Friday 1 August 2014

சமையல் குறிப்புகள் ! பொடி வகைகள்!!!

கூட்டுப் பொடி
இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------- ரச பொடி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப் தனியா - ----------- 3 கப் துவரம் பருப்பு - --------- 1/2கப் மிளகு --------- அரை கப் சீரகம் - ------------ஒன்றறை கப் கட்டிவிரளி மஞ்சள் - 4 செய்முறை விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வறுக்க வேண்டாம் வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும். ----------------------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
தேவையான பொருட்கள் வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப் பொட்டுக்கடலை - 1 கப் வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப் பெருங்காயம் - 1 துண்டு வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 டீஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். ----------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------
சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் -- 10 கிராம் கொத்தமல்லி -- 20 கிராம் வெந்தயம் -- 1 டீஸ்பூன் கடலை பருப்பு -- 1 டீஸ்பூன் பெருங்காயம் -- 1 துண்டு கறிவேப்பிலை -- 2 இனுக்கு தேங்காய் எண்ணைய் -- தே.அ செய்முறை எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி. நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி. -----------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு - 100g காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 பூண்டு - 10 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -- 1 கப் வத்தல் -- 1 கப் பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 2 இனுக்கு உப்பு -- தே.அ வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது) செய்முறை வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள் உளுந்து பருப்பு - அரை கப் கடலை பருப்பு - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது) வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது) கருவேப்பிளை - கால் கப் உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு பூண்டு - ஒன்று செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும் ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் ------------------------------------------------------------------
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி உப்பு - 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கப் காஞ்ச மிளகாய் - நன்கு பெருங்கய்ம் - ஒரு பின்ச் உப்பு - ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள் -------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப் பொட்டு கடலை - முக்கால் கப் கடலை பருப்பு - முக்கால் கப் தனியா - முக்கால் கப் பெருங்காயம் - இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் - இருபது கிராம்பு - பத்து பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி ஏலகாய் - பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம் ---------------------------------------------------------------
ஜலீலா'ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் - கால் கப் எள் - இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை - கால் கப் கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி உப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது. --------------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ---------------------------------------------------------------------------
கரம் மசாலா பொடி
தேவையான பொருட்கள் பட்டை - ஐம்பது கிராம் லவங்கம் - இருபத்தைந்து கிராம் ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி செய்முறை எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும். ----------------------------------------------------------------------
சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)
ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பாணமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம்.வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கட்டியா காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம்.நல்ல பசி தாங்கும். தேவையான பொருட்கள் கேழ்வரகு - அரை கிலோ சம்பா கோதுமை - ஐம்பது கிராம் புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம் பாதம் - ஐம்பது கிராம் ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம் உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம் செய்முறை கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேச கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும். குறிப்பு: டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம் ---------------------------------------------------------------------- ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்) தேவையான பொருட்கள் 1. மிளகு - 100 கிராம் 2. சீரகம் - 100 கிராம் 3. தனியா - 6 தேக்கரண்டி 4. உளுந்து - 3 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி செய்முறை அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும். ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும் ------------------------------------------------------------------------
புளியோதிரை கலவை
இந்த புளியோதரை கலவை ஆபிஸ் போகும் பெண்களுக்கு காலை நேர அவசரத்திற்கு மதியவேளை சாப்பாட்டுக்கு தயாரிக்க ஈஸி, வாரத்தில் ஒரு நாள் இந்த புளியோதரை ரைஸ் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் வேர்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன் புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது] கடுகு - 1டீஸ் ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ் ஸ்பூன் நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு) பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கீற்று நல்லெண்ணெய் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும் அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும். --------------------------------------------------------------------------------