Saturday 19 September 2015

Medical Tips!!!


தாய்  சேய்  நலம் :



தாய்ப்பாலில்   வேம்பு துளிர்  சீரகம் கார்மிளகு

சேய்வேப்பங்  காரச் சிறப்பு .              ----------------குறள்


வேம்பின்  துளிர்  இலை -5 உடன் 4 சீரகம்  மிளகு 1 இம்  மூன்றையும் (எண்ணிக்கையில் எடுக்க)
இடித்து  மெல்லிய  வெள்ளை  துணியில்  முடிந்து  அதை தாயின் பாலில் ஊற  வைத்துவிட்டு குழந்தையை  குளிப்பாட்டிவிட்டு  ,பிறந்த  ஒரு மாதத்தில்  இருந்து   16 நாள்  இருதுளி அளவு  நாவில்  தடவி  வர  குழந்தைக்கு
இளமையில்  நோய் எதுவும்  வராது 

====================================================

வெள்ளை படுவது நிற்க 




சோம்புகடுக்   காய்நெல்லி  சீரகம்  மாசிக்காய் ,
தேம்புவெள்ளை  நோய்க்கு  மருந்து .       ---------குறள்   

சோம்பு,கடுக்காய்தூள் ,நெல்லிகாய் ,சீரகம்,மாசிக்காய்  இவற்றை  எடுத்து  தூளாக்கி  நெய்யில்  காலை மாலை  உண்ணவிர்க்கு  முன் அருந்திவர  வெள்ளை  நோய் தீரும்