Friday 30 October 2015

காஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BURFI)!!!





காஜு கத்லி

தே.பொருட்கள்

முந்திரி -1/2 கப்
சர்க்கரை -1/2 கப்
நீர்- 1/4 கப்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை மிக்ஸியில் நிறுத்தி நிறுத்தி நைசாக பொடிக்கவும்.தொடர்ந்து  பொடித்தால் எண்ணெய் விடும்.

*பொடித்த முந்திரியை ரவை சலிக்கும் சல்லடையில் சலிக்கவும் அல்லது நைசாக பொடித்திருந்தால் சலிக்க தேவையில்லை.

*நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+நீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

*1 கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரியை தூவி சிறுதீயில் கலக்கவும்.

*சிறிது நேரத்தில் அனைத்தும் சேர்ந்தார் போல் வரும் போது இறக்கவும் அல்லது சிறிது மாவினை எடுத்து உருட்டி பார்த்தால் உருட்டும் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*நெய் தடவிய தட்டு அல்லது பலகையில் கொட்டி,கை பொறுக்கும் சூட்டில் மாவினை பிசையவும்.

*குட்டியான பதத்தில் மிருதுவான‌  உருண்டையாக வரும்.

*இப்போழுது பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது உருண்டையை அதன் மீது இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து 1/4 அளவு தடிமனாக உருட்டவும்.

*மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு டைமண்ட் வடிவில் கட் செய்யவும்.

*சுவையான காஜூ கத்லி தயார்

பி.கு

*1 கம்பி பதம் என்பது சர்க்கரை பாகினை இரண்டு விரல்களுக்கு இடையை தொட்டு பார்த்தால் 1 இழை போல வரும்.

*முந்திரியை ப்ரிட்ஜில் வைத்திருந்தால் அறை வெப்பநிலையில் வந்த பிறகு பொடிக்கவும்,மேலும் மிக்ஸியின் ஜாரும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

*முந்திரியை பொடித்து சலித்துக் கொள்வது நல்லது.

*உருட்டும் போது சதுர வடிவில் உருட்டு துண்டுகள் போட்டால் அதிகம் வீணாகமல் இருக்கும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது உருட்டி துண்டுகள் போடவும்,ஆறினால் துண்டுகள் போட கஷ்டமாக இருக்கும்.

*பிசையும் போது  டிரையாக இருந்தால் சிறிது பால் தெளித்து மாவினை பிசையும்,அப்படி பிழையும் போது சீக்கிரமே பயன்படுத்திவிடவும்.

*பால் சேர்க்காமல் செய்தால் 1 வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*முந்திரியை பால் விட்டு அரைத்து செய்யும் போது பர்பிChewy ஆக‌ இருக்கும்.