Sunday 15 December 2019

Navarathri Prasadam!!!

*🕉நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?* ☘🌻☘🌻☘🌻☘🔔🔔🔔🔔🔔🔔🔔 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. *முதல் நாள்:* வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். *இரண்டாம் நாள்:* புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். *மூன்றாம் நாள்:* கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். *நான்காம் நாள்:* பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும். *ஐந்தாம் நாள்:* தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம். *ஆறாம் நாள்:* தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். *ஏழாம் நாள்:* எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும். *எட்டாம் நாள்:* பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம். *ஒன்பதாம் நாள்:* சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம். *பத்தாம் நாள்:* விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம். 🌷🍁🌷🍁🌷🍁🌷 🌸💐🌸💐🌸💐🌸

அரத்தை!!!

அரத்தை
மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள்  கழுத்து வலி இடுப்பு வலி சவ்வு விலகல் பிரச்சினைகள்  முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்  ஆமவாதம் முடக்கு வாதம் எனப் படும் ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ்  வயிற்றுப் பொருமல் பசி இன்மை மலசிக்கல்  பித்தப் பைக் கற்களை  அறுவை சிகிச்சை இன்றி கரைக்க  இந்த அரத்தை மிகப் பெரிய உதவி செய்யும்

மூட்டு வலிக்கு

மூட்டு வலிக்கு மிகப் பெரிய அளவில் குணம் தரக்கூடிய மிக சிறந்த மருந்துகளில் அரத்தை பால் கசாயம் ஒன்று ஆகும்
தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... ஐம்பது மில்லி அரத்தை  .......ஒரு தேக்கரண்டி  ஒன்றாக சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து  ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி  அரத்தைப் பால் கசாயமாக  காலை இரவு என நாள்தோறும் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி அரத்தைப் பால் கசாயம் குடித்து வர  மூட்டு வலிகளில் மிகப் பெரிய அளவில் மாறுதல் அடையும்

ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம்  என்னதான் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு சம்பந்தப் பட்ட மருந்துகளையோ சாப்பிட்டு வந்தாலும்  மூட்டுகளில் இருக்கும் இறுக்கமோ முக்கியமாக காலை எழுந்து கொள்ளும்போது இருக்கும் கடுமையான இறுக்கமோ மாலை நேரங்களில் மூட்டுகளில் இருக்கும் வீக்கமோ அல்லது நீண்ட நாள் பிரச்சினையால்  மூட்டுகள் வளைகின்ற திறனிலோ மாற்றங்கள் இருக்காது  இதைக் குணப் படுத்தும் அற்புதமான மருந்து இந்த அரத்தை பால்  கசாயம்

நாள்தோறும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகள் அல்லது காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லிக் கசாயம் குடித்து வர ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம் நோயிலிருந்து படிப் படியாகக் குணமடையலாம்

வயிற்றுப் பொருமல்
காலை எழுந்தவுடன் பசி இருக்கும்  பசிக்கிறது என்று எண்ணி இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் வயிறு பானை போல வீங்கி விடும்  மதியம் சாப்பிடப் பிடிக்காது  இரவு பசிக்கிறதே என்று சாப்பிட்டால் இரவு பாதி இரவு வரை சாப்பிட்டது வயிற்றுக்குள்ளே அடை பட்டிருக்கிறது போன்ற உணர்வு  இந்த மாதிரி பிரச்சினையைக் குறைத்து குணமாகக்கூடிய சிறந்த  அருந்து இது  அரத்தை தூள் ........... மூன்று சிட்டிகை  தண்ணீர் ......... நூறு மில்லி  கொதிக்க வைத்து ஐம்பது மில்லி கசாயமாக்கி  தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு முன் அரை மணி நேரம் முன்  குடித்து வர  ஒரு மாத காலத்தில் வயிற்றுப் பொருமல் வாயுக் கோளாறுகள் மலச்சிக்கல் படிப்படியாகக் குறைத்துக் குணமாக்காக் கூடிய அரு மருந்து இது  \

பித்தப் பைக் கற்கள்
அறுவை சிகிச்சை இல்லாமல் பித்தப் பைக் கற்களைக் கரைக்கக் கூடிய அரு மருந்து அரத்தை  அரத்தை தூள் ....  ஒரு தேக்கரண்டி   தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... இருநூறு  மில்லி உள்ளுக்கு சாப்பிடும் விளக்கெண்ணெய்  அல்லது  ஆலிவ் எண்ணெய் .........  ஒரு தேக்கரண்டி  ஒன்றாகக் கலந்து கொதிக்க வைத்து இருநூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி குடிக்கும் சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்  அரை மணி நேரம் கழித்து ஓரிரு முறைகள் மலம் கழிக்க வேண்டி இருக்கும் பயப் படத்தேவை இல்லை

தொடர்ந்து மூன்று மாதங்கள் இவ்வாறு  குடித்து வர பித்தப் பைக் கற்கள் மறைந்து போய் இருக்கும்
மருத்துவ ஆய்வு ஸ்கேன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம்  பித்தப் பைக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கும் மருந்து இது பித்தப் பைக் கற்கள் கரையும் வரை இந்த மருந்தைக் குடித்து வர வேண்டும்