Tuesday 1 July 2014

முப்பது வகை மசாலா – குருமா!!!


இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற ருசியான முப்பது வகை மசாலா – குருமாக்கள் செய்யும் விதத்தைக் கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். இவை எல்லாமே குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய ஐட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு! செய்து, பரிமாறுங்கள்! அப்புறம் பாருங்கள்… வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் அமோக பாராட்டை!
பனீர் பட்டர் மசாலா! கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!
பனீர் – 200 கிராம், பெரிய வெங்காயம் -3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
செட்டி நாடு குருமா!தேவையானவை:
மட்டர் பனீர் மசாலா!தேவையானவை:
பட்டாணி -1 கப், பனீர் -200 கிராம், பெ. வெங்காயம்-3, தக்காளி – 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!
வெஜிடபிள் குருமா!தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பீஸ் மசாலா!தேவையானவை:
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.
புதினா குருமா!தேவையானவை:
பெப்பர் பீஸ் மசாலா!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்… ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!
தக்காளி குருமா!தேவையானவை:
கோபி மசாலா!தேவையானவை:
மசாலா குருமா!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
ஆலு மசாலா!தேவையானவை: உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
ஈஸி குருமா!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சொல்ல மட்டுமல்ல… செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா! குறிப்பு: இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
தம் ஆலு!தேவையானவை:
இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
பூண்டு இல்லாத குருமா!தேவையானவை:
சன்னா மசாலா!தேவையானவை:
சிம்பிள் ஆலு மசாலா!தேவையானவை:
எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள். இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள். இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள்.
சன்னா கிரேவி!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலை, ப.மிளகாய் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த தக்காளி, புளிக்கரைசல், வெல்லத் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த சன்னாவையும் உ.கிழங்கையும் சேர்த்து, 5 நிமிடம் கிளறி, இறக்குங்கள்.
கலர்ஃபுல் மசாலா!தேவையானவை:
காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக மீண்டும் வதக்குங்கள். கடைசியில், வேகவைத்த காய்கறி, தேங்காய்ப் பால் சேர்த்து, விடாமல் கிளறி, 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள் (கிளறாமல் இருந்தால், தேங்காய்ப் பால் திரிந்துவிடலாம்).
தக்காளி மசாலா!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சோம்பு, வெங்காயம், பூண்டு, ம.தூள் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கி, தக்காளி கரைந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கறிவேப்பிலை தூவி, கெட்டியாகும்வரை கிளறுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, பரிமாறுங்கள். சுவையில் இந்த தக்காளி மசாலா, ‘டக்கரான’ மசாலாதா¡!
சுரைக்காய் மசாலா!தேவையானவை:
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சீரகத்தைத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பாலையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறுங்கள். சுருண்டு, கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள்.
தால் மக்கானி!தேவையானவை:
இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.
டபுள் பீன்ஸ் மசாலா!தேவையானவை:
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து, வதக்குங்கள். நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளியையும் அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். இதனுடன், வெந்த டபுள் பீன்ஸ், மற்றும் பட்டாணியை அவற்றை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, தண்ணீர் வற்றி, சுருண்டு வரும் வரையில் கிளறி, வெள்ளரி விதை விழுதைச் சேர்த்து இறக்குங்கள்.
ராஜ்மா மசாலா!தேவையானவை:
அடுத்ததாக, எண்ணெயைக் காயவைத்து, அதில் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, கூடவே அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறுங்கள். அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்குங்கள். கடைசியாக, அதனுடன் வேகவைத்த ராஜ்மா, சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
கோஸ் குருமா!தேவையானவை:
எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், கோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
தக்காளி தால்!தேவையானவை:
பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியாக, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.
முந்திரி மசாலா!தேவையானவை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயம், ப.பட்டாணியைப் போட்டு வதக்கி, முந்திரியையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் தக்காளி, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். அடுத்து, அதனுடன் அரைத்த முந்திரி விழுதையும் தேங்காய்ப் பாலையும் சேருங்கள். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை விடாமல் கிளறி, கொதிக்கவிடுங்கள். கடைசியில், கரம் மசாலா தூளைத் தூவி இறக்குங்கள்.
தால் பனீர் மசாலா!தேவையானவை:
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க கூறியவற்றைத் தாளியுங்கள். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் பனீர், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள். மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.
பலாக்காய் சொதி!தேவையானவை:
அடுத்து, மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதையும் சேருங்கள். இதில், தேவையான தண்ணீர், வேகவைத்து எடுத்த பலாக்காய் துண்டுகள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பெப்பர் கோபி!தேவையானவை: காலிஃப்ளவர் – சிறியதாக 1, பெ.வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, உப்பு-தேவைக்கு, எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்.
எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இதனுடன் மஞ்சள் தூள், காலிஃப்ளவர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வதக்குங்கள். இதனுடன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இதை மூடிவைத்து அவ்வப்போது திறந்து கிளறுங்கள். பச்சை வாசனை போய், காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், மூடியை எடுத்துவிட்டு, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறுங்கள். இதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி, கிளறி இறக்குங்கள்.
கீரை சன்னா மசாலா!தேவையானவை:
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கீரை, வேகவைத்த சன்னா (தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கொதிக்க விடுங்கள். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து, மசாலாவில் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள் (சுக்காங்கீரைக்குப் பதில் அரைக்கீரை, புளிச்ச கீரையையும் உபயோகிக்கலாம்). பிரெட், சப்பாத்திக்கு சத்தான சைட் டிஷ் இது!