Tuesday 24 June 2014

தேக முத்திரைகள்!!!

அஞ்சலி முத்திரை!,
எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரை கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு, ஆனால் இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இது தமிழனின் கலை, இதை வாசிக்கும் நண்பர்கள் இந்தச் செய்தியினை. தமிழறிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான எதிர்பார்ப்பு….முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.பின் குறிப்பு :-இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்
Photo: தேக முத்திரைகள்
அஞ்சலி முத்திரை!, 
எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரை கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு, ஆனால் இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இது தமிழனின் கலை, இதை வாசிக்கும் நண்பர்கள் இந்தச் செய்தியினை. தமிழறிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான எதிர்பார்ப்பு….முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.பின் குறிப்பு :-இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்

சுவகரண முத்திரை

யோக முத்திரை வரிசையில் கடைசி முத்திரையான சுவகரண முத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

“சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு

சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்

பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி

சகலகலை சாத்திரமுஞ் சித்தி

தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி

திருவாசி ஆனதொரு வாசிசித்தி

தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி

சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே”

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”சம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா….யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.
Photo: சுவகரண முத்திரை

யோக முத்திரை வரிசையில் கடைசி முத்திரையான சுவகரண முத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

“சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு

சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்

பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி

சகலகலை சாத்திரமுஞ் சித்தி

தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி

திருவாசி ஆனதொரு வாசிசித்தி

தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி

சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே”

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”சம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா….யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.

அபான முத்திரை
அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.“சித்தான அபான முத்திரையைச் செய்துதீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்யவத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்திமகத்தான கற்பூர தீபஞ்சித்திவித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்திவேத மயமான சிவயொகஞ்சித்திசத்தான அபான முத்திரயினுடமகிமைசங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே”- தன்வந்திரி வைத்தியம் 1000 -

கீழே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்
Photo: அபான முத்திரை
அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.“சித்தான அபான முத்திரையைச் செய்துதீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்யவத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்திமகத்தான கற்பூர தீபஞ்சித்திவித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்திவேத மயமான சிவயொகஞ்சித்திசத்தான அபான முத்திரயினுடமகிமைசங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே”- தன்வந்திரி வைத்தியம் 1000 -

கீழே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்