Tuesday 6 October 2015

மருத்துவ குறிப்புகள்!!!




நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.  வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து  குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும். மணத்தக்காளி கீரை  சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும். வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி  சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும். துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர  பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும். இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும்.  பசி ஏற்படும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுகஙகு பேறுகால வலி குறையும். தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும் ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து  பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும். அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும். எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி  ஏற்படாது.

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் சாப்பிட ஆண்மை பெருகும். காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுப்புண் குணமாகும். தினசரி ஒரு  மாம்பழம் சாப்பிட நரம்புத் தளர்ச்சி சரியாகும். அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். மாவிலையை பொடி செய்து பல்  துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும்.
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுக்க கண் சூடு குணமாகும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம்  சுத்தமாகும். தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது. பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர ரத்தசோகை நீங்கும்