், காபி போல் மசாலா டீ இன்ஸ்டன்ட் 'ஆ தயாரிக்க இது உதவும். தேவையான பொருட்கள் 1. பால் பவுடர் - 2 கப் 2. சர்க்கரை - 2 1/2 கப் 3. இன்ஸ்டன்ட் டீ தூள் - 1 1/2 கப் [Tetley or any other brand - Instant Tea Granules] 4. சுக்கு தூள் - 2 தேக்கரண்டி 5. பட்டை பொடி - 2 தேக்கரண்டி 6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 7. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது 1 மேஜைக்கரண்டி தூள், 100 (அ) 150 மில்லி கொதிக்கும் நீர் சேர்த்தால் டீ தயார். ஒரு கப் செய்து பார்த்து ருசிக்கு தகுந்த மாதிரி பால் பவுடர், சர்க்கரை அளவுகள் மாற்றவும். ---------------------------------------------------------
இட்லி பொடி (கருப்பு உளுத்தம் பருப்பு)
இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பில் செய்வதால் சுவை அதிகம். தேவையான பொருட்கள் கருப்பு உளுத்தம் பருப்பு (தோலுடன்) - 1 கப் பெருங்காயம் - ½ தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 2 பல்( தோலுடன்) உப்பு - 1 தே.கரண்டி நல்லெண்ணெய் - 1/2 தே.கரண்டி செய்முறை முதலில் கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து தனியே வைக்கவும். அதன் பின் கொடுத்துள்ள 1/2 தே.கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். அனைத்து பொருட்களையும் ஆறவிடவும். பின்னர் மிக்ஸியிம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு அத்துடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 30 விநாடி (Seconds) திரும்பவும் சேர்த்து அரைக்கவும். இப்பொழுது இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் உடன் கலந்து இட்லி , தோசையிற்கு கூட சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: கடைசியில் பூண்டினை சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடி 2 / 3 மாதங்கள் வரை கொடமால் இருக்கும். ------------------------------------------------------------
நோன்பு கஞ்சி பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 50 கிராம் வெந்தயம் - 25 கிராம் சோம்பு - 25 கிராம் பட்டை -10 கிராம் கிராம்பு - 10 கிராம் ஏலக்காய் - 10 கிராம் செய்முறை மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும். ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி.இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம்.சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும். குறிப்பு: கஞ்சி போடும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும்.ஊறவைத்த பச்சரிசியுடன்,நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு,வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை,புதினா உப்பு போட்டு வேக வைக்கவும்.வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி.கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கொத்துக்கறி,கேரட் ,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்க்களை சேர்த்தும் செய்யலாம். ---------------------------------------------------------------
சத்து மாவு பொடி
தேவையான பொருட்கள் 1. கேழ்வரகு - 250 கிராம் 2. கம்பு - 250 கிராம் 3. சோளம் - 200 கிராம் 4. மக்காச்சோளம் - 200 கிராம் 5. சம்பா கோதுமை - 10 கிராம் 6. பாசி பயிறு - 10 கிராம் 7. ஜவ்வரிசி - 10 கிராம் 8. வேர்கடலை - 10 கிராம் 9. முந்திரி - 10 கிராம் 10. பாதாம் - 10 கிராம் 11. பொரிகடலை - 10 கிராம் 12. சிகப்பரிசி - 10 கிராம் 13. ஏலக்காய் - 5 செய்முறை அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும். பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும். இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம் --------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் தனியா 3 கப் துவரம் பருப்பு ஒரு கப் சீரகம் அரை கப் மிளகு கால் கப் காய்ந்த மிளகாய் 10 செய்முறை முதலில் துவரம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து போட்டு வறுத்த பிறகு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் கம கம ரசம் எளிதில் தயார் செய்துவிடலாம். -----------------------------------------------------------------
இட்லி பருப்புபொடி(குழந்தைக்கு)
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு -1கப் கடலைபருப்பு -1/2கப் துவரம்பருப்பு -1/4கப் காய்ந்தமிளகாய் -3 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையான அளவு பெருங்காயதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வறுத்து அதிலேயே பருப்புகளை போட்டு பொன்னிரமாக வறுக்கவும். உப்பு,பெருங்காயதூள் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தட்டில் இட்லியுடன் பொடியை வைத்து நல்லெண்ணை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும். குறிப்பு: வறுக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும் ----------------------------------------------------------------------
ரசப்பொடி
இந்த அளவுப்படி அரைத்தால் இரண்டு பேருக்கு சுமார் இரண்டு மாதத்திற்கு வரும். தேவையான பொருட்கள் தனியா - 2 ஆழாக்கு (250 கிராம்), துவரம் பருப்பு - 1 ஆழாக்கு, கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 2 ஆழாக்கு, சீரகம் - கால் ஆழாக்கு, மிளகு - 1 ஆழாக்கு, காய்ந்த கறிவேப்பிலை - 1 ஆழாக்கு. செய்முறை எல்லா சாமான்களையும் வெய்யிலில் நன்கு காய வைத்து நறநறப்பாக அரைக்க வேண்டும். நைசாக அரைத்தால் ரசம் கொழகொழப்பாக போய்விடும் ----------------------------------------------------------------
எள்ளு பொடி
தேவையான பொருட்கள் எள் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வெறும் வாணலியில் எள்ளை வறுத்தெடுத்து கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு, மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எள் தவிர மற்றெல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். கடைசியாக எள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். -------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
இந்த பொடியினை பொரியல் வகைகள் செய்யும் பொழுது கடைசியில் தூவி கிளற மிகவும் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் வேர்க்கடலை - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 உப்பு - ½ தே.கரண்டி செய்முறை வேர்க்கடலையினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின் காய்ந்த மிளகாயினை போட்டு சிறிது வறுத்து வைக்கவும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவைக்கவும். வேர்க்கடலையின் தோலினை கையினால் தேய்த்தால் வந்துவிடும். வேர்க்கடலையின் தோலினை நீக்கிவிடவும். பின்னர் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இப்பொழுது வேர்க்கடலை பொடி ரெடி. ----------------------------------------------------