Thursday 27 February 2014

சர்க்கரை நோய், நீரிழிவு நோய், Diabetes!!!

நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியைஇரத்தத்தில் உள்ளகுளுக்கோஸ் கொடுக்கிறதுஇருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்தஇன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறதுவயிற்றின் பின் பகுதியில்கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளதுஇங்கு இருந்து தான்இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போதுஉடலில்உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்துபெறமுடிவதில்லஇதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவுஅதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய்நீரிழிவு நோய், Diabetesஎன்றெல்லாம் அழைக்கப்படுகிறது


இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம்சிறுநீரகங்கள்,கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல்இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம்சில சமயங்களில்மரணத்திலும் முடியலாம்இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில்வைத்திருப்பவர்கள்மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல்தங்களை காத்துக் கொள்ள முடியும்.


நீரிழிவின் வகைகள்

  • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
  • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
  • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

டைப் I நீரழிவு நோய்



இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட்டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய்என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவுவகையைச் சார்ந்தவர்கள்எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போதுஇத்தொற்றுக்கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைஅழித்துவிடுகிறதுநாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்றகொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனைபயன் படுத்த முடியாமல் போகிறதுஇவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள்இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்அவர்களால்இனசுலின் உற்பத்தி செய்ய முடியாதுஇது சிறுவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும்போது இது திடீர் என்று வருகிறதுஇதை சரி செய்ய முடியாதுஇருப்பினும்மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்துதங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமானவாழ்கையை வாழலாம்.

டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
  • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்சிறுநீர் கழித்தல்எடை குறைதல்போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
  • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
  • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
  • உண்ணும் உணவுஉடற்பயிற்சிஇன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிதுமாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும்வகையில் மாறுபடும்.

டைப் II நீரழிவு நோய்



இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும்பொதுவாக 40 வயதைக்கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்புஇவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால்தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மைகுறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம்இவ்வகையைச் சார்ந்தவர்கள்தற்சமய ஆய்வின் படிஇளைஞர்களும்பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும்உடல் உழைப்பைச்சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒருநோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும்குறிப்பாகஇருதய நோய், சிறுநீரக நோய்மற்றும் கண் தெடர்பானகைகால் நரம்பு,இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம்கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம்இதற்கு நிரந்தர தீர்வுஇல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி,தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக்குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு),உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.பலருக்கு சில மருந்துகளும்மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல்சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.






டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
  • பொதுவாக பெரியவர்களும்சில இளைஞர்களும் இதனால்பதிக்கப்படுகிறார்கள்
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
  • பொதுவாக இது பரம்பரை நோய்
  • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடைஅதிகமாகவும்உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
  • இரத்தத்தின் சக்கரை அளவைஉணவு கட்டுப்பாடுஉடல் பயிற்சி,மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்




கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு:


உணவு என்பது மாவுச்சத்துபுரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசிகோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது.கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால்சக்கரை இரத்தத்தில்ஒரே சீராக சேருகிறதுகாய்கறிபழங்களை சேர்த்துக்கொள்ளும் போதுநார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லதுபூமிக்கு கீழேவிளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்குகேரட்பீட்ரூட்).பழங்களில் சப்போட்டாபழாப்பழம்சீத்தா போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.

உடற்பயிற்சி: 


உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது.முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய்உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிசெய்ய வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்.காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கிதினமும்குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்வெந்தயத்தைநன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்இந்த பொடியை3தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்துகளிபோல் ஆக்கி காலைஇரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்றுவாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்இதனுடன் தொடர்ந்து நீரிழிவுநோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரைகளை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும்,  நீரிழிவு நோய்க்கானயோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும்,இதைசாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியைமந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும்.

இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில்இன்சுலின்போன்ற ஒருபொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகபிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர்தினசரி காலையில் வெறும் வயிற்றில்நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர,இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம்வாரம் 2 நாள் – 3நாள்பாகற்காய் சாறுசூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக்கட்டுக்குள்வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும்சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில்அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனைஅதிகரிக்கின்றது

சாப்பிட வேண்டிய காய்கறிகள் :  

கத்தரீக்காய், அவரைக்காய்வெண்டைக்காய்கொத்த வரங்காய்வெண்பூசணிவெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய்புடலங்காய்பலாக்காய்,பாகற்காய்வெங்காயம், காலிபி;ளவர்முட்டை கோஸ்வாழைத்தண்டு,வாழைப்பூசிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டுவதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்குஉடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

சாப்பிடக்கூடாத காய்கறிகள் :  

வாழைக்காய், உருளைக்கிழங்குகாரட்பீட்ரூட்கருணைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணிகிழங்கு வகைகள்பீன்ஸ்..ஃசர்க்கரைநோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால்மிகுந்துள்ளசர்க்கரையின் அளவு கட்டுப்படும.

சாப்பிட வேண்டிய பழங்கள் : 

ஆப்பிள்வாழை,ஆரஞ்சுபேரீக்காய்பப்பாளிவெள்ளரீப்பழம்,கொய்யாப்பழம்.

சாப்பிடக்கூடாத பழங்கள் :  

பேரீச்சம் பழம்பலாப்பழம்உலர்ந்த பழ வகைகள்பெரீய வாழைப்பழம்,டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள்பெரீய ஆப்பிள்பெரீய மாம்பழம்,பெரீய கொய்யாப்பழம்சப்போட்டா.

அருந்த வேண்டிய பானங்கள் :  
சர்க்கரையில்லாத காபிடீ,பால்சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ்,தக்காளி சூப்சோடா. 

சாப்பிடக்கூடாத பானங்கள் :  

சர்பத் வகைகள்சர்க்கரை வகைகள்இளநீர்தேன்மதுவகைகள்ஆப்பிள்ஜூஸ், ஐஸ்கிரீம்பாதாம்கற்கண்டுவெல்லம்பாயாசம்முந்திரி,கடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால்பயன்படுத்தவேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவதுஇதனால்சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்பச்சையாகவெங்காயத்தை சாப்பிடவேண்டும்அதாவது வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார்செய்து சாப்பிட வேண்டும்அல்லது கேழ்வரகு,  கோதுமை போன்றகஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

ர்க்கரை அளவு குறைந்தால் செய்ய வேண்டியது

  • திடீரென ரத்தத்தில் ர்க்கரை அளவு குறைந்து உடல் நடுக்கம்திகமாக ‌வியர்த்தல்படபடப்பு ற்பட்டால் பரபரப்பு ஆகாமல் உடனடியாகஅதனை சரி ய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.
  • ர்க்கரை அளவு குறைவதை ‌சில ‌றிகுறிகளால் றிந்து கொண்டதும்,உடனடியா சாக்லேட், ‌பிஸ்கெட் ல்லது ர்க்கரையைக் கூட வாயில்போட்டு சாப்பிடலாம் 
  • பழச்சாறோ ல்லது சர்க்கரை கலந்த ‌நீரையோ பருக வேண்டும்.தேவைப்பட்டால் 15 ‌நிமிடம் ழித்து ‌மீண்டும் ஒரு முறை பருகலாம். 
  • ர்க்கரை நோயாளி ‌சுயநினைவை இழக்கும்பட்சத்தில் பழச்சாறோல்லது ர்க்கரை கலந்த ‌நீரையோ பருக வைக்க முயற்சிக்கவேண்டாம்இது யிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.