Monday 31 December 2018

Natural Viagra!!!

இயற்கை வயாகரா பானம்
சக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்!
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நலத்தை கெடுத்து, ஹார்ட் அட்டாக் போன்ற ஆபத்துக்களை விலைக்கு வாங்காமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:
தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் மற்றும் லைகோபின் எனும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1 
எலுமிச்சை - 3
தயாரிக்கும் முறை
தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.
பின் அதை நன்கு அரைத்து 1 லிட்டர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
உட்கொள்ளும் முறை
சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.
குறிப்பு
இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.
பக்கவிளைவுகள்
இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம்

No comments: