Sunday 13 July 2014

Samayal-Cooking!!!

தக்காளி குருமா 


வீட்டில் செய்யும் இந்த குருமா எனக்கு மிகவும் பிடிக்கும்... இது இட்லி, தோசைக்கு சூப்பரான Combination...
இதில், வெங்காயம் + தக்காளியினை கண்டிப்பாக நீளமாக வெட்டி கொள்ள வேண்டும். அதே மாதிரி வெரும் சோம்பு மட்டுமே சேர்க்க வேண்டும்.  காரத்திற்கு பச்சைமிளகாய் + சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தக்காளி - 4
  .  வெங்காயம் - 2 பெரியது
  .  பச்சைமிளகாய் - 4
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு
அரைத்து கொள்ள :
  .  தேங்காய் - 2 துண்டுகள்
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  கசகசா - 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
செய்முறை :
.  வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைகக்வும். பொடியாக நறுக்க வேண்டாம்.)
.  கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
.  இஞ்சி பூண்டு சிறிது வதங்கியதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
.  பிறகு இதில் நீளமாக அரிந்த தக்காளியினை சேர்த்து வதக்கவும்.
.  தக்காளி வதங்கியதும் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
.  தேங்காய் + சோம்பு + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
.  இத்துடன் 2 - 3 கப் தண்ணீர் + அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
.  சுமார் 6 - 8 நிமிடங்கள் கழித்து குருமா நன்றாக கொதித்த பிறகு கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கொள்ளவும்.
.  சுவையான தக்காளி குருமா ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.  
            +++++++++++++++++++++++++++++++++++

            சுண்டைக்காயில் அதிக அளவு கல்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கின்றது.இந்த  காய் சிறிது கசப்பும் துவர்ப்பும் சுவையில் இருக்கும்.
அடிக்கடி சுண்டைக்காயினை சாப்பிடுவதால் ரத்தம் மற்றும் வயிற்றினை சுத்தம் செய்ய உதவுகின்றது.
எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி இருக்கும். அம்மா வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் அல்லது குழம்பு செய்து கொடுப்பாங்க...இதே மாதிரி சுண்டைக்காய் பதில் கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.
எளிதில் செய்ய கூடிய சத்தான டிபன் சாம்பார்... நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சுண்டைக்காய் - 30 - 40
  .  துவரம் பருப்பு - 1 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 1
  .  பச்சைமிளகாய் - 3
  .  புளி Paste - 1/4 தே.கரண்டி
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு
கடைசியில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு , கருவேப்பில்லை, பெருங்காயம் - தாளிக்க
செய்முறை :
  .  வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 .  பிரஸர் குக்கரில் துவரம் கழுவி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  .  இத்துடன் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 2 - 3 கப்) + மஞ்சள் தூள் + புளி + உப்பு சேர்த்து பிரஸர் குக்கரில் 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
  .  பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து மத்து வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.
 .  சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.