Tuesday 17 December 2013

திருவாதிரை களி செய்வது எப்படி!!!-1

திருவாதிரை களி

திருவாதிரை களி

ஆருத்திரா தரிசனம் அன்று மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும்
இந்த களி  சுவையில் சிறந்தது.

தேவையானவை:-

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம்  1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய்   5
முந்திரி       10
நெய் 200 கிராம்



அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில்
தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது
இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் .

வெல்லம்  சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்


அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த
நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக
கொதிவந்ததும்  பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு
சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .

நன்றாக 8 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில்
இருந்து இறக்கிவிடவும் .

மேலே நெயில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி
செய்து போடவும் .

நெய் அதிகமாக விட்டு கிளறவும் - சுவை கூடும்

சுவையான திருவாதிரை களி  இதோ உங்களுக்காக



இதற்க்கு பிரத்தியேக கூட்டு ஓன்று உண்டு அதை 7 தான் கூட்டு
என்று அழைப்பார்கள் அதைப் பற்றி தனியாக பார்க்கலாம்


பொதுவாக இதை 7 தான் கூட்டு என்று சொல்லுவார்கள்
ஆனால் நாம் போடக்கூடிய காய்களை பார்ப்போம்

உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
அவரைக்காய்
வாழைக்காய் (விருப்பம் இருந்தால் )
கொத்தவரங்காய்
பீன்ஸ்
கேரட்
பச்சை பட்டாணி
மொச்சை
பூசணிக்காய்
பரங்கிக்காய்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ)

தேவையானவை
மேலே சொன்ன காய்கறிகள்
பருப்பு 2 கப் ( வேகவைத்தது)
புளித்தண்ணி கரைத்தது (4 கப்)

வறுத்து பொடி செய்ய தேவையானவை

கடலைப்பருப்பு
வரமிளகாய்
தேங்காய் துருவல்
தணியா 

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மேலே சொன்னவற்றை
தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும் , இதை மிக்சியில்
போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய காய்களை கொஞ்சம் உப்பு சேர்த்து
தண்ணீர்விட்டு அடுப்பில் நன்றாக வேகவைக்கவும்

காய்கள் வெந்த நிலையில் கரைத்து வைத்த
புளிக்கரைசலை சேர்த்து உப்பு , பெருங்காயம்
சேர்த்து , அதனுடன் செய்து வைத்துள்ள பொடியை
சேர்த்து , வேகவைத்து தயார் நிலையில் உள்ள
பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும் (கொதிக்கும் நேரம் அவரவர்
சுவைக்கும் திறனை பொருத்தது)

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை
போட்டு விடவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , செய்துவைத்த களி , கூட்டை
இறைவனுக்கு படைத்து , சுவைத்தால் சுவை கூடும்