Sunday 10 August 2014

மகப்பேறும் மருத்துவமும்!!!

மகப்பேறும் மருத்துவமும் :-

1. நீங்கள் கர்ப்பிணியா!
2. கர்ப்ப காலத்தில் சில சமாச்சாரங்கள் 
3. மனதை பக்குவப்படுத்துவது
4. நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி
5. என்ன குழந்தை வேண்டும்?
6. கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க
7. கர்ப்பிணி பெண்களும், உணவுப் பழக்கமும்
8. எளிய முறையில் பிரசவ வழிமுறைகள்
9. தாய்மையில் பெண்
10.ஜனனத் தொழிற்சாலை
11.தாய்ப்பால் அவசியம்
12.குழந்தை கவனிப்பு
13.குழந்தையின் தூக்கம்
14.உணவு உண்ணும்போது
15.உடைகளைத் தேர்வு செய்வது
16.நோய் தாக்காமல் தடுப்பது
17.குழந்தை பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை
18.குழந்தையின் உற்சாகம்
19.குழந்தையின் குறும்பு
20.உண்மை பேசும் குழந்தை
21.குழந்தை வளர்ப்பு
நீபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிறகு
அதாவது, எல்லா பெருமைகளிலும் அறிய வேண்டியவற்றை அறியும் நல்ல மக்களைப் பெறுவது முதன்மையானது. மற்ற பெருமைகள் எல்லாம் அதன்பின் தான் என்கிறார் வள்ளுவர்.

அப்படி பெருமை படக்கூடிய மக்கட்பேறைத் தரும் பெண் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால்.
முற்காலத்தில் பெண் பருவவயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது. அக்கால கட்டத்தில் பிள்ளை பெரும் இயந்திரமாவே பெண்கள் இருந்தார்கள்,
அடுத்தடுத்து குழந்தை பெருவதால் ஆரோக்கியம் கெட்டு இயந்திரத்தனமாக வாழ்ந்தார்கள்.

பல எதிர்ப்புகள், பல போராட்டங்களுக்குப் பின் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, பாலிய திருமணம் ஒழிக்கப்பட்டது.
பெற்றோர் முடிவு செய்து பெண்ணும், ஆணும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே திருமணம் நடந்த காலம் இருந்தது.

அப்போது பெண்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்ட காலம். கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு பெண் கல்வி கட்டாயப்படுத்தி பெண்கள் கல்வி கற்று பின் தங்களுக்கு தகுந்த மாப்பிள்ளையா என யோசித்து முடிவு செய்யும் உரிமையை பெண்கள் எடு¢க்க ஆரம்பி¢த்தார்கள்.
இதில் ஆதரவும் இருந்தது. பெற்றோர் அமைவதைப் பொருத்தது. கல்லூரி, அலுவலகம் என பெண்கள் செல்லும் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மாற்றம் ஏற்பட்டாலும், குழந்தை பிறப்பு என்பது மாறாத ஒன்று.

ஆண்களை விட பெண்களுக்கு சிலசக்திகள் அதிகமாக இருக்கின்றன. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பத்து மாதம் முழுமை பெற்ற பிறகே பிறக்கிறார்கள்.
ஆண் குழந்தைகள் எட்டு, ஒன்பது மாதத்தில் கூட பிறந்து விடுகிறார்கள். பத்து மாதம் முழுமையாக இருப்பதில் கூட பொறுமை கிடையாது.

பெண்கள் பத்துமமாதம் பொறுமையாக காத்திருந்து பிறக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இயற்கை சில சக்திகளை அதிகப்படியாக கொடுத்திருக்கிறது.
பொறுமை, நிதானம் இயற்கையாக இருப்பதால் இவர்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுவது இல்லை. விரைவில் முடி நரைப்பதும் இல்லை. இது இறைவன் கொடுத்த, கூடுதலான சக்தி ஆகும். இளநரை சில பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.
Õதாயிற் சிறந்த கோவிலும் இல்லைÕ என்கிறோம். ஏன்? தாயை மட்டும் கோவிலில் உள்¢ள தெய்வத்திற்கு இணையாக சொல்கிறோம்.
கோவில் கருவறையில் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மகக்கள் நலனுக்காவே காக்கவல்லது. இறைவன் ஒவ்வொரு வீட்டிலும் கருணை கொண்டு வயிற்று கருவறையில், குழந்தையை சுமந்த பெண்ணுக்கு தாய்
என்ற பெருமையைக் கொடுத்து தெய்வமாக்கிவிட்டாள்.
ஆம், தாய், தந்தையரை மதிக்கும் பிள்ளைகள். தெய்வத்தை மதிக்கும் பிள்ளைகளாக கருதப்பட்டு அவர்களுக்கு நலனே கிடைக்கிறது இவ்வையகத்தில்.

தாயை வணங்குபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தந்தையை வணங்குபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்.
எனவே, வாழ்வில் ஞானமும், சகல சௌபாக்கியமும் கிடைத்து அமைதியான வாழ்வு அமைய தாய், தந்தையை மதித்து, பணிந்து எல்லா நலனுடனும் வாழ்வோம்.

இப்படி கிடைக்கும் தாய், தந்தையர்.

1.நீங்கள் கர்ப்பிணியா ?
எங்கோ பிறந்து ! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்கி உறவு கொள்ளச்செய்கிறார்கள் பெற்றோர்.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்“ என்ற உறவால் இணைகிறார்கள்.
அவர்கள் தாய், தந்தையரை மறந்து, உற்றார், உறவுகளை மறந்து. ஏன்? உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில் தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும். காலகட்டத்தில் ஆணின் விந்துகள், பெண்ணின் கருப்பையில்போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள்.

சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி...தள்ளி ஆகும். சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடியாது.
அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமாகிவிடும்.

முன்னோ அல்லது பின்னோ தேதியை சொல்லி வைக்க. டாக்டரும் அந்த தேதியை வைத்து டானிக், குழந்தை வளர்ச்சி இவைகளைப் பார்க்க முன்னுக்குப் பின் மாறி குழந்தை யின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாக்கும்.

“முதல்” பிரசவம் என்றால்... வளைகாப்பு போன்ற விழாக்கள் கொண்டாடும் போது கணக்கு சரியில்லாமல், முன்பே, தாய் வீட்டுக்குப் போனால் கணவரை பிரிந்து 
இருக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த சூழ்நிலையில் குழந்தை பிறக்க கஷ்டமாக இருக்கும்.
பின்னால் நாள் இருக்கிறது என நினைத்து வெளியூர், 

வெளியிடங்களுக்கு செல்லும் போது 

“குழந்தை” பேரூந்தில், ரயிலில் இப்படி பொது இடங்களில் பிரசவிக்க நேர்ந்து விடலாம்.
இவள் சேரன்போக்குவரத்தில் பிறந்தவள், இவன் திருவள்ளுவர் போக்குவரத்தில்பிறந்தவன் என்று சொல்லி சிரிக்கும் படி ஆகிவிடும். எனவே, மாதவிடாய் நின்ற தேதியை காலண்டரில் அல்லது டைரியில் குறித்து வைப்பது நல்லது.

2 கர்ப்ப காலத்தில் சில சமாச்சரங்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். இது குறித்து ஒவ்வொரு பெண்ணும், முழுமையாக, தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்கள் தன் கணவர் தன்னுடன் இருப்பதை¬யும், தன் மேல் அன்பு செலுத்துவதையும் மிகவும் விரும்புவாள்.
சில பெண்களுக்கு கணவனைக் கண்டாலே பிடிக்காமல் போகும். அது மிகச் சிலரே. கர்ப்பமுற்ற மூன்று, நான்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள் இருக்கும். அதனால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மயக்கமாக இருக்கிறது எழுந்தால் தலைசுற்றுகிறது. என படுத்தே கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும். எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வு போய், சுறுசுறுப்பு உண்டாகும்.

உங்கள் வேலைகளை வழக்கமாகச் செய்யலாம். வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர்வு அதிகரிக்கும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகும்.
எனவே, டாக்டரிடம் காட்டி வாந்தி வராமல் இருக்க “டானிக்“ வாங்கி சாப்பிட்டு, வாந்தி வருவதை குறைத்து சோர்வின்றி இருக்கலாம்.
கர்ப்பமுற்ற பெண் கணவனுடன் சந்தோஷமாக இருக்க தடையில்லை அவ்வாறு இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “ஆவேசமாக இருக்க கூடாது” என்பது தான் முக்கியம். கர்ப்பமுற்ற பெண் உருண்டு புரண்டு படுக்கக் கூடாது.

அவ்வாறு படுப்பதால் குழந்தையின் உடலில் “கொடி” சுற்றிக் கொள்ள ஏதுவாகும். குழந்தையின் சுவாசப் பகுதியில் கொடி சுற்றினால் குழந்தை வயிற்றுக்குள் இறப்பதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.
எனவே, கர்ப்பிணி பெண்கள் மிக மெதுவாக திரும்பி படுக்க வேண்டும். அல்லது எழுந்து திரும்பி படுக்க வேண்டும்.

அவ்வாறு மென்மையாக திரும்பி படுப்பதால் குழந்தை ஆரோக்கியாமாக வளரும். கர்ப்பபை நல்ல முறையில் இருக்கும் பெண்கள் பத்து மாதம் வரை (குழந்தை பிறக்கும் வரை) வேலையும் செய்யலாம்.கணவனுடன் சந்தோஷமாகவும் இருக்கலாம். அவ்வாறு இருப்பதால் பெண்ணின் ”ஆசானப் பகுதி சுருங்கி விரிவதால்” குழந்தை பிறக்கும் போது எந்தவித கஷ்டமும் இல்லாமல் நல்ல முறையில் குழந்தை பிறக்க ஏதுவாகும்.

3 மனதை பக்குவப் படுத்துவது
உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனம் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டியது அவசியம்.
வீணாக கவலைப் பட்டுக் கொண்டு. எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது புலப்பிக் கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும்.
எனவே, ‘’துன்பங்களை கண்டு துவண்டு விடாமல்’’ தைரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டும் இருந்தால், குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். இதில் ஐயம் இல்லை.

பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரின், நாராயணனின் கதையை கேட்டதால், குழந்தை பிரகலாதன் நாராயண பக்தனானன். இதில் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது என்பது தெரிகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்த    
ல், நல்ல இசைகளை கேட்டல். நல்ல புத்தகங்களை படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்
இருக்கும் போதே கருவிலே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
நமது மனநிலையில் பிரதிபிம்பம் தான் குழந்தை. இந்த குழந்தையை நல்ல குழந்தையாக பெற்றெடுக்க பாடல்களை பாடலாம். அவ்வாறு பாடும் போது நமது மனம் எல்லா பிரச்சனைகளையும் மறந்து பாடலில் ‘லயித்து’ மனம் ‘லேசாகி’ விடும்.

சுவாசமும் நல்ல முறையில் இருக்கும் . இதற்கு பாடகியாக இருக்க வேன்டும் என்று அவசியம் இல்லை. தன்னால் என்ன பாட முடியுமோ அதை கூச்சமில்லாமல் பாடினால் போதும்.
4 நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி
விலங்குகள், பறவைகள் கூடிவாழ, காலம், நேரம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு என நாம் நினைக் கலாம்.

நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும் என்ற காரணத்தால் பெரியவர்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள்.
ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
முதல், இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய். அப்போது குழந்தை சுக்லம், சுரோணிதம் ஒன்றாகி தடித்து மாமிசம் பெற்று திகழும்.

மூன்றாம் மாதத்தின் அதிபதி குரு. இம் மாதத்தில் கை, கால், சிரசு தோன்றும். நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும்.
ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்தமாதத்தில் மாமிசபாகத்தை வலுவடையத்தக்க தோல் உண்டாகும்.
ஆறாம் மாதத்தின் அதிபதி சனி. இம்மாத்தில் தோல் மீது உரோமங்கள் வளரஆரம்பிக்கும்.

ஏழாம் மாதத்தின் அதிபதி புதன். இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானேந்தின்¢யங்கள் உண்டாகும்.
எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடிவழியாக உண்டு திருப்தி அடையும். இம்மாதத்தின் அதிபதி குழந்தை கர்ப்பம் தரிக்கும் போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்தகிரக அதிபதி.
ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த கால கட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளியுலகை நோக்கியிருக்கும்.
பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும்.

5 என்ன குழந்தை வேண்டும்?

பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பீன்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்குள் அதிகரித்து ஆண் குழந்தை பிறக்கும்.
இதே சமயத்தில் கால்சியம், மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ, அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்ள வேண்டும். இறைஅருளாலும், உணவு பழக்கத்தாலும் நாம் விரும்பும் குழந்தை பிறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

6 கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க
கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க அதிக தூரம் பயணிப்பது கூடாது. அதிக பளுவான பொருட்களைத் தூக்குவதை நிறுத்தி விட வேண்டும். திருவிழா, சுற்றுலா செல்லுதல், கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும். நோய் ஏற்பட்டு நுண் கிருமிகள் கர்ப்பத்தை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு மலேரியா காய்ச்சல், வைரஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதிக கவனம் தேவை . கர்ப்பம் கலையும் சூழ்நிலை உண்டாகும்.

ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்பகாலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் அருந்துதல் புகைபிடித்தல் போதைப் பொருள் உட்கொள்ளல் போன்றவைகளாலும் கருகலையவும் வாய்ப்பு உள்ளது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று, நான்கு மாதங்கள் குழந்தை உருவாகும் காலம் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பது போன்ற செயல்களை தவிர்த்துவிட வேண்டும்.
கர்ப்பகாலத்தில் உடையில் இரத்தப் போக்கு கண்டால் உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். பிறகு காண்பிப்போம் என இருக்கக் கூடாது.

நமது அஜக்கிரதையால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து உருவாகும் சூழ்நிலை உன்டாகும். எனவே, ரத்தப்போக்கு சிறிதளவு கண்டாலும். உடனே டாக்டரிடம் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு முறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை பலகீனமாகி விடும். எனவே, உடனே கர்ப்பம் தரிப்பது கூடாது. குறைந்தது ஆறுமாத இடைவெளியாவது இருக்க வேண்டும்.
அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அடிக்கடி ‘ அபார்ஷன்’ ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பலகீனமாகிவிடும்.

ஒருமுறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனைப் படி நடந்து, நல்ல குழந்தையை பெற்று எடுப்போம் என்ற மன தைரியத்தில் இருந்தால் தான், குழந்தை நல்ல முறையில் பிறக்கும்.

7 கர்ப்பிணி பெண்களும் ; உணவுப் பழக்கமும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதால் குழந்தைக்கு வேண்டிய உணவையும் உட்கொள்ள வேண்டும்.
எவ்வாறு?

இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா?

இல்லை. சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம்.

சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும். அதை எப்படி வாங்கி சப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து. அது கீரை, ஈரல், முட்டை, போன்றவற்றில் உள்ளது.
மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள், பயறு வகைகள், பச்சை கொத்தமல்லி, புதினா, தேங்காய் போன்ற உணவுகள் சிறந்தது.
இவற்றால் மலச்சிக்கல் நீ¦ங்கும், உடல் வெப்பம் தனியும். இரத்தமம் சுத்தமடையும். கால் வீக்கம் தொல்லை தராது. சிறிது வெந்தயம், பேரீச்சம் பழம் சாப்பிட்டால் போதிய இரும்பு சத்து கிடைத்துவிடும். மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம் பெற வேண்டும். குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பெரிதும் வேண்டியுள்ளது. மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது.

சைவ உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய் சூப் போன்றவற்றை சாப்பிடலாம். 25 மில்லி பாலில் இருந்து, 30 கிராம் வெண்ணெயில் இருந்து 75 மி.கி வைட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது.
கடலை, உளுந்து, பயிறு வகைகள், கீரை, பழம், இவற்றை சாப்பிட வேன்டிய அளவு சத்து குழந்தைக்கு கிடைக்கும்.
மேலும், இவ்வகை உணவுகளும் வாங்க இயலாத பெண்கள் பலர் வெற்றிலையை போட்டு வாயில், அடைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி உள்ள பெண்களுக்கு எவ்வாறு ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது நம்மில் பலர் நினைக்கலாம்.
வெற்றிலை, பாக்குபோடுபவர்கள் சுண்ணாம்பு சேர்த்து போடுகிறார்கள். அந்த சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளதால். அவர்கள் தேவையான அளவு பால் சாப்பிட்டதற்கு சமமான சத்து கிடைத்து விடுகிறது.

வழக்கமாக நாம் சாப்பிடும் சோறு, சப்பாத்தி, காய்கறிகளிலே தேவையான சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒழுங்காக சாப்பிட்டாலே குழந்தைக்கு வேண்டிய புரோட்டீன், வைட்டமின், தாது சத்துக்கள் கிடைத்துவிடும்.
60 மி.கிராம் இரும்புச்சத்தும், 500மி.கிராம் போலிக் ஆசிட் சத்தும், 2500 கலோரி¢ புரோட்டீனும் தேவைப்படுகிறது. நமது உணவில் 100 கிராம் புரோட்டீன் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் 5-6 கிராம் புரோட்டீன் உணவு அதிகம் சாப்பிட வேண்டும் என்று உலக ஆரோக்கிய அமைப்பு கூறுகிறது.
புரோட்டீன் குறைவு ஏற்படும் போது குழந்தையின் தோல், நகம், முடி போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி குறைவு உடல் ஊனங்கள் போன்றவற்றிற்க்கும் புரோட்டீன் குறைவே காரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடக் கூடாது.

கொழுப்பு மிகுந்த உணவை சப்பிடுவதால் ‘கொலஸ்ட்ரால்’ அளவு கூடிவிடும். ‘பால்’ அதன் மூலம் தயாரிக்கும் கேக், பிஸ்கட்டுகள், இனிப்பு, பலகாரங்கள் அதிக அளவு சாப்பிட்டாலும் ‘கொலஸ்ட்ரால்’ அதிகரிக்கும். குழந்தை பிறக்க கடினமாகிவிடும். எனவே, தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

நார்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும், பூசணிக்காய், சுரக்காய் போன்ற காய்கள் சப்பிடுவதால் (‘யூரின்’) சிறுநீர் நன்றாகப் போகும். ‘கால்’ வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

மேலும், பார்லி அரிசியை’ தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறிய பின் தண்ணீரை குடித்துவர சிறுநீர் நன்றாகப் போகும். கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ‘மலச்சிக்கல்’ உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினமாக இருக்கும். எனவே, தினமும் இரவில் பழம் சப்பிடுவது நல்லது.
அல்லது சிறிதளவு சீரகத்தை வறுத்து எடுத்து, ஒரு ‘டம்ளர்’ அளவு தண்ணீரில் ஊற்றி வேகவிட வேண்டும். ‘அரைடம்ளர்’ அளவு தண்ணீர் வற்றிய பின் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவு, வெண்ணெய் போட்டு கலக்கி குடித்து வர ‘மலச்சிக்கல்’ ஏற்படாது.

பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சில பெண்கள் அப்பழங்களை சாப்பிட்டால் எதுவும் ஆகாது. சில பெண்கள் சாப்பிட்டபின் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே, முடிந்த அளவு அவற்றை தவிர்ப்பது நலம்.
கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது. உடனே படுப்பதால் உணவு ஜீரணிக்காமல், ‘வாந்தி’ வர ஏதுவாகிவிடும். சிறிது நேரம் நடந்து பின் படுக்க செல்வது நலம்.

8 எளிய முறையில் பிரசவ வழி முறைகள்

கர்ப்பிணி பெண்கள் உணவு உட்கொள்ளும் போதும், பிற திண்பண்டங்கள் உண்ணும் போதும், யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது.
குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும்.
சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள்.

அவ்வாறு உட்கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். குழந்தையின் மனநிலையும் இதே போன்று தான் வளர்ச்சி அடையும்.
மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தை கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் சோம்பலுடன் அப்படியே அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு. அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராதே எனச்சொல்வது உண்டு.
இவர்களுக்கு என்ன வேலை! அங்கே உட்காராதே! இங்கே உட்காராதே என கூறுவதே வேலை என அவர்கள் சொல் கேட்பதில்லை. அவ்வாறு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதால் குழந்தை அசைவதில் சிரமம் ஏற்படும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பதால் உஷ்ணம் அதிகரித்து ‘ஆசன’ வாயை இறுக்கம் அடையச் செய்யும். அவ்வாறு இறுக்கம் அடைந்தால் குழந்தை பிறக்க கடினமாகும்.
முடிந்தவரை ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நலம் பயக்கும். எவ்வளவு தூரம் நடக்க முடியுமே அவ்வளவு தூரம் நடந்து வருவது நல்லது.

நல்ல மன நிலையில் இருப்பது மனதை உற்சாகமான நிலையில் வைத்திருந்தால் குழந்தை பிறப்பது எளிதாகும்.
ஐந்து மாதத்தில் இருந்து இரவுப் படுக்கச் செல்வதற்கு முன் (அரைப் பக்கெட்) அரைவாளி சுடுதண்ணீர் வெதுவெதுப்பாக வைத்து இடுப்பில் இருந்து கால் வரை ஊற்றி வர, இரவில் நல்ல தூக்கம் வரும். கை, கால்வலி, வீக்கம் போன்றவை வராமல் நிம்மதியாக இருக்கலாம்.
பிரசவத்திற்கு முன் சூட்டு வலி¢ வந்து கொண்டு இருக்கும். பிள்ளை பிறப்பதற்கான வலியா? எனத் தெரியாமல் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலையாமல் இருக் இவ்விதம் செய்யலாம்.

வெந்தயத்தை வடச்சட்டியில் போட்டு வறுத்து பொடி செய்து அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும். 
சூட்டுவலி என்றால் வெந்தயப் பொடி சாப்பிட்ட சிறிது நேரத்தில் வலி குறைந்து விடும். (பிள்ளை வலி) பிரசவ வலி என்றால் வலி அதிகரித்து விடும். உடனே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். குழந்தையும் உடனே பிறந்துவிடும்.

கணவனுடன் சேர்ந்து இருப்பது நலம் பயக்கும். குழந்தை பிறக்கும் வரை நீங்கள் வேலை செய்வது பிரச்சவத்திற்கு எளிதாகும். குழந்தை பிறந்த பின் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்த வீட்டில் உடலை அலட்டிக் கொண்டால் உடல் கெட்டுப் போகும்.
குழந்தை பிறந்த முப்பது நாட்களுக்குள், எல்லா உணவும் அதவாது, மா, பலா, கிழங்கு, பயர், காய்கறி என எல்லாம் சிறிது, சிறிதாக சாப்பிட்டு குழந்தை காதில் ஊதிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் தாய்,சேய் இருவருக்கும் எது சாப்பிட்டாலும், எதுவும் செய்யாது. எளிதில் சீரணமாகிவிடும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய், சேய் இருவருக்கும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு இவைகள் வராமல் தடுக்கும். எளிதில் சீரணமாகும்.
குழந்தை பிறந்த வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதால் அதிகம் சாப்பிட்டு குண்டாகிவிட்டால் அழகு போய் விடும்.
குழந்தை பிறந்த பின் என் அழகே போய்விட்டது என வருத்தப்
Photo: மகப்பேறும் மருத்துவமும் :-
+++++++++++++++++++++++

1. நீங்கள் கர்ப்பிணியா!
2. கர்ப்ப காலத்தில் சில சமாச்சாரங்கள் 
3. மனதை பக்குவப்படுத்துவது
4. நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி
5. என்ன குழந்தை வேண்டும்?
6. கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க
7. கர்ப்பிணி பெண்களும், உணவுப் பழக்கமும்
8. எளிய முறையில் பிரசவ வழிமுறைகள்
9. தாய்மையில் பெண்
10.ஜனனத் தொழிற்சாலை
11.தாய்ப்பால் அவசியம்
12.குழந்தை கவனிப்பு
13.குழந்தையின் தூக்கம்
14.உணவு உண்ணும்போது
15.உடைகளைத் தேர்வு செய்வது
16.நோய் தாக்காமல் தடுப்பது
17.குழந்தை பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை
18.குழந்தையின் உற்சாகம்
19.குழந்தையின் குறும்பு
20.உண்மை பேசும் குழந்தை
21.குழந்தை வளர்ப்பு
நீபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிறகு
அதாவது, எல்லா பெருமைகளிலும் அறிய வேண்டியவற்றை அறியும் நல்ல மக்களைப் பெறுவது முதன்மையானது. மற்ற பெருமைகள் எல்லாம் அதன்பின் தான் என்கிறார் வள்ளுவர்.

அப்படி பெருமை படக்கூடிய மக்கட்பேறைத் தரும் பெண் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால்.
முற்காலத்தில் பெண் பருவவயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது. அக்கால கட்டத்தில் பிள்ளை பெரும் இயந்திரமாவே பெண்கள் இருந்தார்கள்,
அடுத்தடுத்து குழந்தை பெருவதால் ஆரோக்கியம் கெட்டு இயந்திரத்தனமாக வாழ்ந்தார்கள்.

பல எதிர்ப்புகள், பல போராட்டங்களுக்குப் பின் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, பாலிய திருமணம் ஒழிக்கப்பட்டது.
பெற்றோர் முடிவு செய்து பெண்ணும், ஆணும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே திருமணம் நடந்த காலம் இருந்தது.

அப்போது பெண்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்ட காலம். கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு பெண் கல்வி கட்டாயப்படுத்தி பெண்கள் கல்வி கற்று பின் தங்களுக்கு தகுந்த மாப்பிள்ளையா என யோசித்து முடிவு செய்யும் உரிமையை பெண்கள் எடு¢க்க ஆரம்பி¢த்தார்கள்.
இதில் ஆதரவும் இருந்தது. பெற்றோர் அமைவதைப் பொருத்தது. கல்லூரி, அலுவலகம் என பெண்கள் செல்லும் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மாற்றம் ஏற்பட்டாலும், குழந்தை பிறப்பு என்பது மாறாத ஒன்று.

ஆண்களை விட பெண்களுக்கு சிலசக்திகள் அதிகமாக இருக்கின்றன. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பத்து மாதம் முழுமை பெற்ற பிறகே பிறக்கிறார்கள்.
ஆண் குழந்தைகள் எட்டு, ஒன்பது மாதத்தில் கூட பிறந்து விடுகிறார்கள். பத்து மாதம் முழுமையாக இருப்பதில் கூட பொறுமை கிடையாது.

பெண்கள் பத்துமமாதம் பொறுமையாக காத்திருந்து பிறக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இயற்கை சில சக்திகளை அதிகப்படியாக கொடுத்திருக்கிறது.
பொறுமை, நிதானம் இயற்கையாக இருப்பதால் இவர்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுவது இல்லை. விரைவில் முடி நரைப்பதும் இல்லை. இது இறைவன் கொடுத்த, கூடுதலான சக்தி ஆகும். இளநரை சில பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.
Õதாயிற் சிறந்த கோவிலும் இல்லைÕ என்கிறோம். ஏன்? தாயை மட்டும் கோவிலில் உள்¢ள தெய்வத்திற்கு இணையாக சொல்கிறோம்.
கோவில் கருவறையில் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மகக்கள் நலனுக்காவே காக்கவல்லது. இறைவன் ஒவ்வொரு வீட்டிலும் கருணை கொண்டு வயிற்று கருவறையில், குழந்தையை சுமந்த பெண்ணுக்கு தாய்
என்ற பெருமையைக் கொடுத்து தெய்வமாக்கிவிட்டாள்.
ஆம், தாய், தந்தையரை மதிக்கும் பிள்ளைகள். தெய்வத்தை மதிக்கும் பிள்ளைகளாக கருதப்பட்டு அவர்களுக்கு நலனே கிடைக்கிறது இவ்வையகத்தில்.

தாயை வணங்குபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தந்தையை வணங்குபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்.
எனவே, வாழ்வில் ஞானமும், சகல சௌபாக்கியமும் கிடைத்து அமைதியான வாழ்வு அமைய தாய், தந்தையை மதித்து, பணிந்து எல்லா நலனுடனும் வாழ்வோம்.

இப்படி கிடைக்கும் தாய், தந்தையர்.

1.நீங்கள் கர்ப்பிணியா ?
எங்கோ பிறந்து ! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்கி உறவு கொள்ளச்செய்கிறார்கள் பெற்றோர்.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்“ என்ற உறவால் இணைகிறார்கள்.
அவர்கள் தாய், தந்தையரை மறந்து, உற்றார், உறவுகளை மறந்து. ஏன்? உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில் தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும். காலகட்டத்தில் ஆணின் விந்துகள், பெண்ணின் கருப்பையில்போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள்.

சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி...தள்ளி ஆகும். சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடியாது.
அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமாகிவிடும்.

முன்னோ அல்லது பின்னோ தேதியை சொல்லி வைக்க. டாக்டரும் அந்த தேதியை வைத்து டானிக், குழந்தை வளர்ச்சி இவைகளைப் பார்க்க முன்னுக்குப் பின் மாறி குழந்தை யின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாக்கும்.

“முதல்” பிரசவம் என்றால்... வளைகாப்பு போன்ற விழாக்கள் கொண்டாடும் போது கணக்கு சரியில்லாமல், முன்பே, தாய் வீட்டுக்குப் போனால் கணவரை பிரிந்து 
இருக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த சூழ்நிலையில் குழந்தை பிறக்க கஷ்டமாக இருக்கும்.
பின்னால் நாள் இருக்கிறது என நினைத்து வெளியூர், 

வெளியிடங்களுக்கு செல்லும் போது 

“குழந்தை” பேரூந்தில், ரயிலில் இப்படி பொது இடங்களில் பிரசவிக்க நேர்ந்து விடலாம்.
இவள் சேரன்போக்குவரத்தில் பிறந்தவள், இவன் திருவள்ளுவர் போக்குவரத்தில்பிறந்தவன் என்று சொல்லி சிரிக்கும் படி ஆகிவிடும். எனவே, மாதவிடாய் நின்ற தேதியை காலண்டரில் அல்லது டைரியில் குறித்து வைப்பது நல்லது.

2 கர்ப்ப காலத்தில் சில சமாச்சரங்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். இது குறித்து ஒவ்வொரு பெண்ணும், முழுமையாக, தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்கள் தன் கணவர் தன்னுடன் இருப்பதை¬யும், தன் மேல் அன்பு செலுத்துவதையும் மிகவும் விரும்புவாள்.
சில பெண்களுக்கு கணவனைக் கண்டாலே பிடிக்காமல் போகும். அது மிகச் சிலரே. கர்ப்பமுற்ற மூன்று, நான்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள் இருக்கும். அதனால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மயக்கமாக இருக்கிறது எழுந்தால் தலைசுற்றுகிறது. என படுத்தே கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும். எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வு போய், சுறுசுறுப்பு உண்டாகும்.

உங்கள் வேலைகளை வழக்கமாகச் செய்யலாம். வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர்வு அதிகரிக்கும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகும்.
எனவே, டாக்டரிடம் காட்டி வாந்தி வராமல் இருக்க “டானிக்“ வாங்கி சாப்பிட்டு, வாந்தி வருவதை குறைத்து சோர்வின்றி இருக்கலாம்.
கர்ப்பமுற்ற பெண் கணவனுடன் சந்தோஷமாக இருக்க தடையில்லை அவ்வாறு இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “ஆவேசமாக இருக்க கூடாது” என்பது தான் முக்கியம். கர்ப்பமுற்ற பெண் உருண்டு புரண்டு படுக்கக் கூடாது.

அவ்வாறு படுப்பதால் குழந்தையின் உடலில் “கொடி” சுற்றிக் கொள்ள ஏதுவாகும். குழந்தையின் சுவாசப் பகுதியில் கொடி சுற்றினால் குழந்தை வயிற்றுக்குள் இறப்பதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.
எனவே, கர்ப்பிணி பெண்கள் மிக மெதுவாக திரும்பி படுக்க வேண்டும். அல்லது எழுந்து திரும்பி படுக்க வேண்டும்.

அவ்வாறு மென்மையாக திரும்பி படுப்பதால் குழந்தை ஆரோக்கியாமாக வளரும். கர்ப்பபை நல்ல முறையில் இருக்கும் பெண்கள் பத்து மாதம் வரை (குழந்தை பிறக்கும் வரை) வேலையும் செய்யலாம்.கணவனுடன் சந்தோஷமாகவும் இருக்கலாம். அவ்வாறு இருப்பதால் பெண்ணின் ”ஆசானப் பகுதி சுருங்கி விரிவதால்” குழந்தை பிறக்கும் போது எந்தவித கஷ்டமும் இல்லாமல் நல்ல முறையில் குழந்தை பிறக்க ஏதுவாகும்.

3 மனதை பக்குவப் படுத்துவது
உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனம் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டியது அவசியம்.
வீணாக கவலைப் பட்டுக் கொண்டு. எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது புலப்பிக் கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும்.
எனவே, ‘’துன்பங்களை கண்டு துவண்டு விடாமல்’’ தைரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டும் இருந்தால், குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். இதில் ஐயம் இல்லை.

பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரின், நாராயணனின் கதையை கேட்டதால், குழந்தை பிரகலாதன் நாராயண பக்தனானன். இதில் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது என்பது தெரிகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளை கேட்டல். நல்ல புத்தகங்களை படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்
இருக்கும் போதே கருவிலே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
நமது மனநிலையில் பிரதிபிம்பம் தான் குழந்தை. இந்த குழந்தையை நல்ல குழந்தையாக பெற்றெடுக்க பாடல்களை பாடலாம். அவ்வாறு பாடும் போது நமது மனம் எல்லா பிரச்சனைகளையும் மறந்து பாடலில் ‘லயித்து’ மனம் ‘லேசாகி’ விடும்.

சுவாசமும் நல்ல முறையில் இருக்கும் . இதற்கு பாடகியாக இருக்க வேன்டும் என்று அவசியம் இல்லை. தன்னால் என்ன பாட முடியுமோ அதை கூச்சமில்லாமல் பாடினால் போதும்.
4 நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி
விலங்குகள், பறவைகள் கூடிவாழ, காலம், நேரம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு என நாம் நினைக் கலாம்.

நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும் என்ற காரணத்தால் பெரியவர்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள்.
ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
முதல், இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய். அப்போது குழந்தை சுக்லம், சுரோணிதம் ஒன்றாகி தடித்து மாமிசம் பெற்று திகழும்.

மூன்றாம் மாதத்தின் அதிபதி குரு. இம் மாதத்தில் கை, கால், சிரசு தோன்றும். நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும்.
ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்தமாதத்தில் மாமிசபாகத்தை வலுவடையத்தக்க தோல் உண்டாகும்.
ஆறாம் மாதத்தின் அதிபதி சனி. இம்மாத்தில் தோல் மீது உரோமங்கள் வளரஆரம்பிக்கும்.

ஏழாம் மாதத்தின் அதிபதி புதன். இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானேந்தின்¢யங்கள் உண்டாகும்.
எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடிவழியாக உண்டு திருப்தி அடையும். இம்மாதத்தின் அதிபதி குழந்தை கர்ப்பம் தரிக்கும் போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்தகிரக அதிபதி.
ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த கால கட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளியுலகை நோக்கியிருக்கும்.
பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும்.

5 என்ன குழந்தை வேண்டும்?

பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பீன்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்குள் அதிகரித்து ஆண் குழந்தை பிறக்கும்.
இதே சமயத்தில் கால்சியம், மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ, அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்ள வேண்டும். இறைஅருளாலும், உணவு பழக்கத்தாலும் நாம் விரும்பும் குழந்தை பிறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

6 கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க
கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க அதிக தூரம் பயணிப்பது கூடாது. அதிக பளுவான பொருட்களைத் தூக்குவதை நிறுத்தி விட வேண்டும். திருவிழா, சுற்றுலா செல்லுதல், கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும். நோய் ஏற்பட்டு நுண் கிருமிகள் கர்ப்பத்தை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு மலேரியா காய்ச்சல், வைரஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதிக கவனம் தேவை . கர்ப்பம் கலையும் சூழ்நிலை உண்டாகும்.

ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்பகாலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் அருந்துதல் புகைபிடித்தல் போதைப் பொருள் உட்கொள்ளல் போன்றவைகளாலும் கருகலையவும் வாய்ப்பு உள்ளது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று, நான்கு மாதங்கள் குழந்தை உருவாகும் காலம் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பது போன்ற செயல்களை தவிர்த்துவிட வேண்டும்.
கர்ப்பகாலத்தில் உடையில் இரத்தப் போக்கு கண்டால் உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். பிறகு காண்பிப்போம் என இருக்கக் கூடாது.

நமது அஜக்கிரதையால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து உருவாகும் சூழ்நிலை உன்டாகும். எனவே, ரத்தப்போக்கு சிறிதளவு கண்டாலும். உடனே டாக்டரிடம் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு முறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை பலகீனமாகி விடும். எனவே, உடனே கர்ப்பம் தரிப்பது கூடாது. குறைந்தது ஆறுமாத இடைவெளியாவது இருக்க வேண்டும்.
அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அடிக்கடி ‘ அபார்ஷன்’ ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பலகீனமாகிவிடும்.

ஒருமுறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனைப் படி நடந்து, நல்ல குழந்தையை பெற்று எடுப்போம் என்ற மன தைரியத்தில் இருந்தால் தான், குழந்தை நல்ல முறையில் பிறக்கும்.

7 கர்ப்பிணி பெண்களும் ; உணவுப் பழக்கமும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதால் குழந்தைக்கு வேண்டிய உணவையும் உட்கொள்ள வேண்டும்.
எவ்வாறு?

இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா?

இல்லை. சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம்.

சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும். அதை எப்படி வாங்கி சப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து. அது கீரை, ஈரல், முட்டை, போன்றவற்றில் உள்ளது.
மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள், பயறு வகைகள், பச்சை கொத்தமல்லி, புதினா, தேங்காய் போன்ற உணவுகள் சிறந்தது.
இவற்றால் மலச்சிக்கல் நீ¦ங்கும், உடல் வெப்பம் தனியும். இரத்தமம் சுத்தமடையும். கால் வீக்கம் தொல்லை தராது. சிறிது வெந்தயம், பேரீச்சம் பழம் சாப்பிட்டால் போதிய இரும்பு சத்து கிடைத்துவிடும். மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம் பெற வேண்டும். குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பெரிதும் வேண்டியுள்ளது. மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது.

சைவ உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய் சூப் போன்றவற்றை சாப்பிடலாம். 25 மில்லி பாலில் இருந்து, 30 கிராம் வெண்ணெயில் இருந்து 75 மி.கி வைட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது.
கடலை, உளுந்து, பயிறு வகைகள், கீரை, பழம், இவற்றை சாப்பிட வேன்டிய அளவு சத்து குழந்தைக்கு கிடைக்கும்.
மேலும், இவ்வகை உணவுகளும் வாங்க இயலாத பெண்கள் பலர் வெற்றிலையை போட்டு வாயில், அடைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி உள்ள பெண்களுக்கு எவ்வாறு ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது நம்மில் பலர் நினைக்கலாம்.
வெற்றிலை, பாக்குபோடுபவர்கள் சுண்ணாம்பு சேர்த்து போடுகிறார்கள். அந்த சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளதால். அவர்கள் தேவையான அளவு பால் சாப்பிட்டதற்கு சமமான சத்து கிடைத்து விடுகிறது.

வழக்கமாக நாம் சாப்பிடும் சோறு, சப்பாத்தி, காய்கறிகளிலே தேவையான சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒழுங்காக சாப்பிட்டாலே குழந்தைக்கு வேண்டிய புரோட்டீன், வைட்டமின், தாது சத்துக்கள் கிடைத்துவிடும்.
60 மி.கிராம் இரும்புச்சத்தும், 500மி.கிராம் போலிக் ஆசிட் சத்தும், 2500 கலோரி¢ புரோட்டீனும் தேவைப்படுகிறது. நமது உணவில் 100 கிராம் புரோட்டீன் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் 5-6 கிராம் புரோட்டீன் உணவு அதிகம் சாப்பிட வேண்டும் என்று உலக ஆரோக்கிய அமைப்பு கூறுகிறது.
புரோட்டீன் குறைவு ஏற்படும் போது குழந்தையின் தோல், நகம், முடி போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி குறைவு உடல் ஊனங்கள் போன்றவற்றிற்க்கும் புரோட்டீன் குறைவே காரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடக் கூடாது.

கொழுப்பு மிகுந்த உணவை சப்பிடுவதால் ‘கொலஸ்ட்ரால்’ அளவு கூடிவிடும். ‘பால்’ அதன் மூலம் தயாரிக்கும் கேக், பிஸ்கட்டுகள், இனிப்பு, பலகாரங்கள் அதிக அளவு சாப்பிட்டாலும் ‘கொலஸ்ட்ரால்’ அதிகரிக்கும். குழந்தை பிறக்க கடினமாகிவிடும். எனவே, தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

நார்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும், பூசணிக்காய், சுரக்காய் போன்ற காய்கள் சப்பிடுவதால் (‘யூரின்’) சிறுநீர் நன்றாகப் போகும். ‘கால்’ வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

மேலும், பார்லி அரிசியை’ தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறிய பின் தண்ணீரை குடித்துவர சிறுநீர் நன்றாகப் போகும். கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ‘மலச்சிக்கல்’ உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினமாக இருக்கும். எனவே, தினமும் இரவில் பழம் சப்பிடுவது நல்லது.
அல்லது சிறிதளவு சீரகத்தை வறுத்து எடுத்து, ஒரு ‘டம்ளர்’ அளவு தண்ணீரில் ஊற்றி வேகவிட வேண்டும். ‘அரைடம்ளர்’ அளவு தண்ணீர் வற்றிய பின் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவு, வெண்ணெய் போட்டு கலக்கி குடித்து வர ‘மலச்சிக்கல்’ ஏற்படாது.

பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சில பெண்கள் அப்பழங்களை சாப்பிட்டால் எதுவும் ஆகாது. சில பெண்கள் சாப்பிட்டபின் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே, முடிந்த அளவு அவற்றை தவிர்ப்பது நலம்.
கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது. உடனே படுப்பதால் உணவு ஜீரணிக்காமல், ‘வாந்தி’ வர ஏதுவாகிவிடும். சிறிது நேரம் நடந்து பின் படுக்க செல்வது நலம்.

8 எளிய முறையில் பிரசவ வழி முறைகள்

கர்ப்பிணி பெண்கள் உணவு உட்கொள்ளும் போதும், பிற திண்பண்டங்கள் உண்ணும் போதும், யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது.
குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும்.
சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள்.

அவ்வாறு உட்கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். குழந்தையின் மனநிலையும் இதே போன்று தான் வளர்ச்சி அடையும்.
மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தை கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் சோம்பலுடன் அப்படியே அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு. அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராதே எனச்சொல்வது உண்டு.
இவர்களுக்கு என்ன வேலை! அங்கே உட்காராதே! இங்கே உட்காராதே என கூறுவதே வேலை என அவர்கள் சொல் கேட்பதில்லை. அவ்வாறு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதால் குழந்தை அசைவதில் சிரமம் ஏற்படும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பதால் உஷ்ணம் அதிகரித்து ‘ஆசன’ வாயை இறுக்கம் அடையச் செய்யும். அவ்வாறு இறுக்கம் அடைந்தால் குழந்தை பிறக்க கடினமாகும்.
முடிந்தவரை ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நலம் பயக்கும். எவ்வளவு தூரம் நடக்க முடியுமே அவ்வளவு தூரம் நடந்து வருவது நல்லது.

நல்ல மன நிலையில் இருப்பது மனதை உற்சாகமான நிலையில் வைத்திருந்தால் குழந்தை பிறப்பது எளிதாகும்.
ஐந்து மாதத்தில் இருந்து இரவுப் படுக்கச் செல்வதற்கு முன் (அரைப் பக்கெட்) அரைவாளி சுடுதண்ணீர் வெதுவெதுப்பாக வைத்து இடுப்பில் இருந்து கால் வரை ஊற்றி வர, இரவில் நல்ல தூக்கம் வரும். கை, கால்வலி, வீக்கம் போன்றவை வராமல் நிம்மதியாக இருக்கலாம்.
பிரசவத்திற்கு முன் சூட்டு வலி¢ வந்து கொண்டு இருக்கும். பிள்ளை பிறப்பதற்கான வலியா? எனத் தெரியாமல் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலையாமல் இருக் இவ்விதம் செய்யலாம்.

வெந்தயத்தை வடச்சட்டியில் போட்டு வறுத்து பொடி செய்து அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும். 
சூட்டுவலி என்றால் வெந்தயப் பொடி சாப்பிட்ட சிறிது நேரத்தில் வலி குறைந்து விடும். (பிள்ளை வலி) பிரசவ வலி என்றால் வலி அதிகரித்து விடும். உடனே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். குழந்தையும் உடனே பிறந்துவிடும்.

கணவனுடன் சேர்ந்து இருப்பது நலம் பயக்கும். குழந்தை பிறக்கும் வரை நீங்கள் வேலை செய்வது பிரச்சவத்திற்கு எளிதாகும். குழந்தை பிறந்த பின் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்த வீட்டில் உடலை அலட்டிக் கொண்டால் உடல் கெட்டுப் போகும்.
குழந்தை பிறந்த முப்பது நாட்களுக்குள், எல்லா உணவும் அதவாது, மா, பலா, கிழங்கு, பயர், காய்கறி என எல்லாம் சிறிது, சிறிதாக சாப்பிட்டு குழந்தை காதில் ஊதிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் தாய்,சேய் இருவருக்கும் எது சாப்பிட்டாலும், எதுவும் செய்யாது. எளிதில் சீரணமாகிவிடும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய், சேய் இருவருக்கும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு இவைகள் வராமல் தடுக்கும். எளிதில் சீரணமாகும்.
குழந்தை பிறந்த வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதால் அதிகம் சாப்பிட்டு குண்டாகிவிட்டால் அழகு போய் விடும்.
குழந்தை பிறந்த பின் என் அழகே போய்விட்டது என வருத்தப்