Friday 30 October 2015

Ravanan Story!!!




ராவணனின் தங்கை சூற்பனகையின் கணவன் வித்யுத்ஜின், கால்கை நாட்டின் சேனாதிபதியாக இருந்தான். ராவணன் உலகை வெல்லும் நோக்கத்தோடு போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றினான். கால்கை நாட்டுடனும் போர் புரிந்தான். அப்போரில் தன் தங்கை கணவனான வித்யுத்ஜினை வதம் செய்தான். இதனால் கோபம் கொண்ட சூர்பனகை, ராவணனைப் பார்த்து "ராவணா உண் மரணத்திற்கு நானே காரணமாவேன்" என சபித்தாள்.

சூற்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அருத்ததே சீதையை கவரக்காரணம்.
ஒரு சமயம் இலங்கேஸ்வரன் ராவணன் சிவபெருமானை தரிசிக்க கைலாய மலைக்கு சென்றான். அங்கே நந்தி பகவானை கேலி செய்து நகைத்தலானான். கோபம் கொண்ட நந்தி, ராவணனின் அழிவிற்க்கு ஒரு குரங்கே காரணமாகுமென சபித்தார்.
குரங்கு உருவங்கொண்ட ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைக் காண  இலங்கை சென்றதும், ராவணன் ஹனுமானின் வாளிற்க்கு நெருப்பை மூட்டி பெரும் தவறைச் செய்தான். இதனால் ஸ்ரீ ராமனின் கடும் கோபத்திற்கு ஆளானான்.
சிறந்த சிவ பக்த்தரான ராவணன், சிவ பெருமானை கவரும் பொருட்டு கைலாய மலையை தூக்கினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ஒரு பெண்ணால் ராவணன் மடிவான் என சபித்தாள்.
சொர்கத்தை கைப்பற்ற நினைத்த ராவணன், சொர்கத்தை நோக்கி படை எடுத்தான். அப்சரஸ்களில் பேரழிகியான ரம்பையை கண்டதும் மோகம் கொண்ட ராவணன் ரம்பையை கவர்ந்து செல்ல எண்ணினான்.

ராவணனின் சகோதரன் குபேரனின் மகனான நளகுபேரனை திருமணம் செய்யப்போகும் ரம்பை ராவணனுக்கு மருமகளாவாள். அப்படியிருக்க ரம்பையை கவர்ந்த ராவணனை சபித்தான் நளகுபேரன்.


இப்படியாக பல பாவங்களை செய்து பெரும் சாபங்களிற்க்கு ஆளான ராவணன் இறுதியில் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டு, மாபெரும் பெயரைப்பெற்றான்.