Sunday 5 March 2017

தீராத விக்க்ல்

தீராத விக்கல்!!!
* * * * * * * * * * *
 தீராத விக்கல் கூட கல்லீரல் சம்பந்தப்பட்ட வியாதிங்கறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
 உடனே இது பெரிய வியாதியான்னு பயந்துட வேணாம்.
விக்கல் நிறுத்த எளியவழி....
ஆப்ப சோடாவை (sodium bicarbonate)
ஒரு சிட்டிகை எடுத்து தேனோடு கலந்து கொடுக்க... விக்கல் உடனே நிற்கும்...😀

@@@@@@@@@@@@@@@@


நெல்லிக்காய், சுக்கு
* * * * * * * * * * * * * * *
300 கிராம் நெல்லிக்ககாய், 100கிராம் சுக்கு இரண்டையும் பொடி செய்து கலந்துகொண்டு அதனை ஒரு தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து அருந்தி வர கல்லீரலை நன்கு செயல்பட வைத்து ஜீரண சக்தியை அதிகரித்து நம் உடலில் தேங்கியுள்ள உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றும்.
மேலும் மூளைச் செல்களுக்கு நல்ல சக்தி அளித்து மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உடல் எடையை கூடாமல் தசைகளுக்கு பலம் அளிக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களான சளி, சைனஸ், மூக்கடைப்பு, இருமல் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் பித்தப்பையில் கல், போன்ற கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.
பக்கவிளைவுகள் ஏதுமில்லாத இந்த எளிய உணவை மருந்தாக்கி உடல் உறுப்புகளை பலப்படுத்துவோம். அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.

No comments: