Sunday 11 May 2014

Natural Medicine For HEART ATTACK & Other Heart related Diseases!!!



                               
            




வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி.
மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில விடயங்களை நம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், சில வைத்திய முறைகளை கோடி தனம்  ஈந்தாலும் வெளியே கூறவேண்டாம் என்று இருக்கும், சரி யாரையாவது ஒருவரை நியமித்து மருந்து செய்து கொடுக்க சொல்லியதன் பெயரில் அன்போடு அவரும் செய்து கொடுப்பார், ஆனால் சிலர் காசுக்குத்தானே இவர்கள் மருந்து கொடுக்கிறார் என்று அலட்சியத்தோடு எத்தனை பேர் இந்த மருந்து சாப்பிட்டு இருக்கின்றனர் ? அவர்களின் போன் நம்பர் சொல்லுங்க , பக்கவிளைவுகள்  இருக்கா ? மருந்து குணப்படுத்துவதற்கு என்ன உத்ரவாதம் கொடுங்கிறிங்க  என்று பல கேள்விகள், இவர்களுக்கு ஒரே பதில் இவர்கள் வியாபரிகள் அல்ல, இயற்கை உணவு உலகத்தில் இருந்து இதுவரை வெளிந்த இனி வெளிவரும் எந்த மருந்தும் பக்கவிளைவுகள் கிடையாது. தன் வயதான காலத்திலும் நாம் சிலரிடம் மருந்து செய்து கொடுக்கலாமா என்று கேட்ட ஒரு வார்த்தைக்காக மருந்து செய்து கொடுக்கும் நபர்களிடம் இது போல் கேட்கும் கேள்வி அவர்கள் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதிவில் தெளிவாக தெரியபடுத்தியும் நம்பிக்கை இல்லை என்றால் எந்த மருந்தும் வேலை செய்யாது.
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.
வெண்தாமரை இலை – 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு
வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து , நிழலில் உலர்த்தி காயவைத்திருக்கும் தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும். இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது,
முக்கிய குறிப்பு : மருந்து சாப்பிடும் காலங்களில் அசைவ உணவு, ஊறுகாய், அப்பளம், மிகக்குளிர்ந்த நீர், மைதாமாவில் தயாராகும் பொருட்களை தவிர்க்க வேண்டும், மருந்து எவ்வித பத்தியமும் பக்கவிளைவுகளும் கிடையாது, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்,


உலகசுகார அமைப்பு வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் இந்தியர்களுக்குத்தான் அதிகமாக இதயபாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர், அடுத்த ஆண்டு உலகசுகாதார அமைப்பு வெளியீடும் அறிக்கையில் இதயநோய் மிகக்குறைவாக உள்ளநாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாக நாம் எண்ணுவோம். இந்த மருந்தை பதிவில் தெரியப்படுத்துவதற்கு காரணம் அவசரமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கும் சமயத்தில் நமக்கு இமெயில் அனுப்பி பதில் அவருக்கு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்ற காரணத்தினால் இங்கு தெரியப்படுத்துகிறோம். நாம் கேட்டதற்கு இணங்க இம்மருந்து செய்வதற்காக இயற்கை உணவு உலக நண்பர்கள் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி. குருநாதரின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும். தயவு செய்து மருந்து செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் மட்டும் இந்த அலைபேசி எண்ணில் 91- 7667473724 தொடர்பு கொண்டு மருந்தை பெற்றுகொள்ளவும். (100 கிராம் பொடி கொரியர் கட்டணத்துடன் ரூ.400 ) இவர்கள் வியாபாரிகள் அல்ல, அன்பையும் பணிவையும் தெரிவித்து மருந்து வாங்கிக்கொள்ளவும்.