Friday 4 July 2014

கரும்புள்ளிகளைப் போக் கும் சில எளியவழி!!!

முகத்தில்தோன்றும் கரும்புள்ளிகளைப் போக் கும் சில எளியவழி முறைகள்!!!!!
மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள் ளிகளை தேய்த்துதேய்த்து சோர்ந்துவிட் டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த் தம். சரி, இந்த கரும் புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா? சருமத் துளைகளா னது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந் த செல்களால் அடைக்கப்படுகிறதோ,
அப்போதுதான் கரும்புள்ளிகள் உரு வாகின்றன .
பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக் கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்க ளில் அதிகம் காணப்படும். ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிற து. எனவே தான் முகத்திற்கு அவ்வப் போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற் றை மேற்கொள்வது இன்றியமையா ததாக உள்ளது.
அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்க ளை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமை யான முறையில் கரும் புள்ளிகளை போ க்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகளை போக்குவதற்கு எப்படி யெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண் டும் என்று பார்ப்போம்.
ஓட்ஸ் :-
ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தி ல் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண் ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கி விடும்.
தயிர் :-
தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பே ஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமி டம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீ ண்டும் ஸ்கரப் செய்ய வேண் டும்.
எலுமிச்சை :-
எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன் மை அதிகம் இருப்பதால், அத னைக் கொண்டு முகத்தை சிறி து நேரம் மசாஜ் செய்தால், சரு மத்தில் உள்ள அழுக்குகள், அதி கப்படியான எண்ணெய் பசையு டன், கரும் புள்ளிகளும் நீங்கி விடும். மேலும் முகமும் வெள்ளை யாகும்.
ஆரஞ்சு தோல் :-
ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத் து, பொடி செய்து, அதனை பால் மற் றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ் கரப் செய்து, உலர விட்டு கழுவினா ல், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
பேக்கிங் சோடா :-
பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத் தில் அதனைக்கொண்டு மசா ஜ் செய்தால், கரும்புள்ளிக ளுடன் முகப்பருக்களும் நீங்கிவிடும்.
பப்பாளி :-
பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முக த்தில் தடவி உலர வைத்து அலச வே ண்டும்.
கடலை மாவு :-
கடலை மாவை பால் மற்றும் எலுமிச் சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெ னில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த் து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய் விடும்.
கற்றாழை :-
கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய் து கழுவினால், நாளடைவில் கரும் புள்ளி கள் வருவதை தவிர்க்கலாம்.
வேப்பிலை :-
வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப் பிடித்து, முகத் தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தா ல், கரும்புள்ளிகள் போய்விடும்.
சந்தனம் :-
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற் றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பட்டை :-
பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கு ம்.
இஞ்சி :-
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத் தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறை யை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கரும் புள்ளி போ வது உறுதி.
பாதாம் :-
பாதாமை இரவில் படுக்கும்போது பாலில் ஊற வைத்து, காலை யில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையா ல் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிட ம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தி ல் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெது ப்பான நீரில் அலச வேண்டும்.
வெள்ளரிக்காய் :-
முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ளரிக்காயை அரைத்து முக த்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்த மான துணி யால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முக மும் பொலிவோடு இருக்கும்.
ஆலிவ் ஆயில்:-
5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப் பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளி கள் எளிதில் நீங்கிவிடும்.
உருளைக்கிழங்கு :-
உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிட ம் ஊற வைத்து, வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும்.
கொத்தமல்லி :-
கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தி ல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.
முள்ளங்கி :-


முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முக த்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும்.