Saturday 19 September 2015

Medicine to conceive-கர்ப்பம் தரிக்க மாமருந்து!!!



கர்ப்பம்  தரிக்க  மாமருந்து :


வாறான   மங்கையர்  கெர்பமாக
வறையுறேன்  பசும்பாலு  வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை  மூலிதானும்
நிலையான குப்பை மேனி  சமனாய்க்  கூட்டி

காறான பால் தனிலே  குழப்பியே தான்
கனமாக  இருவேளை  கொண்டாயானால்
சோரான  கிருமியது  அற்றுப் போகும்
செனிக்குமே  பிள்ளையது  செனிக்கும்  பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :


தன்வந்திரி பகவான்  பெண்கள் கர்ப்பம் தரிக்க  உடலைப் பக்குவப்படுத்த
சுரண  முறை வைத்தியத்தை  பற்றி சொல்லி இருக்கிறார்  அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி  மகரிஷியை  வணங்கி  அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி  இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி  சரி எடையாக  எடுத்து இடித்து  வைத்துக்கொள்ளவும் .
இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய்  கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி  மகரிஷி


 வசம்பு
விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்


++++++++++++++++++++++++++++++

பல் ஈறு பலப்பட /அழுகல்  நீங்க(For TEETH and GUM)


மிளகுசோற்  றுப்பு  மிகாதொன்றாய்க்  கூட்டின்
அளவு பல்  தீநீர்  தவிர்ப்பு ......................குறள்

விளக்கம் :

மிளகு , சோற்று உப்பு  இரண்டையும்  சம அளவு எடுத்து பொடி செய்து  இரண்டு கிராம் அளவுஎடுத்து  காலை ,மாலை  பல் துலக்கி அழுகிய பக்கம் தலை சாய்த்து  படுத்திருந்தால் கெட்ட நீர்  முற்றும்  வெளியாகும் ,நோய் குணமாகும். 
***********************************************************************

Eye sight  improvement for all ageகண் பார்வை  வலுப்பெற 






நீலியொடு  மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள்  கண்பார்வைக் குண்  -------குறள்


விளக்கம்


அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை  இம் மூன்ரையும் 

சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி

 தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில்  அருந்திவர கண் பார்வை 

தெளிவாகும் .
அனுபானம் : பசும்  பால்,தேன் ,நீர்  

**************************************************************************
குழந்தைகள் நலம் காக்க 

இருகாய்  அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு  சேய்நோய்  உறைக்கு              குறள்

விளக்கம் :

சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு   இவ் ஏழு பொருட்களையும்  சம அளவு எடுத்து  தூளாக்கி  பச்சை  வெற்றிலை  சாறை விட்டு  அரைத்து  உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர்  கொடுத்தால்  மிகவும் நன்று .