Saturday 19 September 2015

Important Tips for All!!!

குழந்தைகளுக்கு நினைவாற்றல்  அதிகரிக்க 



வசம்போர் அரைப்பங்கு  வல்லாரை பத்து 

வசமுடற்காம்  பேரறிவின் மேற்று .                     -------குறள் 

விளக்கம் :

வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள்  பத்துப் பங்கும் சேர்த்து  ஒன்றாக்கி  அதை 2கிராம்  அளவு  காலையில்  40 நாள் உண்ண  உடலின்  நச்சு தன்மை நீங்கி  மூளைக்கு   பலம்  உண்டாகும் .இதுவே  நினைவாற்றல்  அதிகரிக்க ஏற்ற  மருந்து .
************************

to Increase sperm count
தாது நலம் பெற
 ;-




இன்றைய  காலக்கட்டத்தில்  ஆண்மக்கள்  உணவு ,உறங்குதல் ,பழக்கவழக்கம் இவற்றால்  உடல்  நலம் பாதிக்கப்படுவதால்  குழந்தை  பெற  இயலாமை

,இவற்றை தவிர்க்க  குறள்  காட்டும்  வழியில்  நடந்தால்  வாழ்வில்  வளம்  பெற்று நன் மக்களையும் பெறலாம் .

மிக எளிமையானது .

கசகசா  வால்மிளகு  கற்கண்டு  பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும்  தாது    .............குறள்




கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை  பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில்  பாகு செய்து  காலை, இரவு  அருந்திவர
உடலுக்கும்  மனத்திற்கும்  நன்மை தரும்
தாது  நலம்  பெரும்
( 16 நாள்  நெல்லிக்காய்  அளவு )

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவாற்றல் மிக்க குழந்தை  பெற :

அழகாய் குழந்தை  பெற





மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின் 


மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள் 



கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .


அழகாய் குழந்தை  பெற :-



கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன் 
செம்மை நிறமாய்  பிறக்கும் ,


செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .