Saturday 8 March 2014

பாகற்காய் கார குழம்பு - Bittergourd Kara Kuzhambu - Pavakkai kuzhambu - Bitter Gourd Recipes !!!

பாகற்காயினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள், 
சக்கரை நோயளிகளுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை காட்டுபடுத்துகின்றது.
•  பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தினை சுத்தம் செய்கின்றது.(Blood Purifier)
புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவதால் நல்ல பயன் கண்டிப்பாக கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.

பாகற்காயில் அதிக அளவு Iron, விட்டமின்ஸ் , பி, சி (Vitamins A, B6, C) , நார்சத்து(Dietary Fibre)இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொலஸ்டிரால் இருக்கின்றது. 100 கிராம் பாகற்காயில், சமைத்தபின்னர் சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாகற்காய் – 1/4 கிலோ
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1
·        பூண்டு – 10 பல் தோல் நீக்கியது

முதலில் தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 2 மேஜைகரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க
·        துவரம் பருப்பு – 1/4 தே.கரண்டி
·        சோம்பு – 1/4 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் -  1 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயினை மிகவும் சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும். (கவனிக்க : பாகற்காயில் பெரிய விதைகள் இருந்தால் அதனை நீக்கிவிடவும். பிஞ்சு விதைகள் இருந்தால் அப்படியே சேர்த்து கொள்ளலாம்.)

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.




·        இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

·        பிறகு பாகற்காயினை சேர்த்து நன்றாக 4 – 5 நிமிடங்கள் வதக்கவும். 


·        தக்காளியினை இதில் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி கொள்ளவும்.




·        தக்காளி வதங்கிய பிறகு, அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

·        இத்துடன் கரைத்த புளி சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும். (உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும்.)




·        கடைசியில் கொத்தமல்லி, கருவேப்பில்லை தூவி குழம்பினை கிளறிவிடவும். சூடான சாதம், தயிர் சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.