Sunday 24 August 2014

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!!!

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்


1. ஏதாவது விசேஷத்திற்கு சாப்பிட போகும்முன், ஒரு ஸ்பூன் தேனுடன்,ஒருசிறிய மேசைகரண்டி பட்டைபொடி சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு எதுவும் ஏற்படாது.

2. படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும்.

3. சளி அதிகமாக இருந்தால் பத்து துளசி இலைகளை தொடர்ந்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி அனைத்தும் வந்துவிடும்.

4. தொண்டை வேக்காளாம் வந்து வயிறும் புண்ணாகி, காதில் உள்ளே அரிக்கும். அதற்கு ஒரு சிறிய குழிக்கரண்டி பச்சரிசாதம் சூடாக எடுக்கவும். அதனுடன் அதற்குத் தேவையான சுடுகிற பாலையும் சேர்க்கவும். ஆறியவுடன் ஒரு துளி தயிர் சேர்க்கவும். மறுநாள் காலை பல்விளக்கியவுடன் இந்த சாதக்கலவையை சாப்பிடவும். இந்த மாதிரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்று,தொண்டை வேக்காளம் இல்லாமல் போய்விடும்.

5. வயிற்று வேக்காளத்திற்கு மணத்தக்காளி கீரையைக் கூட்டு வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேக்காளம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.



6. குழம்போ, ரசமோ செய்யும் பொழுது உப்பு போட்டு இருக்கிறோமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறிய வழி. உப்பு போடவில்லை என்றால் ஒரத்தில் நுரையுடன் கொதித்துக் கொண்டு இருக்கும். உப்பு போட்டு இருந்தால் நடுவில் நுரையுடன் கொதிக்கும்.

7. குழந்தைகள் கறிவேப்பில்லை சாப்பிட மாட்டார்கள். எனவே சமையலில் தாளிக்கும் போது, பதினைந்து இலைகளைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் சத்து சேரும்.

8. பொரித்த கூட்டிற்கு தேங்காய் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காய்கறி வேகும் பொழுதே சிறிது சீரகம் சேர்க்கவும். அனைத்தும் வெந்தவுடன், அரை டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் கடலை மாவை நன்றாகக் கரைத்து, கூட்டில் சேர்க்கவும். தேங்காய் போட்ட ருசி கிடைக்கும்.

9. குழம்பிற்கு பழைய புளியாக இருந்தால், கரைத்த புளியுடன் ஒரு சிறியகட்டி வெல்லம் சேர்த்தால், நல்ல ருசியாக இருக்கும்.

10. கோதுமை தோசைக்கு கரைக்கும் போது, சில சமயம் கட்டிகட்டியாக இருக்கும். அவற்றை மிக்ஸியில் ஒரு முறை நன்றாக ஓட்டி எடுத்தால், மிகவும் மிருதுவாக தோசை வரும்.
---------------------

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.

2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.

5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.



6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.

7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.

10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.
------------


1. மோர் மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து, அது மிச்சமானால் மொறுமொறுப்பின்றி போய்விடும். இதை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இந்த மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

2. பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வேகமாக வெந்து விடும்.

3. பொ‌ங்க‌ல் செ‌ய்யு‌ம் போது, தா‌ளி‌க்கப் பய‌ன்படு‌த்து‌ம் ‌மிளகை அ‌ப்படியே முழுசாக போடுவதா‌ல் அதை வெளியில் எடுத்துப் போட்டுவிடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. இதற்கு மிளகை இலேசாகப் பொடித்துப் போட்டுத் தாளிக்கலாம்.

4. பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும்.

5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

6. பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.



7. கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்தால் கேக்கில் முட்டை வாடை இருக்காது.

8. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

9. சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால் கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும்.

10. பாயாசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

11. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று இருக்கும்.

12. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது கடலைமாவு உப்பு, மிளகாய்த்தூளை நீராகக் கரைத்து அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊறவிடுங்கள் பிறகு எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம்போக காய விடுங்கள் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சிப்ஸ் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

--------


1. மோர் மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து, அது மிச்சமானால் மொறுமொறுப்பின்றி போய்விடும். இதை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இந்த மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

2. பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வேகமாக வெந்து விடும்.

3. பொ‌ங்க‌ல் செ‌ய்யு‌ம் போது, தா‌ளி‌க்கப் பய‌ன்படு‌த்து‌ம் ‌மிளகை அ‌ப்படியே முழுசாக போடுவதா‌ல் அதை வெளியில் எடுத்துப் போட்டுவிடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. இதற்கு மிளகை இலேசாகப் பொடித்துப் போட்டுத் தாளிக்கலாம்.

4. பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும்.

5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

6. பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.



7. கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்தால் கேக்கில் முட்டை வாடை இருக்காது.

8. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

9. சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால் கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும்.

10. பாயாசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

11. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று இருக்கும்.

12. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது கடலைமாவு உப்பு, மிளகாய்த்தூளை நீராகக் கரைத்து அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊறவிடுங்கள் பிறகு எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம்போக காய விடுங்கள் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சிப்ஸ் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

--------