Thursday 2 March 2017

Granny Medicine!!!

எலுமிச்சை பழ சாறை ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்

*தும்மட்டி காய் சாற்றில் கருன்சீரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்

*கொத்தமல்லியை சிறிது காடியில் அரைத்து கொடுக்க சாராய போதை நீங்கும்.

*வாய்புண் பல்வலி குணமாக கொள்ளுகாய் வேரை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க சரியாகும்.

*நுரையீரல் பலபட தேனில் ஊற வைத்த நெல்லிகாயை தினசரி ஒன்று சாப்பிட வேண்டும் 

*வாதநாராயண இலையை காய வைத்து தூளாக்கி 5 கிராம் சுடுநீரில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வர வாயு தொல்லை நீங்கும் 

*முற்றிய வெண்டைகாயை சூப் செய்து குடித்தால் இருமல் நீங்கும்மஞ்சள் தூள் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர இரத்த சம்பந்த தொல்லை நீங்கும் 

*பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குழந்தைக்கு இருமல் குறையும் 

*புளியங்கொட்டை தோல் மாதுளம் பழ தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும் 

*மாதுளம்பழம் படுக்கும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும் 

*குடல் புண் குணமாக அகத்தி கீரை நல்ல உணவு 

*பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும், மூல நோய் வராது 

*தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிட குணமாகும்

*குடல் வாதம் குணமாக பரச பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுக்க தீரும் 

* மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்

*அதிமதுரம் கடுக்காய் திப்பிலி மிளகு இவை எல்லாம் சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்

*கொத்துமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டால் சூட்டினால் கண்ணில் கோளை தள்ளுவது நிற்கும்

*பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவாகும்

*பப்பாளி பாலை வெங்காய சாறுடன் கலந்து தடவி வர வேர்குரு சரியாகும்

*பித்தப்பை குணமாக வெப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்

*வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் நீங்கும்

*வெட்டு காயம் குணமாக இலந்தை இலையை அரைத்து போடலாம் 

*உடல் சதை போடுவதை தடுக்க - வாழைத்தண்டு சாறு அ பூசணி சாறு அ அருகம் புல் சாறு இவை மூன்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரவும் 

*மோகம் அதிகரிக்க முருங்கைபூவை பாலில் காய்ச்சி சாப்பிட வேண்டும்

*மேகரோகம் குணமாக ஆலம்பட்டையை பட்டுபோல பொடி செய்து வெந்நீரில் கருப்பட்டியுடன் சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிட்டு வரவேண்டும்

*சுகப்ரசவம் பெற, ஆப்பிள்,தேன்,ரோஜா இதழ், குங்குமபூ, ஏலக்காய் ஆகியவை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும் 

*சிவப்பான குழந்தை பெற குங்குமப்பூவை வெற்றிலை பாக்குடன் சாப்பிடலாம்

*ஆடுதீண்டா பாளை வேர் எடுத்து கஷாயம் செய்து குடிக்க பாம்புக்கடி விஷம் முறியும்

No comments: