Monday 23 March 2015

For All Heart Troubles!!!

 Heart Problem:
heart2

இந்தப்பதிவை படிக்கும் முன்  இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து ! இந்தப் பதிவை படிக்கவும்.
இதயவலி நீக்கும் அபூர்வ மருந்தை நம் வலைப்பூவின் வாசகர்கள் பலரும் பயன்படுத்தி  முழுமையான குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில்  தெரியப்படுத்திக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் நம் குருநாதருக்கும்  இந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 4 மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு பிரபலமான  தனியார் மருத்துவமனையில் நம் நண்பரின் சகோதரிக்கு பிறந்த குழந்தையைப்பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டு வரும் வழியில் மருத்துவமனையின் வாசலில் ஒரு பெண் இதயவலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் பெண் குழந்தையிடம் அட்மிசன் பார்ம் நிரப்பி கொடுத்துவிட்டு வரும்படி கூறினார், அந்த குழந்தைக்கு 14 வயது இருக்கும், தாய் வலியால் உயிருக்குப் போராடி  துடித்துக்கொண்டிருக்கும் போது கண்ணீருடன் அந்த குழந்தைக்கு என்னசெய்வதென்றே  தெரியவில்லை , நம் நண்பரும் உடனடியாக உதவி செய்து அந்த குழந்தையிடம் சென்று  தாயின் பெயர் மற்றும் முகவரியை கொடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிசன் செய்தனர், 1 மாதமாகவே வலி இலேசாக இருந்து இன்று அதிகமாகி உள்ளதாக  அந்தப் பெண்மனி தெரிவித்தார், எல்லா சோதனைகளும் முடிந்தபின் இதயத்திற்குள் செல்லும்  குழாயின் அளவு சுருங்கி இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர், குழந்தையின் பாட்டி மற்றும்  தாத்தா சில மணி நேரங்களில் மருத்துவமனைக்கு வந்தனர். தன் மகன் பிரான்சில் அலுவலக வேலை காரணமாக சென்றிருப்பதாகவும் தாங்கள் இன்று காலைதான் திருமண வீட்டிற்கு  சென்றதாகவும் அதற்குள் மருமகளுக்கு இப்படி இதயவலிவந்துவிட்டது என்றும் கூறினார்,  இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அகத்தியரின் தீவிர பக்தர், அவர் கூறினார் நாங்கள் மண்டபத்தில் வண்டியில் ஏறியதிலிருந்து அவரைத்தான் வேண்டினோம் நல்லவேளை நீங்கள் உதவினீர்கள் என்றார், நம் நண்பர் அதன் பின் இயற்கை உணவு உலகம் பற்றி தெரியப்படுத்தினார்,  இந்தப்பிரச்சினைக்கு மருந்து இருக்கிறதா என்று அவர் கேட்டார். ஒரு மனிதனுக்கு இதயம் தொடர்பாக வரும் பிரச்சினை மொத்தம் 15 தான் அது அத்தனைக்கும் ஒரே மருந்து தான். நாம்  மருத்துவர் இல்லை என்பதையும் இதற்கு முன் இந்த மருந்து இதயக்குழாய் சுருங்கி இருக்கும்  எந்த நபருக்கும் கொடுக்கவில்லை விருப்பம் இருந்தால் உங்கள் மகன் மற்றும் மருமகளிடம்  கேட்டுத் தெரியப்படுத்துங்கள் என்று கூறினோம், சில நிமிடங்கள் இருங்கள் என்று கூறிச்சென்று  தன் மகனிடமும் ஐசிவியில் இருந்து வெளிவந்த மருமகளிடமும் கேட்டுவிட்டு சாப்பிடுவதாக  கூறினார். சரி உடனடியாக தாமரைப்பூ செய்து கொடுக்கும் நண்பரிடம் போன் செய்து மதுரை முகவரிக்கு அனுப்ப கூறினோம், அடுத்த நாள் காலை மற்றும் சாயங்காலம் இரண்டு வேளை  சாப்பிடுங்கள் என்று கூறினோம், அதே போல் சாப்பிட்டுள்ளார். வலி குறைவதை உணர்ந்திருக்கிறார். 25 நாட்களுக்கு பின் வலி சுத்தமாக இல்லை, 48 நாட்கள்  தொடர்ந்து சாப்பிட கூறினோம் இப்போது முழுமையான குணமுடன் உள்ளார், மறுபடியும் சோதித்துபார்ததில் இதயத்திற்கு செல்லும் குழாய் சுருங்கி இருந்தது சரியாகிவிட்டதாக  தெரிவித்தார். அவர் கூறிய நன்றியை குருநாதருக்கு சமர்பித்தோம்.
இதயவலி தொடர்பான  பதிவில் இமெயில் மூலம் தொடர்ந்து வரும் சில கேள்விகளும் அதற்கான பதிலையும் இனி
பார்க்கலாம்.
1. எங்களுக்கு சுகர் (sugar) இருக்கிறது நாங்கள் இந்த இதயவலி மருந்து எடுக்கலாமா ?
தாராளமாக எடுக்கலாம் தேனில் கலந்து குடிப்பதை விட, 1 ஸ்பூன் மருந்தை 2 டம்ளர்  தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளராக வந்த பின் ஆறவைத்தும் குடிக்கலாம்.
2. சிறு குழந்தைகளுக்கு இந்தப்பொடி கொடுக்கலாமா ? பக்க விளைவுகள் உண்டா ?
5 வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் மருந்து சாப்பிடலாம். கூடுதல் தகவல் குழந்தை படிப்பிலும் படு சூட்டியாகிவிடுவர் வெள்ளைத்தாமரயில் வீற்றிருப்பவள் சரஸ்வதி அதனால் அறிவும் கூடும் தொடர்ந்து கொடுப்பதால் தப்பில்லை. மூலிகை மருந்துகளுக்கு எப்போதும் பக்கவிளைவுகள் கிடையாது.
3.ஆடுதிண்ணாப்பாளை வேர் கிடைக்கவில்லை ஆடுதிண்ணாப்பாளை பொடியை சேர்கலாமா ?
மருந்தில் தெரியப்படுத்தி இருப்பது ஆடுதிண்ணாப்பாளை வேர் தான், அதனால் ஆடுதிண்ணாப்பாளை இலையைச் சேர்க்க வேண்டாம், ஆடுதிண்ணாப்பாளை வேர் கிராமங்களில் எளிதாக கிடைக்கும்.
4. எங்களுக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை நாங்கள் இந்த மருந்து சாப்பிடலாமா ?
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிடலாம். நாம் பூமியில் வசிக்கும் நாட்கள் வரை இந்த உடலில் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது. ஒரு மனிதனுக்கு  இதயத்தில் வரும் 15 பிரச்சினைகளுக்கும் இந்த ஒரே மருந்து வேலை செய்யும். வருமுன் காப்பதே சிறந்தது.
5. நாங்களும் இதே போல் பொடியை வீட்டில் செய்து வைத்துள்ளோம் ஆனால் 1 மாதத்திலே  மருந்தில் வண்டு, பூச்சி விழ ஆரம்பித்துவிடுகிறதே என்ன செய்ய வேண்டும். ? மருந்து பொடியை எத்தனை நாள் பயன்படுத்தலாம் ?
பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர் இவர்களுக்கு பதில் மருந்தின் முக்கியத்துவம் பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் தெரிகிறது நமக்குத்தான் தெரியவில்லை,  தாமரைப்பூவை நிழலில் உலர்த்துவதாலும் அதனுடன் ஆடுதிண்ணாப்பாளை வேரை  சேர்ப்பதாலும் பூச்சி விழுகிறது. நன்றாக மாவு அரிக்கும் அரிப்பில்(Filter) நன்றாக அரித்து பயன்படுத்தலாம். 1 வருடம் வரை மருந்தின் வீரியம் இருக்கும். வண்டை நீக்கி மறுபடியும்  பொடியை பயன்படுத்தலாம். அதில் உயிர்ச்சத்து இருக்கிறது என்று பூச்சிக்கு தெரிகிறது.!
6.குறிப்பிட்ட மிருகசிரீடம் நட்சத்திரம் உள்ள நாள் அன்று தான் வேரை எடுக்க வேண்டுமா ?
குறிப்பிட்ட மிருகசிரீட நட்சத்திரம் உள்ள நாளில் அந்த வேரின் மருத்துவ குணம் அதிகமாக இருக்கும் அதனால் அன்று எடுப்பதே சிறந்தது. பகல் வேலையில் மட்டுமே வேரை எடுக்க  வேண்டும் எக்காரணம் கொண்டும் சூரியன் மறைந்த பின் வேர் எடுக்கக்கூடாது.
7.மருந்து செய்து கொடுக்கும் நபர் அலைபேசி எண் கொடுக்கலாமா ?
உங்களை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருந்தை அப்படியே  வலைப்பூவில் தெரிவித்துள்ளோம், மருந்து செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்  மட்டும் இந்த 91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அன்பையும்  நன்றியையும் தெரிவித்து மருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் வியாபாரிகள் அல்ல ஒரு சேவையாகவே செய்கின்றனர். [ 100 கிராம் பொடியின் விலை ரூ.400 கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ]H



---------------------------------------------------------------------------------------------------------------------------------


Another Natural Medicine for Heart Blocks:




இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்