Wednesday 24 April 2013

கைகண்ட [அனுபவ] மருத்துவம்


மயில் எண்ணெயை நாடோடி ஆதிவாசிகள் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கி வாயுப் பிடிப்புள்ள இடங்களில் தேய்த்துக் கொண்டு சுமார் ஆறு மணி நேரத்துக்குபின் வெந்நீரில் குளிப்பதோ சுத்தம் செய்து கொள்வதோ நலம். சுத்தமான மயில் எண்ணெய்தான் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு துடைப்பக் குச்சியை எடுத்து அதில் மயில் எண்ணெயைத் தடிவிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் குச்சியைக் கம்பிபோல் பத்துச் சுற்றுகள் சுற்றலாம்.
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.


அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."


சில எளிய மருத்துவம்: 

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகுமு“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.



வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும். 

-பிலோ இருதயநாத்.

நன்றி:மஞ்சரி 
1

நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (கண்டிப்பாக படியுங்கோ )

மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம்.
இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பவர், கருவில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் இந்த குழந்தையை சுமக்க வேண்டியவராகி விடு கிறார்.
பதினைந்து வயது உடல்வாகுடன், ஐந்து வயது பையனின் குணாதி சயத்துடன் காணப்பெறும் குழந்தையை, பார்த்துக் கொள்வதும், கவனித்துக் கொள்வதும், திறனை வளர்ப்பதும், பெற்ற தாயால் மட்டும் நிச்சயம் முடிகிற காரியமில்லை. தாயாரையே கடிப்பது, காயப்படுத்துவது என்ற நிலை, சிலருக்கு வரும் போது, இன்னும் சிரமம்.
"இதற்கு தீர்வே இல்லையா?' என்றால், "இருக்கிறது' என்கிறார் சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரவிச்சந்திரன். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு பயிற்சி கல்லூரி வளாகத் தில், பசுமை சூழ்ந்த பரந்த வெளியில் அமைந்துள்ளது இந்த சிறப்பு பள்ளி.
பள்ளியில் பெரிதும் சிறிதுமான, ஆண், பெண் குழந்தைகள் 20 பேர் உள்ளனர். இவர்களுக்கு படிப்பை விட, உடல் மற்றும் மூளைத்திறனை வளர்ப்பதே முக்கியம் என்பதால், அதற்கேற்ப இங்கே பல்வேறு பயிற்சி கள், தகுதி வாய்ந்த ஆண், பெண் ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது. இங்கு குழந்தைகள் சேர்க்கப் பட்ட உடனேயே, அவர்களது நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர் களுக்கு யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போன்ற உடல்திறன் கல்வி வழங்கப்படுகிறது.
கற்றல் திறனுக்கு ஏற்ப, குழந்தைகள் பிரிக்கப்பட்டு, கல்வியும் சொல்லித் தரப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக, பெற்றோராலும், சமூகத்தாலும் சுமையாக கருதப் பட்ட குழந்தைகள், ஒரு கட்டத்தில் மெழுகுதிரி, பேப்பர் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கச்சிதமாக பெற்று, தனக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும், தாங்கள் உபயோகமானவர்களே என்றும் நிரூபித்து வருகின்றனர்.
எந்த ஒரு குழந்தையும், குழுவாக இயங்கும் போதுதான் பரிணமிக்கும்; தம் திறனை அதிகப்படுத்தி, பாராட்டைப் பெற விரும்பும். அதிலும், இது போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, குழுவாக இயங்குவதுதான் நல்ல பலன் தரும். "எங்கள் பள்ளி வளாகத் திலேயே, "நார்மலாக' உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியும் இயங்குகிறது. இந்த சிறப்பு குழந்தைகளை, அந்த குழந்தை களுடன், அவர்களது பொறுப்பில் சில வகுப்புகள் படிக்க ஏற்பாடு செய்கிறோம். இது, இரு பாலாருக்குமே பெரிதும் உதவுகிறது.
"நார்மலாக உள்ள குழந்தை கள், இவர்கள் மீது பாசம் மிகக்கொண்டு கையை பிடித்து விளையாடுவது, உணவு சாப்பிடுவது என்று பாசத்துடன் நடந்து கொள்கின்றனர். இதன் மூலம், நார்மலாக உள்ள குழந்தை களின், அன்பின் மகிமையை புரிந்து மகிழ்கின்றனர், இந்த சிறப்பு குழந்தைகள். இந்த மகிழ்ச்சி பல நல்ல பலன்களை தருகிறது...' என்கிறார் ரவிச்சந்திரன்.
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, கோடை விடுமுறைக்கு பின், ஜுன் முதல் வாரம் முதல் செயல்படத் துவங்கும். இப்போது விண்ணப்ப படிவம் வழங்கப் பட்டு வருகிறது. பள்ளியில் ஹாஸ்டல் வசதி கிடையாது. காலையில் கொண்டுவந்து விட்டு விட்டு, மாலையில் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.
அதற்கு தயாராக உள்ள பெற்றோர், நல்ல நோக்கத்துடன், ஆரோக்கியமான சிந்தனையுடன், செயல்படும் ஒய்.எம்.சி.ஏ., சிறப்பு பள்ளியில், குழந்தைகளை சேர்த்து விடலாம். மேலும், விவரம் அறிய, தலைமை ஆசிரியருடன் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்: 9840158373, 044-24353892.
நன்றி : தினமலர்

Panoramic Photography Part 2

Panoramic Photography Part 2:

'via Blog this'

World Panoramic Photography - 360Cities

World Panoramic Photography - 360Cities:

'via Blog this'

Monday 22 April 2013

Computer- ஐ வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்


கணிப்பொறியை ஆப் செய்ய பெரும்பாலும் 1 நிமிடம் வரை ஆகும் ...

ஆனால் தற்போது நீங்கள் வெறும் 1,2,3 வினாடிகளில் ஆப் செய்துவிடலாம் ....

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சாப்ட்வேர் ரை டவுன்லோட் செய்ய வேண்டும்....
தரவிறக்க :http://dl.commentcamarche.net/en.kioskea.net/download/files/superfast.exe

இது வெறும் 351 KB தான்....

பின்பு இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்...
தற்போது உங்கள் திரைமுகப்பில் 2 ICON கள் இருக்கும் ...

Restart ,மற்றும் Shutdown களுக்கு இதை பயன்படுத்தலாம்...

Shutdown ICON மீது டபுள் கிளிக் செய்தால் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்....

Sunday 21 April 2013

IP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....!!


ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கம் : http://adfoc.us/13273823527540
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.



6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.


8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்....





பயனுள்ள மருத்துவ குறிப்புகள்....

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.

8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

முகநூலில் ரசித்தவை::



Thursday 11 April 2013

Vegetables Names in Four Languages.

VEGETABLES:
Please click on the english names for more details from WIKIPEDIA. 
EnglishTamilTeluguHindi
Amaranth/PigweedMulai KeeraiThotakuraSolai
Ash GourdPoosanikkaiGummidikayiHing
Brinjal/Eggplant/AubergineKathirikkaiVankayaBaingan
Beet rootBeetrootBeetrootChuquander
Broad BeansAvaraikkaiChikkudu kayiSem
BasilThulasiThulasiThulsi
Bitter Gourd/Bitter MelonPawakkaiKakara KayiKarela
Capsicum/Bell PepperKuda MilagaiBengaluru MirapakayiBari Mirch
CabbageMuttaikosuCabbageBandh Gobhi
CauliflowerCauliflowerCauliflowerPhool Gobhi
CarrotCarrotCarrotGajar
CeleryOma illaiVamakuAjwain ka Patta
Cluster BeansKothavarangaiGoruchikkudi kayaluGowar ki Palli
ColocasiaSeppankilanguChema DhumpaArvi
CilantroKothamalliKothameraHara Dhania
CoconutThengaiKobbariNariyal
Chow-ChowSeemai KathirikkaiSeema VankayaChow-Chow
CucumberVellarikkaiDosakaikakri
DrumstickMurunai KaiMunakkayiSahjan Ki Patti
Fenugreek LeavesVendhaya KeeraiMenthi KooraMethi ka Patta
Fresh MintPudinaPudinaHara Pudina
Green PeasPattaniBatanaluMattar
Ladies Finger/OkraVendaikkaiBendakayaluBhindhi
LemonYelumichampalamNimma PanduNimbu
MushroomKalanKukka GoduguKukar Moote
OnionVengayamUllipaayaPyaz
Plantain StemValai ThanduArati ThavvaKele Ka Dhana
Plantain FlowerVazhai pooArati PoovuKele Ka Phool
PotatoesUrulaikkilanguBangala DhumpaAloo
PumpkinParangikkaiGummadikayiKaddu
RadishMullangiMullangiMooli
Raw BananaVazhaikkaiArati kayaHara Kela
Ridge Gourd/LuffaPeerkkangaiBeerakayaTorai
Snake GourdPudalangaiPotlakayaChinchinda
Soy BeansSoy BeansSoy BeansSoy Beans
SpinachPasalakkiraiPallakuraPalak
Spring Onion/ScallionVengaya Thal
Hare Pyaz
Sweet PotatoSakkaravalli-kilanguSilakkada DumpaSakkar Kandh
TapiocaMaravallikkilanguKarra pendalamuTapioca
TomatoThakkaliTamata
Tamat

Free Online HTML Converter - Convert HTML to Doc, PDF, Excel, and JPG files Absolutely Free

Free Online HTML Converter - Convert HTML to Doc, PDF, Excel, and JPG files Absolutely Free:

'via Blog this'

Cereals and Grains- Names in multiple Languages

Cereals and Grains

____________________________________________
BARLEY :



English: Barley
Tamil: Barli Arisi
Telugu: jaava
Hindi: Jau
Kannada: jau
Malayalam: barli
_________________________________________________BUCKWHEAT:



English: Buckwheat
Tamil: Kotu
Telugu: Kuttu
Hindi: Kootu
Kannada: Niru Kanigalu
Malayalam:
_________________________________________________
CORN:


English: Corn/ Maize
Tamil:Makkacholam, Cholam
Telugu: mokka jonna
Hindi:Makki
Kannada:jola,maka
Malayalam:Cholam
_________________________________________________MILLET PEARL (Pearl Millet):


English: Millet pearl/ Spiked millet
Tamil: Kambu
Telugu:sajjalu
Hindi: Bajra
Kannada: Sajje
Malayalam:cumbu
_________________________________________________
MILLET FINGER (Finger Millet):


English: Millet finger/African millet/ Korakan
Tamil: Kelvaragu,Keppai
Telugu: Ragulu, naachani
Hindi: Maduva
Kannada: Ragi
Malayalam: Panjapul or kooravu
____________________________________________
MILLET ITALIAN (Italian Millet):
English: Italian millet/Foxtailmillet/ Moha millet/ Kakan kora
Tamil: Thenai
Telugu: Korralu
Hindi: Kangni
Kannada: Thene
Malayalam: Thina
____________________________________________
OATS:


English: Oats
Tamil: Oatarisi
Telugu: Yavalu
Hindi: Jav
Kannada:
Malayalam: Oat
_________________________________________________
PUFFED RICE:


English: Puffed Rice
Tamil: Pori
Telugu: Borugulu/ Mora moraalu/ Murmuralu
Hindi: Kurmura
Kannada: Kadle poori, Mandalu, Mandakki
Malayalam: Porei
_________________________________________________
RICE BRAN:
English: Rice bran
Tamil: Thavudu
Telugu: Thavudu
Hindi:
Kannada:
Malayalam: Thavudu
_________________________________________________
RICE (RAW):


English: Raw Rice
Tamil: Pacharisi
Telugu: Pachi Biyyam
Hindi: Arwa Chawal
Kannada: Akki
Malayalam: Ari
_________________________________________________
RICE (PAR BOILED):


English: Parboiled rice
Tamil: Puzhungal Arisi
Telugu: dampudu biyyam/ Uppudu biyyam
Hindi: Usna Chawal
Kannada: Kusubalakki
Malayalam: puzhungalari
_________________________________________________
RICE FLAKES:


English: Rice flakes/ beaten rice/Flattend rice
Tamil: Aval
Telugu: Atukulu
Hindi: Poha/ Chewra
Kannada: Avalakki
Malayalam: Aval
_________________________________________________
SAGO:


English: Sago
Tamil: Jawarisi
Telugu: Saggubiyyam
Hindi: Sabudana
Kannada: Sabkakk
Malayalam: chowwary
_________________________________________________
SEMOLINA :


English: Semolina
Tamil: Ravai
Telugu: Rawa
Hindi: Suji/ Rava
Kannada: Ravae
Malayalam: Rava
_________________________________________________
VERMICELLI:


English: Vermicelli
Tamil: Semiya
Telugu: Semiya
Hindi: seviyan
Kannada: Shamige
Malayalam: Semiya
__________________________________________________
WHEAT:


English: Wheat
Tamil: Kothumai
Telugu: Godhumalu
Hindi: Gehoon/ Gehun
Kannada: Godhi
Malayalam: Gothmbu
_________________________________________________

Wednesday 10 April 2013

Safe Browsing Tool | WOT (Web of Trust)

Safe Browsing Tool | WOT (Web of Trust):

'via Blog this'

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):



Check the availability in General Quota + Tatkal etc. in Railenquiry.in

Quilon Pass (56700) Availability in General Quota Seat/Birth Availability from Madurai Jn/MDU to Kollam Jn/QLN In all classes:

'via Blog this'

Tuesday 9 April 2013

Send SMS without Login or signup

Send SMS without Login or signup


For sending free SMS you have to sign up for an account and every time you have login. Someusers dont like this so they want to send free SMS without opening an account.Here are some services that let you send free SMS without login or signup.
Here I am posting site which provides free unlimited
sms with Some Cool Features. like.

-No Character Limit
-No Advertisement
-No Login Required
-Fast Delivery
-Annoymus Sms

2) BollywoodMotion
This is the only website that lets
you send maximum characters (500) in SMS.
All you can do without login but you need capcha.
(3) SeaSMS
Here you also send MMS in India without login.
It does not ask capcha that is a very nice thing. You can compose SMS in Hindi language.


Sunday 7 April 2013

Pointers (Clinical Tips)

(Some Selected Hints)By T. K. Moore, M. D.
Presented by Dr. Sayeed Ahmad D. I. Hom. ( London )

  1. A single symptom causing suffering is completely recorded only when its history, origin, progress and conditions attached, circumstances of aggravation, of amelioration, time of occurrence and of greatest intensity, how affected by position, rest, motion, eating, drinking, or the performance of any body function, by mental emotions or by any other cause – all this is included in the totality.
  2. It is expecting too much of homœopathy to cure symptoms expressing protest against a continuing and removable cause. Find the cause—mental, moral, physical or hygienic. Remove the cause or causes. Then if aught else remains, homœopathy will take care of that. 
  3. When the moon is decreasing, Phos., Sil., etc. may be used in patients having damaged organs safely and with good effect. 
  4. In advanced disease, malignant or tubercular, the most terrible thing you can do is to give the indicated remedy in high potency. Give anything but that. 
  5. In chronics, the latest symptoms, even though they may appear insignificant, are always the most important in the selection of remedy. The oldest are the least important. All symptoms in between must be arranged in order of their appearance. Only such patients remain well and are really cured who have been rid of their symptoms in the reverse order of their development. 
  6. In epilepsy you will never cure unless you find a remedy that covers and corresponds in every respect to the acute attack. Then follow with the complementary or chronic remedy as the curative. The chronic remedy given during the attack would aggravate too strongly. 
  7. Usually disease leaves by an eruption or by discharge from mucous membrane. 
  8. A remedy which can bring a symptom or symptoms to the surface, usually will cure those symptoms without further medication. Therefore watch and wait. 
  9. A remedy given well-indicated, then a diarrhœa, rash or excessive sweat, medicinal aggravation or any old symptom returned or even symptoms worse and patient better, give a remedy now and disaster is sure. 
  10. If after giving a remedy there is itching of the soles, it is a good indication. 
  11. In organic disease where there is much pathology, use the lower potencies. 
  12. High potencies are two-edged swords and must be handled with care. 
  13. When patients appear to get up a tolerance for remedies, a complementary remedy will sometimes keep the patient from going stale. 
  14. Unable to get symptoms from children, size up the parents and see what they need, or needed before the birth of the child. 
  15. Forget the symptoms peculiar to the disease and those of the ultimates, prescribe on the symptoms of the patient. 
  16. A nosode in line with the patient’s constitution or family history has sometimes given striking results, allowing the previous well-indicated but inactive remedy to take hold. 
  17. Never send an Iodium patient to a warm climate. 
  18. Do not overwork keynotes. They are sign-posts to shorten our research, not to suppress it. 
  19. Coloc. cures colic again and again. Then Kali-c. steps in to end the trouble. 
  20. Elderly case, blustery weather, vomiting much frothy blood-tinged mucus, high temperature, mucous rales, dyspnœa ; all set for pneumonia -- Verat-v. He will be better next day. 
  21. A jewel in surgical shock : Strontium Carb. 
  22. After salvarsan the similimum is often the antidote. 
  23. Thuja is the antidote to massive doses of Arsenic. 
  24. Nocturnal epilepsy or chorea : Calc. is valuable, especially after Sulph. 
  25. Gels. is rarely found of benefit in superficial affections of the eye, but is especially adapted to disease of the fundus and paralysis of the nerves. 
  26. In croup without fever, think of Kali-bi. or Brom., the latter if there is cyanosis. 
  27. Think of Merc-c. in toxic conditions of pregnancy and Phos. In albuminuria of pregnancy. 
  28. If I could have but one remedy for the prostate, it would be Caust. 
  29. Acon. will seldom or never cure a quiet, calm, equable patient. Nux-v. will not cure where the disposition is mild and phlegmatic. Puls. will not cure if happy, gay and obstinate. If imperturbable and not easily frightened, do not use Ign. 
  30. A Kali-c. characteristic : Any bang, shock, bad news or fear is felt in the stomach. 
  31. Ferr-p. in earache and mastoiditis leads everything else. More cases of mastoiditis call for Ferr-p. than any other remedy. It equals Cham. In earache of children. it may be repeated often. Use the DM. 
  32. In earache do not use Ferr-p. below 12 th. The low will often work when the high fails. 
  33. Puls. above all other remedies, has the power to unlock suppressions of modern serum therapy. 
  34. When the well-selected remedy acts only a short time and the symptoms agree, consider Sulph., Calc-s., and Psor., Tub., Med. or other nosodes.
( Courtesy  : "The Homœopathic Recorder" December, 1936. pp. 531-536)

Homeopathic Remedies for Normal Delivery

In each medical system there may be something unique, and without arguing which one is the best, the intelligent man takes the best from each.

70 to 90 PER CENT OF CAESAREAN SURGERIES CAN BE DONE AWAY WITH THREE DOSES OF HOMOEOPATHIC MEDICINE.

The foetus (baby in the uterus of the pregnant mother) 1-3 weeks prior to delivery date (so long remaining in upright position) turns upside down, and the uterus descends down in such a way that the head of the foetus remains fixed in the pelvic floor of the mother. 1-3 weeks later, at the delivery time the mouth of the uterus dilates and the child comes out. Even after the full term of ten months if the child does not turn upside down, or turns half-way and lies crosswise or having turned upside down, does not descend further down, the attending lady doctor would say that head is still floating or is in incorrect position and so opens the abdomen to take out the child. This is called caesarean surgery. 70 to 90 per cent of caesarean surgeries at the present day are conducted solely for this reason.
(1) At this time if the patient takes three doses of the homoeopathic medicine Pulsatilla-1000, every 4-8 hours, in the next twenty-four hours it would be a normal and safe delivery.
In the reference book The Accoucheur's Emergency Manual by Dr. W. A. Yingling, M.D., of U.S.A. we find the following :
"Abnormal presentations may be righted if Pulsatilla is given before the membranes are ruptured or the presenting parts are firmly engaged..."
In a maternity hospital, Pollachi Road, Dharapuram, Tamilnadu, by using Pulsatilla and other remedies there has not been even a single caesarean for the past several years and the doctor in-charge has put up a board"Caesarean-free'' Clinic. The Dharapuram Lions Club has given her a certificate testifying this.
(2) If the baby in the uterus stops growing, allopathy has no cure and they abort it. But if one single dose of the homoeopathic medicine Secale Cornutum-10M is given, the baby starts growing. (See Calvin B. Knerr's Repertory, p. 698. Pregnancy, foetus, development arrested: Sec.)
(3) After caesarean (or for that matter after any abdominal surgery) there would be pain in the sutured place lasting for years. But one single dose of the homoeo medicine Staphysagria-1000, completely cures in twenty-four hours all post-operative abdominal discomforts.
(4) Some newly married women are prone to urinary infection and they spend in thousands. Again, the same homoeo medicine Staphysagria-1000, in one single dose, would cure the condition in just a day's time.

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்


Enlarge this image



01) புற்றுநோய்த் தடுப்பு
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும் உள்ள ‘செலீனியம்’ என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

02) மாரடைப்பு
நடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு, மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

03) சிறுநீரகம்
பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை. சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், கடும் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், புளிச்ச வாசனை, அதிக நுரை, அடி வயிற்றில் வலி ஆகியன இருந்தால் உங்களுக்கு, சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். வெளிறிய மஞ்சள் நிறத்தைத் தவிர்த்து வேறு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

04) மறதி
இளமையில் மறதி என்பது வேறு! ஆனால் அளவுக்கு அதிகமான மறதி முதுமையில் ஏற்படும். இதற்கு ‘அல்ஸைமர் நோய்’ என்று பெயர். இந்த நோயைக் கட்டுபடுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. மேலும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி ஆகிய உணவுப்பொருட்கள் வயதான பிறகும், நோய்கள் தொற்றாமல் பாதுகாக்கும். இதைவிட முக்கியம் உணவுக்கட்டுப்பாடு. சத்தான, மிதமான உணவுமுறை முதுமையில் மிக அவசியம்.

05) இரத்த அழுத்தம்
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.

06) பல் ஈறு
பல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச் சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன இடம் தெரியாது.

07) மாரடைப்பு
மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாலையில்தான் மாரடைப்பு வருகின்றது. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்க மாட்டார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவோர்க்குத்தான் அதிகாலையில் மாரடைப்பு வருகின்றது.

08) நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க …
நன்றாக உறங்க வேண்டும்
மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும்.
உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்
தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

09) வழுக்கை
சிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக வழுக்கை விழும். இதைத் தவிர்ப்பதற்கு மாதுளம் பழச்சாற்றைப் புழுவெட்டு உள்ள இடத்தில் சூடேற்றித்தேய்க்க மூன்று நாட்களில் அரிப்பு மாறி, முடி முளைக்கும். ஊமத்தைப் பிஞ்சை உமிழ் நீரால் மைபோல அரைத்துத் தலையில் தடவி வந்தால் புழுவெட்டு நீங்கும். ஆற்றுத் தும்மட்டிக்காயை நன்றாக நறுக்கித் தலையில் தேய்த்துவர பலன் கிடைக்கும்.

10) தொண்டைப்புண்
தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சிறிது சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, தளதளவென்று கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.

11) உடல் தளர்ச்சி
வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் ‘ஆலியம்சிபா.’

12) வயிற்றுப்புண்
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.

13) அல்சர்
சர்வ சாதாரணமாக எல்லோரையும் தாக்கக் கூடிய நோய்களில் ‘அல்சரும்’ ஒன்று. நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு, சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு அதிகம். முதலில் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியோடு ஆரம்பிக்கும். வாந்தி, எரிச்சல் ஏற்படும். அல்சர் ஏற்படக்காரணங்கள்:
காரமான உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல்
மண்,கல் கலந்த உணவு, நீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
கோபப்படுதல், பட்டினி இருத்தல்
போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படலாம்.

அறிகுறிகள்:
பசியின்மை, ஏப்பம் அடிக்கடி வருதல், வயிறு இரைச்சல், நெஞ்சு எரிச்சல்.
கட்டுப்பாடுகள்:
வேளாவேளைக்குச் சரியாக சாப்பிடுதல், இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றால் அல்சரிலிருந்து குணம் கிடைக்கும்.

14) நோய் எதிர்ப்பு சக்தி
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், என்சைம்கள், புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை என்பது உடலில் எனர்ஜி அதிகரிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. அதனால்தான் மூளையில் ரத்தம் உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர். ஆங்கில மருந்துகளிலும் இதன் பயன்பாடு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.

15) நெல்லிக்காய்
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்தைவிட இவற்றில் சுமார் 25மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்து உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் தொடர்பான வியாதிகள், எலும்பு, தாடை, மலச்சிக்கல், நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரழிவு போன்ற நோய்களைக் குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

16) வலிப்புநோய்
வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசி நீரில் இளநீரையும்,தேனையும் கலந்து சாப்பிடக்கொடுத்தால் நரம்பு பலமடைந்து வலிப்பு நோய் குணமடைந்து விடும்.

17) மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை நோய் கண்டவர்கள் நெல்லிக்காய்களை அரிந்து சாறு பிழிந்து இத்துடன் தேனையும் சிறிதளவு (2டீஸ்பூன்) கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் பறந்துவிடும்.

18) பசியின்மை
சாப்பிட வேண்டும் போலிருக்கும். ஆனால் பசி இருக்காது. நல்ல பசி ஏற்பட சீரகத்தை லேசாக வறுத்து, கொஞ்சம் பனை வெல்லத்துடன் கலந்து பொடியாக்கிச் சாப்பிட வேண்டும்.

19) தலைவலி
தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.

20) இடையழகு
பெண்களின் வயிறு பிரசவத்திற்குப்பிறகு பெருத்துத் தளர்ந்து விடும். ஏலக்காய்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்துவர “சிக்” என்ற இடையழகு கிடைக்கும்.

21) உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

22) துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

23) 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

24) காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

25) தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

26) அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

27) கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

28) பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

29) சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

30 குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

31. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

32. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.



_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.