Tuesday 17 November 2015

வீட்டுக் குறிப்புகள்

-
எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

*வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள். *உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்

*மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம். வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும

் *பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.

*உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும். வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும். ஏதாவது விசேஷத்திற்கு சாப்பிட போகும்முன், ஒரு ஸ்பூன் தேனுடன்,ஒருசிறிய மேசைகரண்டி பட்டைபொடி சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு எதுவும் ஏற்படாது. படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும். சளி அதிகமாக இருந்தால் பத்து துளசி இலைகளை தொடர்ந்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி அனைத்தும் வந்துவிடும். தொண்டை வேக்காளாம் வந்து வயிறும் புண்ணாகி, காதில் உள்ளே அரிக்கும். அதற்கு ஒரு சிறிய குழிக்கரண்டி பச்சரிசாதம் சூடாக எடுக்கவும். அதனுடன் அதற்குத் தேவையான சுடுகிற பாலையும் சேர்க்கவும். ஆறியவுடன் ஒரு துளி தயிர் சேர்க்கவும். மறுநாள் காலை பல்விளக்கியவுடன் இந்த சாதக்கலவையை சாப்பிடவும். இந்த மாதிரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்று,தொண்டை வேக்காளம் இல்லாமல் போய்விடும். வயிற்று வேக்காளத்திற்கு மணத்தக்காளி கீரையைக் கூட்டு வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேக்காளம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குழம்போ, ரசமோ செய்யும் பொழுது உப்பு போட்டு இருக்கிறோமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறிய வழி. உப்பு போடவில்லை என்றால் ஒரத்தில் நுரையுடன் கொதித்துக் கொண்டு இருக்கும். உப்பு போட்டு இருந்தால் நடுவில் நுரையுடன் கொதிக்கும். குழந்தைகள் கறிவேப்பில்லை சாப்பிட மாட்டார்கள். எனவே சமையலில் தாளிக்கும் போது, பதினைந்து இலைகளைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் சத்து சேரும். பொரித்த கூட்டிற்கு தேங்காய் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காய்கறி வேகும் பொழுதே சிறிது சீரகம் சேர்க்கவும். அனைத்தும் வெந்தவுடன், அரை டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் கடலை மாவை நன்றாகக் கரைத்து, கூட்டில் சேர்க்கவும். தேங்காய் போட்ட ருசி கிடைக்கும். கிரைண்டர் பாதுகாப்பு டிப்ஸ் ! மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் சாதனம் கிரைண்டர். தானியங்கள் அதிகம் போடாமல், சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கூட கிரைண்டர் வீணாக தேய்வு அடையும். முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும் அரைத்துக் கொள்ளலாம். கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைக்கலாம் ஏனெனில் கல்லின் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும். கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடக்கூடும். குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும். கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயம் ஏற்படும். ஆதலால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது. கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று வழவழப்பாக இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும். கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும். கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்க நேரிடும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும். மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
எளிதான வீட்டு குறிப்புகள் !!!

1.வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.
2.காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும். 3.குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
4.அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
5.ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
6.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
7.தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.
8.சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும். 9.சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 10.குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
11.கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம். 12.கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.

முக்கியமான வீட்டு குறிப்புகள் !!!

1. இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். தண்ணீரை இர்ண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே வாருங்கள். நீங்கள் வைத்திருக்கும் இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 2. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி அதனுள் பிஸ்கட் வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 3. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னாள் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
4. ஸ்கெட்ச் பென் கறையை போக்க அசிடோன் ( நெயில் பாலிஷ் ரிமூவர்) தடவினால் போதும். கறை மறைந்து விடும் .
5. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணமல் போய்விடும்.
6. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதனை எடுத்து பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வையுங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
7. அரிசி மற்றும் காய் கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
8. ஒரு கைப்பிடி கல் உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் அரிசியை அண்டாது.
9. மிதியடிக்கு அடியில் அதே அளவில் பழைய நியூஸ் பேப்பரை வைத்து விட்டால், மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் போய்விடும்.
10. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது. 11. காலிபளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை கலர் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
12. இட்லி மாவு புளிக்காமல் இருக்க,வெற்றிலையை காம்பு கில்லாமல் மாவுப் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல இரண்டு வெற்றிலையைப் போடவும். இரண்டு நாட்களுக்கு பொங்காமலும், புளிக்காமலும் இருக்கும்.
13. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டிபோலாகிவிடும் . இப்படி ஆகாமளிருக்க பெருங்காய டப்பாவில் பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் போடுங்கள். பெருங்காயம் அப்படியே இளகி பஞ்சு போல் ஆகிவிடும்.
14. ரவா, மைதா, அரிசி ஆகியவற்றில் பூச்சி புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பு தட்டி இந்த பொருள்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் தலை காட்டாது.
15. பிரிட்ஜே, ஸ்டோர் ரூம், பாத்ரூம், என கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை அங்கங்கு வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
16. காய்ந்த எலுமிச்சை தோளை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது. http://tamilbay.co

No comments: