Saturday 7 April 2018

Poweful Powder

பஞ்ச தீபாக்கினி சூரணம்
🌿 @TamilMedicine

சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
ஏலம் - 50 கிராம்
கற்கண்டு - 250 கிராம்

மேலுள்ள மருந்துகளில் கற்கண்டை தவிர்த்து மீதி மருந்துகளை முறைப்படி சுத்தி செய்து இடித்து சலித்து பிறகு கற்கண்டை பொடித்து பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 1 முதல் 2 கிராம் வரை

அனுபானம் : நெய், தேன், வெந்நீர்

பயன்கள் : பசியின்மை, செரியாமை, மயக்கம், கிறுகிறுப்பு, மூல வாயு, உடல் உஷ்ணம், அசீரணம், எலும்பு சுரம், அஸ்தி வெட்டை, வாயு, பித்தம், வெப்ப நோய், சூலை, பித்த வாயு, கப நோய் மேலும் பல நோய்கள் குணமாகும்.

குறிப்பு : புளி, கசப்பு சுவையுள்ள உணவுகளை தவிர்த்தால் மேலான பலனை காணலாம்.

இது எளிய முறை வீட்டிலே செய்யலாம்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்,
🌿 @TamilMedicine

No comments: