Saturday 1 October 2022

பல்வலி தீர்வு!!!

*🌷🌷நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ உண்மை!!*

தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும் நொடி பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்.வாங்க நாட்டு பெருங்காயத்தை எப்படி வாங்குவது மற்றும் தூள் தயாரிக்கும் முறை,இதனை சொத்தை பல்க்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் முறை!

நாம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தூள் பெருங்காயம்மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கலாகும்.

பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது.இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறை!

நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,இதனை ஒரு வானிலையில் போட்டு நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.பின்பு சிறிது நேரம் ஆற விட்டு இதனை நன்றாக பொடி செய்து கண்ணாடி குப்பியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
கண்ணாடி பாட்டிலில் போடுவதற்கு காரணம்,
பெருங்காயத் தூளின் வாசனை மற்றும் மருத்துவம் குணம் மாறாமல் இருக்கும்.மேலும் இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பொடியை சொத்தைப் பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?

பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.

Wednesday 7 September 2022

varicose veins medicine!!!

வெரிக்கோஸ் வெயின் எனும் நரம்புசுற்று (சிலந்தி) நோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் கார்டோரியம் cardorium+எனும் ஆயூர்வேத டானிக் மேல் பூச்சுக்கு எங்கள் வைத்தியர் தயாரிப்பான கோடாசூரி தைலம் மிகுந்த நற்பலனை தருகிறது கடந்த ஆறுமாத காலமாக நான் அனுப்பி பலனடைந்தவர்கள் பலர் இந்த கோடாசூரி தைலம் மூட்டுகள் கழுத்து கை கால் வலி சதைவலிக்கும் நற்பலனை தருகிறது அதிக அளவில் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்...இதனை தடவுவதால் சுற்றுநரம்புகள் தளர்ச்சி அடைகின்றன மேல் குறிபிட்டுள்ள டானிக்கும்  சேர்ந்து சாப்பிடுவதால் குறிகிய காலங்களில் நிரந்தர தீர்வை பெறலாம் முற்றி விட்டால் அறுவை ஒன்றே தீர்வு குறைந்த சிலவிலான இந்த வைத்திய முறை வலியில்லா வாழ்வுக்கு உங்களை அழைத்து செல்லும் 
நன்றி தேவையற்ற விமர்சனங்களை தவிற்க்கவும் நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்... Palaniyappan BSS Dip sidha.9942162388

Saturday 3 September 2022

மைத்ரேய முகூர்த்தம்!!!

ராசிப்படியான பொது மைத்ர முகூர்த்த நேரம்

மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங்கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்னைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறை களையும் விளக்கியிருக்கிறார்கள். 

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள். இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இந்த முகூர்த்தம், கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது. 

கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். 
முடியாதவர்கள் டைரியிலோ அல்லது  டப்பாவிலோ பணத்தை போட்டு வைத்து சேமித்து கடனை அடைக்கலாம் 

ராசிப்படியான பொது மைத்ர முகூர்த்த நேரத்தை அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி 

ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை 

மிதுனம் - புதன் காலை 7:30 - 9 

கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6 

சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30 

கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30 

துலாம் - சனி காலை 10:30 - 12:00 

விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30 

தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12 

மகரம் - சனி காலை 8 - 10:30 

கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30 

மீனம் - வியாழன் காலை 8 -10:30

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

அதீத உஷ்ணம்!!!

உடலில் அதீத #உஷ்ணமா ஹீட் பாடியா இதனால் வேனல் கட்டிகள் வேர்க்குருக்கள் போன்றவை 
உண்டாகிறதா ..
படத்தில் உள்ள 
#கூல்_மெலான் எனும் ஆயூர்வேத டானிக் சிறந்த மருந்தாகும் எந்த வித பக்கவிளைவுகளும் இதில் இல்லை குழந்தைகள் முதல் முதயவர்கள்வரை இதனை தண்ணீரில் கலந்து பருகலாம்..

நன்றி
சித்தமருத்துவர் 
வெ.பழனியப்பன்

பத்திய சமையல்!!!

💚❤️😀😄🟢 ப த் தி ய   ச மை ய ல் 🟢😄😀❤️💚.               
இப்போதெல்லாம் ப்ரஸவங்கள் பெரும்பாலும் மெடர்னிடி ஹோம்களிலேயே நடக்கின்றன. நார்மல் டெலிவரியாக இருந்தால் இரண்டாம் நாளும் சிசேரியனாக இருந்தால் மூன்றாம் நாளும் தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
தாய், சேய்இருவருக்கும் Post  Natal Care முக்கியமானது. நான் கொஞ்சம் பழைய கால மனுஷன். எனவே அந்தக்கால
நடப்பு முறைகளையே சொல்லப்போகிறேன். குழந்தை பிறந்த அன்றே தாய்க்கு வெற்றிலையில் கோரோஜனை என்ற மருந்தைத்தடவி மென்று சாப்பிட தருவர். கோரோஜனை ஒரு சிறந்த ஆன்டிஸெப்டிக். பிறந்த அன்றோ மறுநாளோ பாலடையில் தாய்ப்பாலை பீய்ச்சி அதில் இரண்டு மூன்று சொட்டு விளக்கெண்ணை விட்டு குழப்பி குழந்தைக்கு புகட்டுவர் இதற்கு செவ்வெண்ணை என்று பெயர். இதனால் குழந்தையின் தொண்டைச்சளி கரைந்து கணீர் என குரல் வளம் பெருகும். தாயாருக்கு தினந்தோறும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ப்ரஸவ லேகியம்( நடகாய லேகியம்)  ஒரு நெல்லிக்காயளவு சாப்பிடக்கொடுப்பர்.குழந்தை ப்ரஸவித்த மூன்றாம் நாளிலிருந்து திட ஆகாரம் (பத்திய சாப்பாடு) தர
தொடங்குவர். பத்தியம் போட்ட அப்புறந்தான் குழந்தை பிறந்த செய்தியை சொந்த பந்தங்களுக்கு லெடர் போடுவா. அறையில் இருக்கும் பிள்ளைபெத்தாளுக்கு பத்துநாளும் பத்திய சாப்பாடுதான். பத்திய சாப்பாடு சமைக்க
வேண்டிய முக்கிய மூலப்பொருட்கள் நெய், மிளகு சீரகம், பாசிப்பருப்பு,காய்கறிகளில் அதிக பிஞ்சாக புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு,பூண்டு,    கறிவேப்பிலை,தளிர் வெற்றிலை பாக்குதூள் சுண்ணம்பு முதலியன. பிள்ளைபெத்தாளுக்கான பத்திய சமையலை அவளது அம்மாவே சமைத்து பரிமாறுவாள். அளவாக சமைக்க வேண்டும். மீதம் வைப்பதோ மீந்ததை வேறொருவர் சாப்பிடுவதோ கூடாது. பிள்ளைபெத்தாள் சாப்பிடும்போது அம்மாவைத்தவிர வேறு எவரும் பார்க்க விடமாட்டார்கள்.
சமையல் விதரணைகளை சொல்கிறேன். கறிவேப்பிலையை
வதக்கி புளி உப்பு மிளகு வைத்து அரைத்து பூண்டு வேகவிட்டு
மிளகு குழம்பு செய்து வைத்துக்கொள்ளலாம். தினமும் பூண்டை பாலில் வேகவைத்து பூண்டை மென்று தின்று பால் குடிக்க வைக்கலாம். பூண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.  பிஞ்சு அவரை, புடல், கத்தரி இவற்றை சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு பொரிச்ச கூட்டு இன்னொரு நாள் வதக்கின கறி என மாற்றி மாற்றி செய்யலாம். பொரிச்ச கூட்டுக்கு பயத்தம்பருப்பும் மிளகும் உப்பும் தான். முருங்கைப்பிஞ்சு பொரிச்ச கூட்டுக்கு மட்டுந்தான். கறி செய்ய முடியாது. தினம் தினம் ரஸம் பண்ண வேண்டாம். ரஸம் பண்ணா கண்டதிப்பிலி பூண்டு ரஸம் பண்ணணும். தேங்கா சேர்த்துக்கவே கூடாது. சேர்த்துண்டா தாய்ப்பால் கெட்டிப்பட்டு குழந்தைக்கை செரிமானம் ஆகாது.எப்படி பிள்ளைபெத்தாளுக்கு பத்தியம் போடறது?  சாப்பிடுவதற்கு முன்பே குழந்தைக்கு ‘ எடுத்து விட’ (தாய்ப்பாலூட்டி விட) வேண்டும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழிந்த பின்னர் தான் மறுபடி எடுத்துவிட வேண்டும்.
சாதம் கொழைவா இருக்கணும். வெள்ளி பேலாவுல சாதத்தை போட்டு நெய்யை குத்தி நண்ணா மசிச்சு பொரிச்ச கூட்டையோ, மொளகு குழம்பையோ,ரஸத்தையோ விட்டு பிசையணும். பிள்ளைபெத்தாளை உள்ளங்கையை குழிச்சுக்கச் சொல்லி புத்துருக்கு நெய்யை நெறைய விட்டு குடிக்க சொல்லணும பிசைஞ்சு வச்சிருக்கற சாதத்தை சுடச்சுட சாப்ட வைக்கணும். தொட்டுக்க வதக்கின கறி. தாய்க்கோ கொழந்தைக்கோ ஜலதோஷம் இல்லேன்னா புளிக்காத பசுந்தயிர்சாதம் போடலாம்.தயிரோடு கூட கொஞ்சம் வென்தீர்த்தம் விட்டு பிசையணும். வென்தீர்த்தம்
குடிக்கணும். சாப்ட்டு முடிச்சதும் வெற்றிலை பாக்கு போட்டுக்கணும். இந்த பத்திய சாப்பாட்டை காலை பத்து மணிக்குள்ள சாப்டூடணும். அப்புறம் அப்பபோ பசிக்கத்தான்
பசிக்கும். காஃபி,பால், ஹார்லிக்ஸ் னு கொடுக்கலாம். புழங்கலரிசி ஒடசல்ல கஞ்சி போட்டு பால்விட்டு கொடுக்கலாம்.


Friday 1 July 2022

நல் வாழ்வுக்கு மந்திரம்!!!

உங்க ராசிப்படி இந்த மந்திரத்தை சொல்லுங்கள்: செல்வம் செழிக்கும்

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும், அவர்களின் ராசிக்கு ஏற்ற சுலோகத்தை கூறி வந்தால், அவர்களுக்கு சகல செல்வங்களும் தேடி வரும் என்று கூறுகிறது.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் ”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்” எனும் சுலோகத்தை 27 முறை கூறி, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், துன்பங்கள் நீங்கும்.

ரிஷபம்

 
ரிஷப ராசியில் பிறந்தவர்கள், மகாலட்சுமி பூஜை செய்து, வெள்ளிக்கிழமை விரதம் இருந்து, ”ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ” என்ற சுலோகத்தை தினமும் 11முறை கூறி வந்தால், செல்வம் அதிகரிக்குமாம்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள், விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம” எனும் மந்திரத்தை 54 முறை தினமும் கூறி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள், பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விரதம் இருந்து, ”ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம” எனும் மந்திரத்தை 21முறை கூற வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு புதன் கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்

துலா ராசியில் பிறந்தவர்கள், மாதம் ஒரு முறை பவுர்ணமி அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, ”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், செவ்வாய் கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி, ”தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்” எனும் மந்திரத்தை கூற வேண்டும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள், வியாழ கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து, ”ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள், சனி கிழமை விரதம் இருந்து, சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், சகல காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள், ஒவ்வொரு வாரமும் சனி கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து, “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம” எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள், ஒவ்வொரு வியாழ கிழமை அன்றும் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ”ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், துன்பங்கள் விலகும்.

சுய ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கவும் வேண்டும் 

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

Monday 11 April 2022

பிறந்த தமிழ் வருடம்!!!

*Namaskarams!!*
We all remember and instantly tell  our year of birth based on English calendar. But we struggle to remember the Samvatsar  based on Bharatiya Hindu Panchanga. Given below is the Samvatsar in which you were born. Some wise person has prepared this to help us know and remember which Bharatiya year we were born. Please preserve this and regularly use it. 

 
*( 1867, 1927,1987,)*: Prabhava
*(1868,1928,1988)*: Vibhava
*(1869,1929,1989)*: Shukla
*(1870,1930,1990)*: Pramodoota
*(1871,1931, 1991)*: Prajotpatti
*(1872,1932,1992)*: Angeerasa
*(1873,1933,1993)*: Shreemukha
*(1874,1934,1994)*: Bhaava
*(1875,1935,1995)*:Yuva
*(1876,1936,1996)*: Dhata
*(1877,1937,1997)*: Ishwara
*(1878,1938,1998)*: Bahudhanya
*(1879,1939,1999)*: Pramadi
*(1880,1940,2000)*: Vikrama
*(1881,1941,2001)*: Vrusha
*(1882,1942,2002)*: Chitrabhanu
*(1883,1943,2003)*: Swabhanu
*(1884,1944,2004)*: TaraNa 
*(1885,1945,2005)*: Parthiva
*(1886,1946,2006)*: Vyaya
*(1887,1947,2007)*: Sarvajit
*(1888,1948,2008)*:
Sarvadhari
*(1889,1949,2009)*: Virodhi
*(1890,1950,2010)*: Vikruti
*(1891,1951,2011)*: Khara
*(1892,1952,2012)*:  Nandana
*(1893,1953,2013)*: Vijaya
*(1894,1954,2014)*: Jaya
*(1895,1955,2015)*: Manmatha
*(1896,1956,2016)*: Durmukhi
*(1897,1957,2017)*: HeviLambi
*(1898,1958,2018)*: ViLambi
*(1899,1959,2019)*: Vikari
*(1900,1960,2020)*: Sharvari
*(1901,1961,2021)*: Plava
*(1902,1962,2022)*: Shubhakruta
*(1903,1963,2023)*: Shobhakruta
*(1904,1964,2024)*: Krodhi
*(1905,1965,2025)*: Vishwavasu 
*(1906,1966,2026)*: Parabhava
*(1907,1967,2027)*: Plavanga
*(1908,1968,2028)*: Kilaka
*(1909,1969,2029)*: Sowmya
*(1910,1970,2030)*:  SadharaNa
*(1911,1971,2031)*: Virodhikruta 
*(1912,1972,2032)*: Paridhaavi
*(1913,1973,2033)*: Pramaada
*(1914,1974,2034)*: Ananda
*(1915,1975,2035)*: Rakshasa
*(1916,1976,2036)*: NaLa
*(1917,1977,2037)*: PingaLa
*(1918,1978,2038)*: KaLayukti
*(1919,1979,2039)*: Siddharthi
*(1920,1980,2040)*: Roudri
*(1921,1981,2041)*: Durmati
*(1922,1982,2042)*: Dundubhi
*(1923,1983,2043)*: Rudhirodgaari 
*(1924,1984,2044)*: Raktakshi
*(1925,1985,2045)*: Krodhana
*(1926,1986,2046)*: Akshaya 

*Please pass this to all your friends and relatives*

Did you know, that as per Indian *Panchang* system, each year has a specific name? And that each name has a meaning? There are *60* names of years *(Samvatsars)*. Each name replays after 60 years. The year typically begins in *mid-April*.*

The year 2019-20 was named *‘Vikari’*, that lived up to its name by being a *‘illness’ year!*

The year 2020-21 was named *‘Sharvari’,* meaning *darkness*, and it did push the world into a dark phase!

Now the *‘Plava’* year (2021-22) is ending. ‘Plava’ means, *"that - which ferries us across".* The *Varaha Samhita* says: this will ferry the world across unbearable difficulties and reach us to a state of glory. And take us from *darkness to light!*
Proud to be a Hindu 

The year 2022-23 is named *‘Shubhkrut’,* meaning that which *creates auspiciousness.*

*We can now look forward and expect to have a better tomorrow* 

Believe it or not *Sanatan Dharma* is thus far the most *scientific, practical and inclusive* of all systems in existence today. 
Our *Rishis* and *Munis* could accurately predict when modern day gadgets and equipments were non existent.
*Proud to belong to the land of diversity and brotherhood*