Monday 15 July 2019

ஜீவபஸ்ப திருநீறு!!!

நீண்ட நாட்களுக்கு பிறகு முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள்....
(சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு"என்ற நூலில் அவர் சொன்ன அபூர்வ ரகசியம் இது.)
விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் சித்துஇது !!!
நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம் !!!
சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள் !!!
அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.
இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!!
சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம்.
இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம்.
இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கோம்.
சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கோம் !!!
இவை வெறும் கதைகளா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா ?
இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். சரி அந்த விபூதி தயாரிப்பது எப்படி !!!
இரண்டு கிலோ சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்க வேண்டும். அதில் கீழ் கண்ட பற்பங்களை சேர்க்க வேண்டும்.
1. கல்நார் பற்பம் --- 10 கிராம்
2. படிகார பற்பம் --- 10 கிராம்
3. சிலா சத்து பற்பம் --- 10 கிராம்
4. ஆமையோட்டு பற்பம் --- 10 கிராம்
5. சிருங்கி பற்பம் --- 10 கிராம்
6. நண்டுக்கல் பற்பம் --- 10 கிராம்
1. கல்நார் பற்பம் (சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),
2. படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்),
3. சிலா சத்து பற்பம் (எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள், சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),
4. ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்),
5. சிருங்கி பற்பம் (எலும்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள்).
(சிருங்கி பற்பம் என்பது மான் கொம்பு பற்பம் ஆகும்)
இந்த பற்பங்களை 10 கிராம் போதுமானது. இது தான் மருந்து. இவை தான் நோய்களையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
மேலுள்ள ஐந்து பற்பங்களை கலந்து அதை ஒரு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும் !!!
அதன் பிறகு சாமியாரின் சக்தி பற்றி ஊரெல்லாம் பேசுவார்கள் !!!
இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம்.
குறிப்பு:-
**********
தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம். கேட்டாலும் தர மாட்டேன். தயாரிக்கும் முறையை ஒளிவு மறைவு இல்லாமல் முழுமையாக பகிர்ந்துளேன். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேடி வாங்கி நீங்களே வாங்கி தயாரித்து பயன்படுத்துங்கள். அப்போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும்.

No comments: